‘ஷாஹீத்’ திரைப்படம் திரையிட்டு தேசபக்தி விழா ஆரம்பம் !!

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (N.F.D.C.) மற்றும் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆகியவற்றால் ஆகஸ்ட் 11 முதல் 13 வரை தாகூர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசபக்தி திரைப்பட விழா ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு எஸ். ராம் சர்மாவின் ஷாஹீத் (1965) திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர் வசந்த், நடனக் கலைஞர் கலா மாஸ்டர், தமிழ் வர்த்தக சபையைச் சேர்ந்த சோழ நாச்சியார், நடிகர் வீரா & நடிகை நமீதா மற்றும் சங்கீத வித்வான் டாக்டர் ஏ.வி.எஸ். சிவகுமார் ஆகியோர் பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று விருந்தினர்களை உரையாற்றினர். சென்னை NFDCயின் துணைப் பொது மேலாளர் மகேஷ் யாதவ் விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கும் ஏற்பாடு…

Read More

“நறுவீ” தமிழகமெங்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

ஹரீஷ் சினிமாஸ் வழங்கும், தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் M இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “நறுவீ”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் A. அழகு பாண்டியன். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன், ரொமான்ஸ் காமெடி, கலந்து பரபரப்பான ஹாரர் திரில்லர் படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுபாரக் M. மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி,…

Read More

தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள்! – ‘ஹவுஸ் மேட்ஸ்’ நாயகி அர்ஷா பைஜூ உற்சாகம்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ‘ஹவுஸ் மேட்ஸ்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, அர்ஷா சாந்தினி பைஜூவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறது. தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் விளம்பர நிகழச்சிகளுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் அர்ஷா சாந்தினி பைஜூ, தனது முதல் தமிழ்ப் படம் அனுபவம் மற்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார். மலையாள சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. தமிழ்நாட்டு…

Read More

கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து…

Read More

யோகி பாபு நடிக்கும் ‘சந்நிதானம் (P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சந்நிதானம் (P.O)’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. ‘Tootu Madike’ போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் ‘Veerappan’, ‘Sooryavamsi’, ‘Vaanku’ (தயாரிப்பு), ‘Nalla Samayam’ (விநியோகம்), ‘Rudhiram’ (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார். நட்சத்திரப் பட்டாளத்தை கொண்ட இந்த படத்தில், 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read More

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் பாடல் வெளியாகியுள்ளது!

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர். ‘மரியான்’ படத்தில் ‘எங்க போன ராசா…’ உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல்கள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி…

Read More

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், இசை மீது கொண்ட தீராக்காதலின் விளைவாக முற்றிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார். பாரம்பரிய இசையின் ராகங்களையும் அவை திரைப்பட பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் துபாயில் RRR (ரீல் ரியல் ராகா) என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய வெங்கடேஷ் சங்கர், அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார். உலகெங்கிலும் உள்ள திறமைகளைக் கண்டறிந்து கொண்டாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் தளமான தி சென்டர்ஸ்டேஜுடன் இணைந்து இதை அவர் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்காக…

Read More

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ‘துள்ளுவதோ இளமை’ நடிகர் அபிநய் மருத்துவச் செலவிற்கு நடிகர் தக்‌ஷன் விஜய் உதவினார்!

துள்ளுவதோ இளமை, ஜங்ஷன், தாஸ் ஆகிய படங்களில் நடித்த அபிநய், கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். இதை அறிந்த ‘கபளிஹரம்’ படத்தின் கதாநாயகன் தக்‌ஷன் விஜய் நேரில் சென்று, நலம் விசாரித்துவிட்டு, மருத்துவச் செலவிற்கு கணிசமான பணம் மற்றும் அவருக்கு தேவையான சில பொருட்கள் கொடுத்து ஆறுதல் கூறினார்! 20 கிலோ எடை குறைந்து பரிதாபமான நிலையில் இருக்கும் அபிநய்க்கு கல்லீரல் மாற்று ஆப்ரேஷன் நடக்கும் போது, மேலும் பொருளாதார உதவிகள் செய்கிறேன். தைரியமாக இருங்கள். நலமாகி மீண்டும் நடிப்பீர்கள் என தன்னம்பிக்கை கொடுத்தார்! தக்‌ஷன் விஜயிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, அபிநய் கண்ணீர் விட்டு அழுதார்! ‘எனக்கு இந்த நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அம்மா, அப்பா, பொண்டாட்டி, பிள்ளை, உறவினர்கள் யாரும் இல்லை. நான் அனாதையாக…

Read More

நாளை நமதே – திரை விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகம். ஆதிக்க சாதி வைத்தது தான் அந்த ஊரின் எழுதப்படாத சட்டம். அவர்களில் ஒருவரே பஞ்சாயத்து தலைவராகவும் இருப்பார். இந்நிலையில் இந்த தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டால் நடப்பதே வேறு என மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருமான தாத்தாவை தேர்தலில் நிற்கும்படி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் அரசியல் கட்சியினரும் கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அதை ஏற்று வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் வழியில் ஆதிக்க சாதியினரால் கொல்லப்படுகிறார். அவருடன் சென்ற வர்களும் உயிர் இழக்கிறார்கள். அதோடு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரையும் கொன்று எரித்து,…

Read More

”கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்தேன்”- ‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது, “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அவரை நேரில் சந்தித்து ’குற்றம் புதிது’ படத்தின் கதை சொன்னேன். கதை பிடித்ததும் முழு மனதோடு படத்தைத் தயாரிக்கவும் சம்மதித்தார். நடிப்பு, பயிற்சி, சண்டை…

Read More