காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது. இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின்…

Read More

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை விரிவுபடுத்தும் மனோரமாமேக்ஸ்

மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை முதன்முறையாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலான கதைகளை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மலையாள திரைப்படங்களை மற்ற பிராந்தியச் சந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மனோரமாமேக்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ‘காட்டாளன்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட வெளியீடுகள் இதன் தொடக்கமாக அமைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ரசிகர்களும் மலையாளத் திரைப்படக் கதையைத் தங்கள் சொந்த மொழிகளிலேயே பார்த்து…

Read More

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத் தலால் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை உலகை அறிமுகப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை இந்தப் பாடல் இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினாலும் அந்தப் பாடலிலிருந்து நேரடியாக எந்தவிதமான தாக்கத்தையும் பெறாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் இந்தப் பிரபலமான வார்த்தைக்கு புதிய கோணத்தை தருகிறது. இதன் மூலம் தேசப்பற்று உணர்வையும் நம் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது. சுதீர் யாதுவன்ஷி தனது ஈர்க்கும் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு கூடுதல்…

Read More

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் 4.5/5..

கதை… மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் ராதிகா.. இவரது ஒரே மகன் சூர்யா.. தன் அம்மாவிற்கு அப்பா செய்த திருமண துரோகத்தால் திருமணத்தை வெறுக்கிறார் சூர்யா.. ஆனால் 42 வயதான பிறகு அம்மாவின் விருப்பப்படி தங்களின் பாரம்பரியமிக்க குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என நினைக்கிறார்.. ஆனால் அம்மாவுக்கே தெரியாமல் வாடகைக்கு தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து இந்தியாவுக்கு அழைத்து வருகிறார் சூர்யா.. அதன் பிறகு என்ன ஆனது மகனின் வாடகை தாய் விருப்பத்திற்கு ஆதரவு கொடுத்தாரா ராதிகா.? மமீதாவுக்கும் சூர்யாவுக்கும் என்ன உறவு என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை.. நடிகர்கள்… சூர்யா – விஸ்வநாத் மமிதா பைஜு – மேடி ராதிகா – நிர்மலா தேவி ரவீனா டாண்டன் – அஞ்சலி கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியாக நம்மை கவர்ந்த சூர்யா இதில் சஞ்சய் விஸ்வநாத்தாக கவர்ந்திருக்கிறார்.. ஒரு…

Read More

மகுடம் விமர்சனம்.. இயக்குனர் விஷாலுக்கு இந்த படம் மகுடம் சூட்டுமா.?

ரன்னிங் டைம் – 185 28 3h 5m  •UA16+ கதை… விஷால் துஷாரா விஜயன் இருவரும் கணவன் மனைவி.. இவர்களுக்கு அஸ்வின் மாயா என்ற இரண்டு குழந்தைகள்.. இவர் ஒரு மெடிக்கல் ரெப்.. துஷாராவின் அப்பா தம்பி ராமையா விடம் தனக்கு கார் இருப்பதாக சொல்லி காதலி துஷாராவை  திருமணம் செய்கிறார் விஷால்.. ஒரு கட்டத்தில் காரை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் விஷால்.. இவரது சம்பளத்திற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் லோன் கிடைக்காத காரணத்தினால் செகண்ட் ஹேண்ட் காரை ஒன்றை வாங்குகிறார். எனவே மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் பயணம் செய்கிறார்.. விஷால் அந்த காரை வாங்கியது அறியாத வில்லன் கும்பல் அந்தக் காரில் பயணிப்பவர்களை கொல்ல திட்டமிடுகிறது.. அதன்படி துஷாராவையும் மகளையும் கொன்று விடுகின்றனர்.. யாரோ ஒருவர் நினைத்து இவர்களை கொல்ல…

Read More

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்

சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் – ‘ஃபௌஜி- Fauzi’ படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது… மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்… இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.‌ பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல… ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு…

Read More

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்

சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் – ‘ஃபௌஜி- Fauzi’ படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது… மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்… இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.‌ பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல… ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு…

Read More

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சில ஆளுமைகளின் அற்புதமான கூட்டணியாக அமைந்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்குநராகவும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், அன்பரிவ் சண்டைப் பயிற்சியாளராகவும் தங்களின் தனித்துவமான ஆற்றலை வழங்கியுள்ளனர். ‘தர்மன்’ தனது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறது. இது ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Read More

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், “நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா கதை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது.…

Read More

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

தேசியம், ஆகஸ்ட் , 2026: விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வமான குடும்பத் திரைப்படமான நூறு சாமி, ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. 2026 ஆகஸ்ட் 7 அன்று தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆன இந்த திரைப்படம், பார்வையாளர்களின் மனதில் ஆழமான உணர்வுப் பிணைப்பை உருவாக்கியுள்ளது. தாய்மை, துணைநிலை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பற்றிய மனிதநேயமிக்க கதையை பல மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, சசி எழுதி இயக்கியுள்ள நூறு சாமி, காதல் மற்றும் குடும்பத்தை மிகவும் தனிப்பட்ட கோணத்தில் அணுகும் மனதைத் தொடும் கதையாகும். தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை குடும்பத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பயணமே இதன் மையக் கருத்தாகும். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை…

Read More