SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி, பரவலான பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இப்படம் பேசும் கருத்தியலை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன். அவர்கள், படம் பார்த்து, படக்குழுவினரை பாராட்டி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் படம் குறித்து கூறியதாவது.. நண்பர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சார் திரைப்படம் கல்வியால் தான் எளிய மக்கள் மேன்பட முடியும் என்பதை பேசுகின்ற ஒரு திரைப்படம், கல்வி தான் உண்மையான…
Read MoreBigg Boss Tamil Season 8 பிரம்மாண்டமாக துவங்கியது!
Bigg Boss Tamil Season 8 Oct 6 ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. 8வது சீசனின் தொடக்கத்திலிருந்தே, இந்த நிகழ்ச்சி பல புதிய அம்சங்களால் நிரம்பியுள்ளது – புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் அசாத்திய ‘ஆண்கள் Vs பெண்கள்’ கருப்பொருள் என ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அசத்தலான தோரணையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார். விவாதங்களை நேரடியாக சந்திப்பது, போட்டியாளர்களின் தவறுகளை நேர்மையாக விசாரிப்பது, உள்ளிட்ட விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை மிக்க அணுகுமுறைக்கு பலத்த பாராட்டுகள் கிடைத்தன. தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR என சாதனை படைத்திருப்பது,…
Read MoreRSSS பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது. யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன இப்படத்தில் வரும் காட்சிகள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார். தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச…
Read Moreஐந்தாவது வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் !! இதோ ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!
~ 90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்த இந்த சீரிஸில், சாய் தன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ~ ~ ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கும் ~ முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மித்தாலஜி திரில்லர் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தயாராக இருங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும் ‘ஐந்தாம் வேதம்’ என்ற ஒரிஜினல் சீரிஸின், இதயம் அதிர வைக்கும் டிரெய்லரை வெளியிடுவதில் ZEE5 மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான டிரெய்லரை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது பார்வையாளர்களை பண்டைய ரகசியங்கள் மற்றும் ஆபத்தான பயணங்கள் அடங்கிய புதிய உலகில் மூழ்கடிக்கிறது. அபிராமி மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், ‘மர்மதேசம்’ என்ற கிளாசிக் தொடரை உருவாக்கிய…
Read More“ரசிகர்களின் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் செய்தோம்” ; பிளாக் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உற்சாகம்
வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதே சமயம் ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே தருவது என்கிற குறிக்கோளுடன் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’ துவங்கி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படம் வரை அந்த பணியை செவ்வனே செய்து வரும் இந்த நிறுவனத்தின் சமீபத்திய படைப்பாக ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, சிந்தூரி ஆகியோர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.கே பாலசுப்பிரமணி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் வெளியான இந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு பக்கம் வேட்டையன் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வித்தியாசமான கதை பற்றி வாய்மொழியாக பரவிய செய்திகளால் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த…
Read More“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்
சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த யாதுமாகி படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கடுத்து வெளியான ஈசன் படம் தான் இவருக்கான அடையாளத்தை…
Read Moreஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் நவம்பர் 22, 2024 அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது!
பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர். படவெளியீடு பற்றி இயக்குநர் பாயல் கபாடியா பேசியதாவது, “இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை…
Read More“சினிமாவில் புதிய சுழல்: மோனிஷா சென் தனது அடியெடுத்து வைக்கும் தருணம்”
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நம் நாட்டின் பெருமைமிகு கொள்கை பொழுதுபோக்கு துறையில் அதிகம் வெளிப்படுகிறது. பிராந்திய மற்றும் மொழித் தடைகள் போன்றவற்றைக் கடந்து திறமை மட்டுமே இங்கு மதிப்பிடப்படுகிறது. பிரபல மாடல் மோனிஷா சென் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். அவரது சினிமா வருகைக்கு பல பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நடிகையாக அறிமுகமாவது பற்றி மோனிஷா சென் பகிர்ந்திருப்பதாவது, “இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிரபாஸ், என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மற்றும் காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளை என இவர்களைப் பல ஆண்டுகளாக ரசிகர்களைப்…
Read Moreதென்னிந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’!
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் கொடுக்கத் தயாராக உள்ளது. டாம் ஹார்டி கடைசி முறையாக ஆண்டி- ஹீரோவாக வொனோமில் நடித்துள்ளார். வெனோம் உரிமையில் இது மிகப்பெரிய இறுதி படம் என்பதால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் டிஜிட்டல் டிரெய்லர்கள், ஸ்டேண்டீஸ் மற்றும் போஸ்டர்கள் நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, படத்தின் பரபரப்பான இறுதி டிரெய்லர் பிராந்தியம் முழுவதும் உள்ள 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அனைத்து மொழி படங்களுடனும் ஒளிபரப்பானது. வெனோமின் இறுதி வெளியீட்டை முன்னிட்டு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மால்களுக்கு வெளியே 40 அடி உயரத்தில் பிரமாண்டமான…
Read Moreசார் – திரைப்பட விமர்சனம் – மதிப்பீடு : 3/5
சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘சார்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் 1950- 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் படமாக ‘சார்’ உருவாகி இருக்கிறது. கோலோச்சு குடும்பம் எனும் குடும்பம் மாங்கொல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினராக எழுத்தாளர் ஜெயபாலன் இருக்கிறார். இவர் சாமியாடி. அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை தருவதற்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை என்பவர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை…
Read More
