விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் – ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர். 

Read More

துரந்தர் பழிவாங்கல்: 11 நாட்களிலேயே முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து சாதனை!

இரண்டாவது வாரயிறுதியிலும் வசூல் வேட்டையை தொடரும் துரந்தர் பழிவாங்கல் படம், உலகளவில் ரூ. 1365 கோடியை வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. எவராலும் அசைக்க முடியாத மாபெரும் ஹிந்தி படமாக உருவெடுத்துள்ள இப்படம், உலகளவில் ரூ. 1365 கோடியும், இந்தியாவில் ரூ. 867 கோடியும் வசூலித்து அசத்தியுள்ளது. வெறும் 11 நாட்களிலேயே துரந்தர் முதல் பாகத்தின் மொத்த வாழ்நாள் வசூலையும் முறியடித்து, உலகளாவிய மார்க்கெட்டில் தனது அசாதாரண ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. படம் வெளியான முதல் நாள் மற்றும் சிறப்பு திரையிடல்களில் இருந்தே, இந்த ஸ்பை-ஆக்‌ஷன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது. அதிக வசூல் செய்த சிறப்பு திரையிடல்கள்,…

Read More

ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நடிகர்கள் பஸில் ஜோசப் – L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த…

Read More

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தம்பி ராமையா கதை…

Read More

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது. இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.…

Read More

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

Read More

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

இந்திய கலாச்சாரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜப்பானைச் சேர்ந்த கீக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்து உரையாடினார். இதுமட்டுமல்லாது, ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார். இந்திய கலாச்சாரத்தின் மீது நடிகர் அல்லு அர்ஜூன் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் இது பிரதிபலிக்கிறது. மேலும் இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றிய வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். இராமாயணத்தின் மதிப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த ஓவிய பரிசளிப்பு தருணம் பாரம்பரியம், ஆன்மீகம் மற்றும் கலை வெளிப்பாடு ஆகியவற்றின் மீது இரு நாடுகளும் கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான கலாச்சார…

Read More

சாத்தான் தி டார்க் – விமர்சனம்

தெய்வ சக்திக்கு எதிரான தீய சக்தி… இதன் மூலம் சாகா வரம் பெற்று உலகை ஆள முடியும் என தீய சக்திகள் நம்புகின்றனர்.. இதற்கு சாத்தானை வழிபட்டு அவர்கள் பல வழிபாடுகளை செய்கின்றனர்.. இந்த மையக்கருவை வைத்து ஒரு த்ரில்லர் அனுபவத்தை வித்தியாசமாக கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.. கதை…. ஒரு கிராமத்தில் பல கொலைகள் நடக்கிறது.. மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கொலை செய்தது யார் என்ற விசாரணையின் போது தான் அவர்கள் சாத்தானுக்கு நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.. இதனை செய்தவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன அவர்களின் நோக்கம் என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… பல படங்களில் சாந்தமான அம்மா அண்ணி அக்கா வேடங்களில் நடித்தவர் மோனா பத்ரே.. இவர் நாயகி ஐராவின் அம்மாவாக நடுத்திருக்கிறார் கிட்டத்தட்ட படத்தின் கதை…

Read More

முத்து என்கிற காட்டான் – விமர்சனம்

கதை… முத்து குமார் – சிங்கம்புலி – வடிவேல் முருகன்.. இவர்கள் மூவரும் ஒரு கிராமத்தில் காவல் நிலையத்தில் பணிபுரிகின்றனர்.. இங்கு ஒரு புகார் கூட வராத நிலையில் காவல் நிலையத்தை மூட பார்க்கின்றனர்.. ஆனால் வெளியே சென்றால் இது போல சுதந்திரமாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஏதாவது ஒரு புகார் வராதா ஏதாவது ஒரு விசாரணை வராதா என்று மூவரும் காத்திருக்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விஜய் சேதுபதியின் தலை மட்டும் ஒரு இடத்தில் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடைக்கிறது.. அந்தத் தலையை வைத்துக்கொண்டு உடல் எங்கே தேடுகின்றனர்.. மேலும் அது பற்றி விசாரணையில் இறங்குகின்றனர்.. விஜய் சேதுபதி நல்லவரா கெட்டவரா.? அவரை கொன்றது யார் என்ற விசாரணை இறக்கும்போது தான் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய…

Read More

நீ FOR EVER – விமர்சனம்

கதை… சுதர்சன் கோவிந்த் – நாயகன் அர்ச்சனா ரவி – நாயகி அம்மா வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் கணவன் கைவிட்டதால் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.. அதன் பிறகு தாத்தா ஒய் ஜி மகேந்திரன் கண்டிப்பில் வளர்கிறார் நாயகன் சுதர்சன்.. இதனால் காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப் டெவலப் செய்கிறார்.. ஆனால் காதல் அனுபவம் இல்லாத காரணத்தினால் இவரது அலுவலகத்தில் இவரது ஆப் டெவலப்புக்கு போதுமான ஆதரவு இல்லை.. எனவே ஒரு காதலை தேடி அலைகிறார்.. இயக்குனராக ஆசைப்படுகிறார் நாயகி அர்ச்சனா.. அப்போது ஒரு காதல் கதையை எடுத்து வர சொல்கிறார்கள்.. காதல் அனுபவம் இருந்தால் இன்னும் எளிதாக கதையை எழுதலாம் என்பதற்காக பொய்யான ஒரு காதலை தேடி செல்கிறார்…

Read More