கிரிக்கெட் மேட்ச் போன்று 6 கேமராக்கள் வைத்து ஷூட்டிங் செய்தோம்: ஏ. எம். ஜோதி கிருஷ்ணா

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா…

Read More

‘ஹார்ட்பீட் சீசன்2’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது…ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புதிய எபிசோட் வெளியாகும்!

சென்னை, மே 22, 2025: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ’ஹார்ட்பீட் சீசன் 2’, இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரசிகர்களின் விருப்பமான இந்தத் தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புது எபிசோட் ஒளிபரப்பாகும். இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தரும். சீசன் 2 இல், பழைய பதட்டங்களைத் தாண்டி தற்போது சீனியராக பதவி உயர்வு பெற்ற ரீனா (தீபா பாலு) மற்றும் குணா (சர்வா) ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆர்.கே. மருத்துவமனையின் தூணான டாக்டர்…

Read More

அமோஹம் ஸ்டூடியோஸ் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.சுபாஷினி தயாரித்து பெருமையுடன் வழங்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் செய்யும். கடந்த கால படங்களின் தலைப்புக்கூட நம்மை அஞ்சி நடுங்க வைத்த சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இதே தலைப்பு கொண்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. முந்தைய படத்தை போன்றே புதிய ஜென்ம நட்சத்திரம் திரைப்படமும் நம்மை அஞ்சி நடுங்க செய்யும் அளவுக்கு ஹாரர்  திரில்லர் கதைக்களத்தில் தான் உருவாகி இருக்கிறது. படத்தில் 666 என்ற விஷயம் மிகவும் கவனிக்கும் படியாக அமைந்து இருந்தது. இந்த நிலையில்,…

Read More

விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்ட மோகன்லால், ”இது சிறப்பு வாய்ந்தது. இதை எனது எல்லா ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்

‘இந்திய சினிமாவின் லாலேட்டன் ‘ மோகன்லாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள்.‌ அவர்கள் மிகவும் எதிர்பார்த்த பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். டிராகன் அளவிலான வடிவங்களுடன் சிக்கலானதாகவும், விரிவானதாகவும் தங்க பழுப்பு நிற கவசத்தை அணிந்த மோகன்லால், ஒரு புராண போர் வீரன் – ராஜாவாக கம்பீரமாக நிற்கிறார். அவரது அலைபாயும் கூந்தல்- அடர்த்தியான தாடி -அற்புதமான வெள்ளை வண்ண திலகம் – அவரது கட்டளையிடும் தோற்றத்திற்கு காலத்தால் அழியாத ஆன்மீக ஈர்ப்பை வழங்குகிறது. ஒரு பெரிய வாழ்வில் அமைதியாக அமர்ந்திருக்கும் கைகளாலும் … தீர்க்கமான பார்வையுடன் உயர்த்தப்பட்ட கண்களாலும்… அவர் அமைதியின் வலிமை, மரபு மற்றும் தெய்வீக எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். பாரம்பரிய ஆபரணங்களும், ஒரு தடித்த மூக்குத்தியும் ராஜ நாகரீக தோற்றத்தை நிறைவு செய்கின்றன. இந்த தோற்றம்…

Read More

தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம் கீதிகா திவாரி!

புதிய ’GT’ தற்போது உதயமாகி இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் (GT) கிரிக்கெட் களத்தில் பிரகாசிக்கும் அதே வேளையில், தென்னிந்திய சினிமாவின் புதிய நட்சத்திரமாக கீதிகா திவாரி (Geethika Tiwari) அறிமுகமாகி இருக்கிறார். நடிகர், தயாரிப்பாளர் ஆர்யாவின் தயாரிப்பில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து அவர் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் குறித்தும் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் அவர் பகிர்ந்து கொள்கிறார். அவர் பேசியதாவது, “சந்தானம் உண்மையிலேயே ‘கவுண்ட்டர் கிங்’. அவருடைய நகைச்சுவை உணர்வு யாருடனும் ஒப்பிட முடியாது. பிஸி ஷெட்யூலிலும் அவருடைய நகைச்சுவை உணர்வு மெடிகேஷன் போல என் மனதை அமைதிப்படுத்த உதவியது. இந்தப் படத்தின் மிகப்பெரும் பலம் ஆர்யா சார்தான். அவருடன் வருங்காலத்தில் இன்னும் அதிக படங்களில் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். இந்தக் கதாபாத்திரம் எனக்கு எதிர்பாராதவிதமாக வந்தது. இன்னொரு படத்திற்காக UK…

Read More

“நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்” என்கிறார் ‘வார் 2’ டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என். டி. ஆர் ஒரு உண்மையான பான் இந்தியா சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் ‘மேன் ஆஃப் தி மாஸஸ்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். ‘வார்-2’ வின் டீசர் மூலம் அகில இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புகழ் வெளிப்பட்டது, மேலும் ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் என்ற படவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்த படத்தில் சூப்பர்-ஸ்பை என்ற அவரது நடிப்பு பற்றிய விவாதம் இணையத்தில் மிக வேகமாக பரவியது. ‘வார்-2’ திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டினால் ஜூனியர் என்.டி.ஆர் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், ஏனென்றால் நீங்கள் மக்களின் நிபந்தனையற்ற அன்பை அனுபவிக்க முடியும்”. இது மிகவும் மதிப்புமிக்க மற்றும் அரிய உணர்வு, மேலும் இதைப் பெற எனக்கு நிறைய அதிர்ஷ்டம் உள்ளது வார்-2. ஒய்.…

Read More

வரவேற்பைப் பெற்ற வார் 2 டீஸர்: ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி

ஜூனியர் என். டி. ஆர் ஒரு உண்மையான பான் இந்தியா சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் ‘மேன் ஆஃப் தி மாஸஸ்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். ‘வார்-2’ வின் டீசர் மூலம் அகில இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் புகழ் வெளிப்பட்டது, மேலும் ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் என்ற படவரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்த படத்தில் சூப்பர்-ஸ்பை என்ற அவரது நடிப்பு பற்றிய விவாதம் இணையத்தில் மிக வேகமாக பரவியது. ‘வார்-2’ திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டினால் ஜூனியர் என்.டி.ஆர் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், ஏனென்றால் நீங்கள் மக்களின் நிபந்தனையற்ற அன்பை அனுபவிக்க முடியும்”. இது மிகவும் மதிப்புமிக்க மற்றும் அரிய உணர்வு, மேலும் இதைப் பெற எனக்கு நிறைய அதிர்ஷ்டம் உள்ளது வார்-2. ஒய்.…

Read More

சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட  படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற தீபக் தேவ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.KA.பூபதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, G சசிக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகம், சிறுத்தை போன்ற படங்களில் அதிரடி காட்சிகளை உருவாக்கிய சண்டை பயிற்சியாளர் K. கணேஷ்குமார் குமார் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். இத்திரைப்படத்தில்…

Read More

திருக்குறள் உரைக்குத் தலைப்பை அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து

https://x.com/Vairamuthu/status/1925378494806335552?t=oV0vae168rkXUVV7XwnKQw&s=19 கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார். ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார். திருக்குறளுக்கு எழுதப்பட்டிருக்கும் இந்தப் புதிய உரை நவீனமானது; டிஜிட்டல் தலைமுறைக்கானது; கணினித் தலைமுறைக்குக் கனித்தமிழில் எழுதப்பட்டது; எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும் பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும் பொருட்பாலும் ஞானத்தமிழில் இயங்குவது; இன்பத்துப்பால் கவிதைப் பொருளாய் விளங்குவது என்று சொல்கிறார் கவிஞர் வைரமுத்து. ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ ஜூலை மாதம் நூலாக வெளியிடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

Read More

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். தேசிய விருது பெற்ற நாயகனும், சர்வதேச புகழ் நடிகருமான தனுஷ், இந்தத் திரைப்படத்தில்  இந்தியாவே ஒருமனதாக நேசிக்கும் மனிதரான, ஏபிஜே அப்துல் கலாம் பாத்திரத்தை, ஏற்று நடிக்கிறார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தயாரித்த, ‘அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் கீழ் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, ‘டி-சீரிஸ்’ நிறுவனத்தின் கீழ் பூஷன் குமார்  இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை ‘நீர்ஜா’, ‘மைதான்’ மற்றும் ‘பர்மானு: தி ஸ்டோரி ஆஃப் போக்ரான்’ போன்ற புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றுப்…

Read More