கதை.. பெரும்பாலும் ஒரு படத்தில் ஒரு கதையில் ஒரு விளையாட்டு போட்டி இருக்கும்.. ஆனால் இதில் மூன்று கதைகளை அமைத்திருக்கிறார்.. மூன்று விளையாட்டுகளிலும் ராம்சரண் ஆட்டநாயகன் மலைவாழ் மக்களில் ஒருவன் ராம்சரண் இவரது அம்மா குயிலி.. அந்த பகுதி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்… பெத்தி என்றால் கிரிக்கெட்டில் பயங்கர ஃபேமஸ்… எனவே இவரை வைத்து பலரும் கூலி ஆட்டக்காரனாகபந்தயம் கட்டி வருகின்றனர்.. இவரும் பல சாதனைகள் படை த்து வருகிறார்.. ஆனால் இவருக்கும் இவரது இன மக்களுக்கு என்று எந்த அடையாளமும் இல்லை.. இவரது ஊரில் ஒரு ரயில்வே நிலையம் கூட கிடையாது.. இதனால் ஒருநாள் முழுக்க இவர்கள் ஊருக்கு நடந்து வருகின்றனர்.. இப்படியான சூழ்நிலையில் தனக்காகவும் தன் மக்களுக்காகவும் ஓர் அடையாளத்தை உருவாக்க நினைக்கிறார் ராம்சரண்.. எனவே அடுத்த கட்டத்திற்கு குஸ்தி பயிற்சியை மேற்கொள்கிறார்.. சிவராஜ்குமார்…
Read MoreCategory: விமர்சனம்
இரட்டையர் – விமர்சனம்
கதை… அபிநயா இவரது கணவர் மற்றும் இவர்களது இரு குழந்தைகள் அனுமிதா – அனுஷிதா ஆகிய நால்வரும் காரில் பயணிக்கின்றனர்.. அப்போது எதிர்பாராத விதமாக பெரிய விபத்து ஏற்படுகிறது.. அதில் அபிநயா கணவர் இறந்து விடுகிறார்.. அபிநயாவுக்கு முகத்தில் பெரிய சேதம் ஏற்படுகிறது.. இதனால் அவர் முகத்தை அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்… அதன் பின்னர் வீட்டிற்கு வரும்போது குழந்தைகள் இவரை தாயாக ஏற்க மறுக்கின்றனர்.. குழந்தைகள் பயம் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.. குழந்தைகள் தன்னை ஏற்க மறுப்பதால் அபிநயாவும் குழப்பம் அடைகிறார்.. நடந்தது என்ன.? இவர்களின் மனநிலை எப்படி மாறியது என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அபிநயா &:அனுமிதா – அனுஷிதா.. இவர்கள் மூவரும் தான் இந்தப் படத்தில் ஆணிவேர் என்று சொல்லலாம்.. கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரங்களில் இவர்கள் மூவரும் ஜொலிக்கின்றனர்.. குழந்தைகளாக நடித்துள்ள அனுமிதா, அனுஷிதா…
Read Moreபரிமளா அண்ட் கோ – விமர்சனம்..
கதை… பரிமளா (ஜெயராம்) & சுதந்திரம் (ஊர்வசி) இந்த தம்பதிகளின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) & மதுமிதா (அனந்திதா).. ஜெயராமின் இரண்டாவது மகளை காதலிக்கிறார் சாண்டி.. ஆனால் அவர் அந்த ஏரியாவின் ரவுடி என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார் ஜெயராம்.. இதனால் குடும்பத்தை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டுகிறார் இதனால் குடும்பம் ஒன்றிணைந்து அவரை தீர்த்து கட்ட முடிவெடுக்கிறது.. ஆனால் அதற்கு அடுத்த நாள் தீபாவளி அன்று கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார் சாண்டி.. இந்த கொலையை செய்தது யார் என்று இவர்களுக்குள் குழப்பம் வருகிறது.. அப்படி என்றால் அந்த கொலையை செய்தவர் யார்? இவர்கள் மீது பழி என்ன காரணம் என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) வில்லன் வர்கீஸ் (சாண்டி) அக்கா சஞ்சனா தங்கை…
Read Moreகாட்டாளன் – விமர்சனம்
கதை… புஷ்பா பட கதையை போல காட்டுக்குள் நடக்கும் ஒரு கதை தான்.. ஆனால் அதில் சந்தன மரக் கடத்தல் இருக்கும்.. இதில் யானை தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கும்பல் கதை.. சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி கோடி கோடியாக சம்பாதிக்கிறார் சுனில்.. இதனால் இவருக்கு பல கும்பல்கள் மிரட்டல் கொடுக்கின்றனர்.. ஒரு பக்கம் காவல்துறையும் மிரட்டுகிறது.. ஆனாலும் தன் காட்டுக்குள் தனி ஆளாக உயர்ந்து நிற்கிறார்.. ஒரு கட்டத்தில் இவருக்கு பக்கபலமாக வந்து சேர்கிறார் ஆண்டனி வர்கீஸ்.. இதனால் கடத்தல் சாம்ராஜ்யத்தில் உயர்ந்து கொடி கட்டி பறக்கிறார்.. ஒரு கட்டத்தில் தன் இன மக்களுக்கு உதவி தேவைப்பட சுனிலின் உதவியை நாடுகிறார் ஆண்டனி.. ஆனால் இவருக்கு ஏமாற்றம் வரவே சுனிலை எதிர்க்க துணிகிறார் ஆண்டனி வர்கீஸ்.. அதன் பிறகு…
Read MoreBLAST விமர்சனம்..குடும்ப ஆக்சன் திரைப்படம் [. 4.5/5.. ]
கதை… தனது மனைவி அபிராமி.. மகள் ப்ரீத்தி.. தம்பி விவேக் பிரசன்னா ஆகியோருடன் நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கராத்தே மாஸ்டர் அர்ஜுன்… சிறுவயது முதலே தன் மகளுக்கு கராத்தே கற்றுக் கொடுத்து அநியாயத்தை தட்டிக் கேட்கும் மனப்பக்குவம் என்றும் வேண்டும் என தைரியப் பெண்ணாக வளர்த்து வருகிறார்.. இதனால் அடிக்கடி பல அடிதடி பிரச்சனைகளை வீட்டுக்கு கொண்டு வருகிறார் ப்ரீத்தி.. இதனால் கோபமடைகிறார் அபிராமி.. பெண்ணுக்கு வரன் பார்க்கும் நேரத்தில் இதுபோல பிரச்சனைகளை கொண்டு வந்தால் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணுகிறார்.. இந்த சூழ்நிலையில் வில்லன் ஜான் கொக்கேன் மூலம் இவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது.. ஆனால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் அர்ஜுன் குடும்பத்திற்கு வரவே அந்த குடும்பம் என்ன செய்தது.? பெரிய ரவுடி கும்பலை இவர்களால் எதிர்த்து போராட…
Read Moreவாரண்ட் – இணையத் தொடர் விமர்சனம்
கதை… பாலாஜி சக்திவேல் ரிட்டையர்டு ஆசிரியர்.. இவரது மகன் பிரசாந்த் பாண்டியராஜ்.. தன்னைப் போலவே தன் ஒரே மகனும் அரசு அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டு அனைத்து தேர்வுகளையும் எழுத சொல்கிறார்.. ஆனால் எல்லாம் தேர்வுகளும் தோல்வியில் முடிகிறது.. ஒரு கட்டத்தில் தன் உறவினர் போலீஸ் காளி வெங்கட் மூலம் பிரசாந்துக்கு காவல்துறையில் வேலை கிடைக்கிறது.. சிபாரிசு மூலம் வேலை கிடைத்ததால் வேலையில் கொஞ்சம் அலட்சியமாக இருக்கிறார் பிரசாந்த்.. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.. ஒரு கைதி இவரது அலட்சியத்தால் தப்பி செல்கிறார்.. இதனால் காவல்துறையில் உயர் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு ஆளாகிறார்.. இதனால் ஒரு எடுப்பிடியாகவே இவரை நடத்துகின்றனர்.. ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையை வேண்டாம் என்று நினைக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? போலீஸ் வேலையை விட்டு சென்றாரா அல்லது காவல் துறையில் சாதித்து காட்டினாரா? என்பதெல்லாம்…
Read Moreசட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்
கதை… ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய் நாயகி மீனாட்சியை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.. இருவரும் காதலிக்க அவர்களின் திருமணம் சுபமாக முடிகிறது.. இதனையடுத்து தேன் நிலவுக்கு கொடைக்கானல் செல்கின்றனர்.. அங்கு கருடா ராம் நடத்தும் ரிசார்டில் தங்குகின்றனர்.. அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்கள் உருவாகிறது.. ஒரு பக்கம் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் மீனாட்சி அப்பா அமைச்சர் அஜய். மறுபக்கம் நண்பரும் இவரை கட்டிக்க ஆசைப்படுகிறார்.. இப்படியான சூழ்நிலையில் மீனாட்சி என்ன செய்தார்.? ஜெய்யுடன் மீண்டும் இணைந்தாரா.? இவர்களுக்கு பிரச்சனை எப்படி உருவானது.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… கிட்டத்தட்ட விஜய்யின் ரசிகராகவே சில இடங்களில் உருவெடுத்து இருக்கிறார் ஜெய்.. சமீபத்தில் விஜய்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்து இருந்தார். அதன் பிரதிபலிப்பு என்னவோ..?? ஐடி கம்பெனி துள்ளல் இளைஞராக…
Read Moreகருப்பு – விமர்சனம்
கதை… கேரளாவில் இருந்து சென்னைக்கு தன் மகளின் சிகிச்சைக்காக வருகிறார் இந்திரன்ஸ்.. வந்த இடத்தில் தன் நகை பணத்தை பறி கொடுக்கிறார்.. எனவே புகார் கொடுக்க அது வழக்காக மாறி விசாரணைக்கு வருகிறது.. அவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து விடலாம் என திட்டம் போடுகிறார் வக்கீல் ஆர்.ஜே பாலாஜி.. இவரின் சாம்ராஜ்ஜியம் அந்த நீதிமன்றம் என்ற சொல்லலாம்.. நீதிமன்றத்தையும் நீதிபதியையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வக்கீல் ஆர் ஜே பாலாஜி.. வழக்கு மெல்ல மெல்ல நகரும் நேரத்தில் தன் மகளையும் பறிகொடுக்கிறார் இந்திரன்.. இதனை எடுத்து அந்த கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பு சாமியிடம் தன் பிரச்சனையை முறையிடுகிறார்.. அப்போது சூர்யா கருப்பசாமியாக வக்கீலாக உருவெடுத்து வருகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… படத்தின் கதாநாயகன் சூர்யா என்றாலும் கதையின் நாயகன் ஆர் ஜே…
Read More29 – திரைப்பட விமர்சனம்
கதை… சென்னைக்கு வேலை தேடி வருகிறார் நாயகன் விது.. வந்த இடத்தில் நாயகி ப்ரீத்தியை சந்தித்த பின் காதல் கொள்கிறார்.. இருவரும் நெருக்கமாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை உணர்ச்சி பூர்வமாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.. நடிகர்கள்… விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. வாழ்க்கையில் எந்த ஒரு கனவும் இல்லாமல் வாழும் நாயகன்.. ஆனால் லட்சியத்தோடு வாழும் நாயகி இவர்களுக்குள் ஏற்படும் காதலை மிகவும் எளிமையாக ஒவ்வொருவரும் ரசிக்கும்படி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர் விது மற்றும் பிரீத்திஅஸ்ராணி.. அயோத்தி படத்தில் கலக்கியதை விட இந்த படத்தில் அதிகப்படியாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார் பிரீத்தி.. கல்லூரி வில்லனாக வருகிறார் மாஸ்டர் மகேந்திரன் கொஞ்சம் காட்சி தான் என்றாலும் மன நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நாயகனின் ரூம்…
Read Moreகர – திரை விமர்சனம்… 4.5/5..
கதை… 1990 ஆம் ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதை களத்தில் தனுஷ் நடிக்க விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் கர. வங்கியில் கொள்ளை அடிக்கிறார் தனுஷ்.. அதன் பிறகு போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்.. சில ஆண்டுகளுக்குப் பிறகு திருந்தி வாழ ஆசைப்பட்டு உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் தனுஷ்.. அதற்கு பணம் தேவைப்படுவதால் தந்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியை நாடி மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.. அப்போது தங்களின் நிலம் வங்கியால் ஜப்தி செய்யப்படுவதை அறிகிறார்.. மீண்டும் வங்கிக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார் தனுஷ்.. அதன்படி மீண்டும் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? இவர் வங்கியை கூறி வைப்பதன் காரணம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமோடு, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம்,…
Read More
