நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி. அவரது ஒரே மகன் தனராஜ் அப்பாவுக்கு நேர் எதிர். சிறு வயதில் இருந்தே சிகரெட் , சூதாட்டம், மது என்று எல்லா கெட்ட பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள, படிப்பு அவரிடமிருந்து விடைபெற்று போய் விடுகிறது. மகனின் இந்த செயல்களுக்காக அவனை வெறுத்தாலும் உள்ளூர மகன் திருந்தி விட மாட்டானா என்ற நப்பாசை அப்பாவுக்கு. மகனோ திருந்துவதாக இல்லை. வேலைக்குப் போகும் இடங்களிலும் போர்ஜரி செய்து மாட்டிக்கொண்டு அப்பாவுக்கு தலைவலி தர… ஒரு கட்டத்தில் அப்பாவே மகனை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறார். தன் எதிர்கால சந்தோஷங்களுக்கு முட்டுக்கட்டை போடும் இந்த அப்பாவை இனி கொன்றால் தான் ஆயிற்று என்று முடிவெடுக்கிறான் மகன். அதற்காக தனக்குத் தெரிந்த லாரி டிரைவர் ஒருவரையும் ஏற்பாடு செய்கிறான்.ஆனால் மகனின் சதி திட்டம் தெரிந்த அப்பா என்ன முடிவு எடுக்கிறார்?…
Read MoreCategory: விமர்சனம்
ஒத்த ஓட்டு முத்தையா- திரை விமர்சனம்
ஒத்த ஓட்டு முத்தையா எப்படி மொத்த ஓட்டு முத்தையாவாக மாறுகிறார் என்பதை காமெடி கலந்து சொல்லி இருக்கும்படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படமும் கூட. அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டும் முத்தையாவுக்கு திருமண வயதில் மூன்று தங்கைகள். மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அது தொடர்பாக விளம்பரமும் செய்கிறார். ஆனால் அவரது மூன்று தங்கைகளும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 3 இளைஞர்களை காதலிக்கிறார்கள். அதனால் அப்பா தங்கள் காதலுக்கு நிச்சயம் ஓகே சொல்ல மாட்டார் என்பதால் மூன்று இளைஞர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை நம்ப வைக்க போலி பெற்றோரை செட்டப் செய்கிறார்கள். இதே நேரம் மனைவியுடன் சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் சிங்கமுத்து ஏற்கனவே சிறையில் இருந்து…
Read Moreகாதல் என்பது பொதுவுடமை – திரை விமர்சனம்
முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணிக்கு ஒரே பெண். கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தாலும் கலங்காமல் அன்பை கொட்டி மகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் மகள் லிஜாமோல் ஜோஸ் தனது காதல் பற்றி பேச வேண்டும் என்று அம்மாவிடம் கூற… அம்மாவும் மகிழ்ந்து ‘அழைத்து வா என் மருமகனை’ என்க… மகள் அழைத்து வந்ததோ ஒரு பெண்ணை. அப்போது தான் மகளின் தன்பாலின ஈடுபாடு தெரிய வர… இப்போது அப்பா அழைத்து வரப்படுகிறார். மகளுடன் வாழ வந்த பெண்ணை பார்த்ததும் அவரும் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் பக்குவமாக பேசி பார்க்கிறார். மகள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க, அப்பாவின் எதிர்வாதம் எடுபடாமல் போகிறது. அம்மாவும் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. முடிவு என்ன தான் ஆகிறது என்பது பரபர திரைக்கதை. படத்தில் எல்லாரையும் விட…
Read Moreபேபிஅண்ட் பேபி – திரை விமர்சனம்
இடம் மாறிய குழந்தைகளால் நிகழும் பரபரப்பு பயணமே கதை. அதை கலகலப்பில் தோய்த்து படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்திலிருந்து கோவை செல்வதற்காக கிளம்பும் சிவாவும் மதுரை செல்வதற்கு தயாராகும் குணாவும் தங்களது மனைவி குழந்தைகளுடன் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் இந்த இருவர் குழந்தையும் இடம் மாறி விடுகிறது. விமானத்தில் ஏறிய பிறகு தான் சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும் குணாவின் பெண் குழந்தை சிவாவிடமும் இருப்பது தெரிய வர… ஊரிலோ சிவாவின் தந்தை சத்யராஜோ தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசை எதிர்பார்த்து காத்து இருப்பவர். காதல் திருமணம் செய்து வீட்டை விட்டுப் போன சிவாவுக்கு ஆண் குழந்தை பிறந்த தக ல் தெரிந்த பிறகே மகனுக்கு அழைப்பு விடுக்கிறார். குணாவின் தந்தை இளவரசின் நிலைப்பாடோ இன்னொரு ரகம். ஜோதிடத்தில் தீவிரம் காட்டும்…
Read More2 k லவ் ஸ்டோரி – திரை விமர்சனம்
கார்த்திக்-மோனிகா 2கே இளைஞர்கள். சிறு வயது முதலே நண்பர்கள். இருவரும் இணைந்து ப்ரி வெட்டிங் போட்டோ சூட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களிடையே நீடிக்கும் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறும் என்று நண்பர்கள் வட்டாரம் எதிர்பார்த்து இருக்க ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இவர்கள் நட்பிலேயே நிலைத்து நிற்கிறார்கள். இந்நிலையில் சக கல்லூரித் தோழி பவித்ரா கார்த்திக் மேல் காதலாகி தன் விருப்பம் தெரிவிக்க, அவனோ மோனிகா ஓகே சொன்னால் உன் காதலை ஏற்பதில் தடை ஏதும் இல்லை என்கிறான். ஒரு சில கண்டிஷன்களோடு மோனிகாவும் கார்த்திக்- பவித்ரா காதலுக்கு ஓகே சொல்ல….இதன் பிறகு புதிய காதல் ஜோடி கேரளாவுக்கு பைக்கில் டூர் செல்ல, பாதி வழியில் நடந்த விபத்தில் பவித்ரா உயிரிழக்கிறாள். இந்த காலகட்டத்தில் கார்த்திக்,- மோனிகாவின் நட்பு அவர்களின் பெற்றோர்களையே இது…
Read Moreதினசரி – திரை விமர்சனம்
ஐடி துறையில் கை நிறைய சம்பாதிக்கும் ஸ்ரீகாந்த்துக்கு தன் வருங்கால மனைவி தன்னைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அவருக்கு அமைந்த மனைவியோ திருமணத்துக்கு பின் வேலைக்கு போவதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார். பெண் பார்க்க போகும் ஸ்ரீகாந்தின் அம்மா மணப்பெண்ணின் இந்த கண்டிஷனை மகனிடம் மறைத்து விட… திருமணம் நடக்கிறது. அதன் பிறகு ஸ்ரீகாந்த் உண்மை தெரிகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை உள்வாங்கி கொள்ளும் ஸ்ரீகாந்த் தனியார் எதிர்நிறுவனத்தில் கடன் வாங்கி அதிக முதலீடுகளை செய்கிறார். இப்படி ஒரு கோடி வரை அவர் பணம் கட்டிய நிலையில்தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்து விட… இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோருக்கே அன்னியமாகி போகிறார் ஸ்ரீகாந்த். கடலில் இருந்து மேய்டாரா கடலில் இருந்து மேட்டரா அவரை ஒதுக்கி வைத்த குடும்பம் மீண்டும் அவரை அரவணைத்துக்…
Read Moreஃபயர் – திரை விமர்சனம்
நல்லவன் போல் நடித்து பெண்களை வேட்டையாடும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரின் மறுபக்கமே கதை. ஏமாந்த பெண்களின் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் அந்த பிசியோதெரபிஸ்ட் ஒருநாள் திடீரென காணாமல் போகிறார். மகனை காணவில்லை என்று மருத்துவரின் பெற்றோர் போலீசில் புகார் தர, காமுக வேட்டையில் கைதேர்ந்த அந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் என்னவானார் என்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதைக்காக ஏ சான்றிதழ் வழங்கி இருந்தாலும் கொண்ட கருத்துக்காக நிஜமாகவே இது ‘ஏ ஒன்’ படமாகவும் ஆகி இருக்கிறது நாகர்கோவிலை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் காசி தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து படுக்கையில்வீழ்த்துவதோடு அதை வீடியோவாகவும் எடுத்து கூசாமல் அவர்களிடமிருந்து லட்சங்களை கறக்கிறான். போலீஸ் விசாரணையில் இது தெரிய வரும்போது அவனால் பாதிக்கப்பட்ட யாரேனும் அவன் கதையை முடித்து…
Read Moreதண்டேல் – திரை விமர்சனம்
கடலளவு காதல் கொண்ட காதல் ஜோடியில் காதலன் மீன் பிடிக்கப் போய் அந்நிய எல்லையில் மாட்டிக் கொண்டால்… அந்த ஊரின் பாரம்பரிய தொழிலே மீன் பிடித்தல் தான். அதன்படி நாயகனும் தந்தை வழியில் மீன் பிடி தொழிலை தொடர்கிறான். வருஷத்தில் ஒன்பது மாதம் கடல் மூன்று மாதம் வீடு என்றிருக்கும் அவன் வாழ்க்கையின் ஒரே சந்தோஷம் அவனது உயிர்க் காதலி தான். தரையில் இருக்கும் மூன்று மாத காலமும் மீதி ஒன்பது மாதத்துக்கான காதலையும் சேர்த்து கொட்டுகிறார்கள் இந்த காதலர்கள். இதில் சோதனையாக நாயகியின் உறவுக்காரர் மீன் பிடிக்கப் போய் கடும் புயலில் படகு கவிழ்ந்து உயிரை விட…இதனால் பயந்து போகும் காதலி இனி மீன் பிடிக்க போக வேண்டாம் என்று காதலனுக்கு அன்பு கட்டளை இடுகிறாள். அப்போதைக்கு சரி என்று தலையாட்டி விட்டு காதலியிடம் சொல்லாமலே…
Read Moreவிடா முயற்சி – திரை விமர்சனம்
பயணத்தில் மனைவியை தொலைத்த கணவன் அவளைத் தேடும் அபாய படலமே இந்த விடாமுயற்சி.அதில் நாயகனுக்கு வெற்றி கிடைத்ததா என்பதை பரபரப்புடன் காட்சிப் படுத்தியிருக்கும் படம். அஜர்பைஜான் நாட்டில் காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் அஜித். இனிய இல்லறத்தில் தாய்மை அடைகிறார் திரிஷா. ஆனால் எதிர்பாராத விபத்தொன்றில் குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்து விட, திரிஷா மட்டும் உயிர் பிழைக்கிறார். ஆனால் இந்த விபத்து அவருக்கு மறுபடியும் பிள்ளைப் பேற்றுக்கான வாய்ப்பை அடியோடு தகர்த்து விட, அப்போது முதலே தம்பதிகளுக்குள் சில்லறை பேதங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்குகிறது. 12 வருடத்தில் அதுவே பூதாகரமாக வளர்ந்து திரிஷா விவாகரத்து கேட்பதில் போய் நிற்கிறது அதுவரை ஊரில் உள்ள பெற்றோருடன் இருந்து கொள்கிறேன் என்றும் சொல்கிறார். மனைவியின் முடிவு அதிர்ச்சி தந்தாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல் காரில் திரிஷாவின் பெற்றோர் இருக்கும் ஊருக்கு அழைத்துச்…
Read Moreராஜ பீமா – திரை விமர்சனம்
சிறுவயதில் அம்மாவை இழந்த ராஜா மனதளவில் பாதிக்கப்படுகிறார். மருத்துவரும் தாயின் அன்புக்கு ஈடாக இன்னொரு அன்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவான் என்று நம்பிக்கை தர…. இந்த சூழலில் காட்டில் இருந்து ஊருக்குள் வந்த ஒரு குட்டி யானை ஊரையே நடுநடுங்க வைத்த நேரத்தில் அந்த யானையை தனது அன்பான நடவடிக்கைகளால் ராஜா இயல்புக்கு கொண்டு வருகிறான். இப்போது மகன் ராஜா முகத்தில் மீண்டும் மலர்ச்சியை பார்த்த அவனது அப்பா யானைக்கு பீமா என பெயரிட்டு வனத்துறை அனுமதியுடன் வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா வளர்க்கும் யானை பீமாவை அரசு சார்பில் நடத்தப்படும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள் வனத்துறை ஊழியர்கள். ராஜா முகாமுக்கு சென்று பார்க்கும் போது பீமா அங்கில்லை. வேறு யானையை காட்டி இதுதான் அவரது யானை என்று…
Read More
