நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா- சுதாகர் செருகூரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் தயாரான ‘தி பாரடைஸ்- The Paradise ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான ‘தி பாரடைஸ்’- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான ‘ஆயா ஷேர்’ … என  இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். ‘நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த…

Read More

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த DC விமர்சனம்…

கதை… ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகன் படிப்புக்காக தங்கள் நிலத்தை விற்று ₹7 லட்சம் சேர்த்து வருகின்றனர்.. அப்போது இவர்களை பார்த்து உதவிக்காக அழைக்கும் ஒரு போலீஸ்காரர் இவர்களிடம் இருக்கும் ₹ 7 லட்சத்தை அறிந்து கொள்கிறார்.. இதனை அடுத்து அந்த தந்தையை கொன்று பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார் .. இதனால் அந்த குடும்பம் நீதி கேட்டு அலைகின்றனர்.. ஆனால் காவலர்களே துரோகம் செய்துவிட்டதால் வேறு வழி இன்றி ரவுடி கும்பல் லோகேஷ் குழுவை அணுகுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? லோகேஷ் அவர்களுக்கு எப்படி உதவினார் காவலர்களை எதிர்த்து எப்படி போராடினார் என்பதெல்லாம் கதை.. நடிகர்கள்… • லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ் • வாமிகா கபி – சந்திரா • சஞ்சனா ஏ.கே. – பார்வதி • கஸ்தூரி ராஜா…

Read More

வதந்தி 2 – இணையத் தொடர் விமர்சனம்…

கதை… எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி என்ற ஒரு வெப் சீரிஸ் வந்தது.. அந்த வெற்றியை தொடர்ந்து இது வதந்தி2.. இதில் போலீஸ் அதிகாரியாக சசிகுமார் நடித்திருக்கிறார்.. ஓர் அரசு நிகழ்ச்சிக்காக ஒரு பள்ளம் தோண்டப்படுகிறது.. அப்போது அங்கிருந்து ஒரு எலும்புகூடு கண்டுபிடிக்கப்படுகிறது.. அதில் ஒரு கை இல்லை.. அதன் பிறகு அடுத்த எலும்புககூடு கண்டு பிடிக்கப்படுகிறது.. இந்த எலும்புக்கூடு உருவம் யார் என விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் சசிகுமார்… இறுதியாக இரண்டும் பெண்கள் உடையது என்று தெரிய வருகிறது.. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர்களை கொலை செய்து இங்கே புதைத்தவர் யார் என கொலையாளியை தேடி அலைகிறார் சசிகுமார். இறுதியில் என்ன ஆனது என்பதை பல மர்ம முடிச்சுகளுடன் சுவாரசியமாக திரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்.. நடிகர்கள்……

Read More

போட்டோகிராபர் – விமர்சனம்.. 3/5.. திரில்லர் போட்டோக்ராபர்

கதை… நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தை தொழிலதிபராக இருந்தாலும் அவரை சார்ந்து வாழாமல் தனக்கு பிடித்த போட்டோகிராபி தொழிலில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் நாயகன் அஷ்ரப்.. இதுவரை யாரும் எடுத்திடாத ஒரு போட்டோ கிளிக் சரித்திரம் படைக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவருக்கு மதிகெட்டான்சோலை என்ற அடர்ந்து காட்டுப்பகுதியில் ஒரு தங்க மரம் இருப்பதாக அறிகிறார்.. எனவே அதைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் தனியாக செல்கிறார்.. ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அவர் உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை.. நடிகர்கள்… அஷ்ரஃப்…

Read More

‘செய்! செய்யாதே!’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.   இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் மேடையில் அமர்ந்துள்ள சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள், ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க…

Read More

GDN விமர்சனம் – GD Naidu

கதை… கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவர் செய்த தொழில் புரட்சி வரை இந்த படத்தில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர காலத்திற்கு முன் அவரின் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் அவருக்கு ஆங்கிலேயர்கள் எந்த வகையான தடைகள் போட்டார்கள் தொல்லை கொடுத்தார்கள்.. அதையெல்லாம் எப்படி கடந்து இந்தியாவின் மாபெரும் சாதனையாளர் ஆனார் என்பதுதான் சரித்திர கதை.. நடிகர்கள்… R. Madhavan Priyamani Jayaram Dushara Vijayan Sathyaraj Vinay Rai Aditi Balan Karunakaran Mohan Raman Thambi Ramaiah Tejeenthan Arunasalam Brigida Saga Sheela Rajkumar Shilpa Sreekumar ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஜிடி நாயுடு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன்.. 1930 அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடல் மொழி.. அரசுக்கு…

Read More

டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் – மீண்டும் ஒன்றிணையும் ‘குப்பி’ டீம்

மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர்களின் அடுத்தகட்ட பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது. திரையுலக வட்டாரங்களின்படி, இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் (High-budget) உருவாகும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் எனத் தெரியவருகிறது. இவர்களுடன் ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இப்புதிய படத்தில் இணையவுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘குப்பி’, நடிகர் டொவினோ தாமஸின் திரைப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் ‘தேஜஸ் வர்க்கி’ எனும் பொறியாளராக அவரது…

Read More

டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் விரியும் ‘மூடர் கூடம் 2’

கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை. காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘மூடர் கூடம்’. 13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’, தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது. படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி,…

Read More

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார். இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”,…

Read More

உள்ளடக்க உருவாக்கம் முதல் வணிகமயமாக்கல் வரை இந்திய திரைப்படத் துறைக்கான தேசிய B2B சந்தையை உருவாக்கும் புதிய முயற்சி

இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது. BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு: ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான…

Read More