வேடுவன் – இணையத்தொடர் விமர்சனம்

வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். ரகசிய போலீஸ் அதிகாரியான கண்ணா ரவிக்கு காவல்துறையின் என்கவுண்டர் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களை வேட்டையாடுவது தான் அசைன்மென்ட். அதன்படி குறிப்பிட்ட ஏரியாவை தன் கைவசம் வைத்திருந்த ஒரு தாதாவை மாறுவேடத்தில் வந்து போட்டுத் தள்ளுகிறார். இந்தப் பட்டியலில் காவல்துறையால் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த தாதா ஒருவனை என்கவுண்டர் செய்யும் அடுத்த அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது ஊருக்குள் பெரிய மனிதனாக, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் மாமனிதனாக அதே நேரம் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் சஞ்சீவை காலி பண்ண அவர் இருக்கும் ஊருக்கு வருகிறார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே அந்த தாதாவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார். அப்போதுதான் அந்த தாதாவின் மனைவி தன் கல்லூரிக்கால தோழியின் கணவன் என்பது தெரிய வர… இப்போது நம்…

Read More

மருதம் – திரைவிமர்சனம்

விவசாயிகள் நிலத்தை அவர்களுக்கே தெரியாமல் ஆட்டையை போடும் வங்கிகள் தான் கதைக்களம். ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, மகன் என மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் விவசாயி கன்னியப்பன். நல்ல மகசூல் போதிய வருமானம் என்று போய்க் கொண்டிருக்கும் சந்தோஷ வாழ்க்கையில் ஓர் பேரிடி விழுகிறது. வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது.விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, நியாயம் நஹி. இது குறித்து காவல்துறையில் அவர் கொடுக்கும் புகாரும் கண்டுகொள்ளப்படாமல் போக… இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணரும் கன்னியப்பன், மோசடியின் பின்னணியை கண்டறிந்து, நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ். நாயகனாக நடித்திருக்கும் விதார்த், வழக்கும் போல் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.…

Read More

நடிகர் விக்ரம் பிரபு &  L.K.அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். நடிகர் விக்ரம் பிரபு…

Read More

இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில் “தேசிய தலைவர்”

*SSR சத்யா பிக்சர்ஸ்* வழ ங்கும் *இசைஞானி இளையராஜா* அவர்கள் இசை மழையில் SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் *தேசிய தலைவர்* இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..*கலைப்புலி எஸ்.தாணு* அவர்கள் முன்னிலையில் *மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா* அவர்கள் குறுந்தகடை வெளியிட *இளையதிலகம் பிரபு* அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்… தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் *ஜே.எம்.பஷிர்* தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது… இயக்கம் – *ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.* சிறப்பு விருந்தினராக திரு V. பழனிவேல் திரு.மூர்த்தி தேவர், திரு ராஜ் மோகன், திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் கலந்து…

Read More

இறுதி முயற்சி

— திரை விமர்சனம் கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்து நொடித்துப் போனவர் ரஞ்சித். கடையை விருத்தி செய்வதற்காக கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்கிறது கந்துவட்டி கும்பல். அதற்காக வீட்டுக்கே வந்து அந்த கும்பல் மிரட்டவும் செய்கிறார்கள். மேலும் மேலும் வட்டி பணம் கட்டி மேற்கொண்டு முதல் இல்லாமல் கடையை மூட வேண்டியதாகிறது. இதன் பிறகு கந்து வட்டி கும்பல் தொல்லை இன்னும் அதிகமாகிறது. அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறார்கள். இதில் உச்சகட்டமாக வட்டிக்கீடாக மனைவியையும் மகளையும் கடத்தி போய் விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு கடன் கேட்டு போகிற…

Read More

தமிழ் சினிமாவை இன்னொரு ஸ்டெப் நகர்த்தும் முயற்சியில் சந்தோஷ் நம்பிராஜன்.

கருப்பு வெள்ளை சினிமா, கலர் சினிமா டிஜிட்டல் சினிமா, ஏஐ சினிமா என செலுலாய்டு உலகம் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் “அகண்டன்” தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது. உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான “டூலெட்”. இந்த திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். அதன் பின் ” வட்டார வழக்கு”, “உழைப்பாளர் தினம்” என இவர் நடித்த படங்கள் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவை. இவர் நடிப்பில் அடுத்த விரைவில் வெளியாகும் “ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்” இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் கலந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது. சொட்ட வைக்கும் காதல் ரசத்தோடு “காதலிசம்” திரைப்படமும் இணையத்தில் லிவிங் டுகெதர் ? கல்யாணமா? எது வருங்கால தலைமுறைக்கு சிறந்தது என்று பேசி…

Read More

இறுதி முயற்சி – திரை விமர்சனம்

கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்து நொடித்துப் போனவர் ரஞ்சித். கடையை விருத்தி செய்வதற்காக கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்கிறது கந்துவட்டி கும்பல். அதற்காக வீட்டுக்கே வந்து அந்த கும்பல் மிரட்டவும் செய்கிறார்கள். மேலும் மேலும் வட்டி பணம் கட்டி மேற்கொண்டு முதல் இல்லாமல் கடையை மூட வேண்டியதாகிறது. இதன் பிறகு கந்து வட்டி கும்பல் தொல்லை இன்னும் அதிகமாகிறது. அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறார்கள். இதில் உச்சகட்டமாக வட்டிக்கீடாக மனைவியையும் மகளையும் கடத்தி போய் விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு கடன் கேட்டு போகிற இடமெல்லாம் அவமானமே மிஞ்சுகிறது.…

Read More

ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா மற்றும் நடிகர் முனீஷ்காந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

எலைட் டாக்கீஸ் பேனரில் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேட்டில்’ (‘Battle’). சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் ‘தங்கலான்’ புகழ் அன்புடன் அர்ஜுன், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, ‘இட்லி கடை’ படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் ‘பேட்டில்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும்…

Read More

ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வில் ‘டிரான்:ஏரஸ்’ திரைப்படத்தை வியந்த வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள்!

செயற்கை தொழில்நுட்பம் வெறும் கருவியாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேற்பட்டதாக எப்படி இனி மாற இருக்கிறது என்பதை ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது நமக்கு அறிமுகம் இல்லாதவரை நமக்கு அது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த இருக்கும் ஐஐடி மாணவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். டிஸ்னியின் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் ஐஐடி பாம்பே மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது. படத்திலிருந்து உத்வேகம் பெற்று, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கற்பனை மற்றும் கேமிங் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்வை உருவாக்கினர். அற்புதமான ஹை எனர்ஜி LED நடன நிகழ்ச்சியும் அங்கு நடந்த லேசர் நிகழ்ச்சியும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகமான ’டிரான்:…

Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார் !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ்,  JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  இணைந்துள்ளார். தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ்,  (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார். தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை…

Read More