கதை… நாயகன் விஜய் சத்யா.. தன் மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.. ஒருநாள் ஷாப்பிங் சென்று விட்டு இவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு அமைச்சரின் மகன் இவரிடம் பிரச்சனை செய்கிறார்.. மனைவி மகளைக் காப்பாற்றிக் கொண்டு தப்பித்தும் சென்று விடுகிறார்.. ஆனால் மந்திரி மகன் கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது.. இதனை எடுத்து போலீசின் கவனம் இவர் பக்கம் திரும்பி விடுகிறது… அதன் பிறகு என்ன நடந்தது? அமைச்சரிடம் இருந்து தப்பித்தாரா.? போலீஸிடம் இருந்து தப்பித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர் – நடிகையர் : பாட்டு ஃபைட் என இரண்டிலும் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் சத்யா.. கிளைமாக்ஸ் சீனில் சட்டையை கழட்டி விட்டு அவர் மோதும் சண்டை காட்சி வேற லெவல் ரகம்.. ஸ்மார்ட்டான இவருக்கு…
Read MoreCategory: விமர்சனம்
மெய்யழகன் விமர்சனம்.. உறங்காத உறவுகள் 4.5/5
கதை.. தஞ்சாவூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் அரவிந்த்சாமி.. சொத்து பிரச்சனை காரணமாக இவரது குடும்பம் தனித்துவிடப்பட பெற்றோருடன் சென்னையில் குடியேறுகிறார். திருமணம் ஆகி மனைவி தேவதர்ஷினி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அரவிந்தசாமி ஒரு கட்டத்தில் தன் சித்தி மகள் திருமணத்திற்காக தன் சொந்த ஊருக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்தசாமி அங்கு கார்த்தியை சந்திக்கிறார். சிறு வயது முதலே அரவிந்த்சாமி மீது அதீத பாசம் கொண்ட கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார்.. ஆனால் கார்த்தி யார் என்று கூட தெரியாமல் வேறு வழி இல்லாமல் அவருடன் கொஞ்சமாக பேசுகிறார்.. போன் நம்பர் கொடுப்பதை கூட தவிர்க்கிறார். இவர் யார்.. இவர் நமக்கு எதற்காக செய்ய வேண்டும்.. அத்தான் அத்தான் என்று…
Read Moreசட்டம் என் கையில் – விமர்சனம்
கதை… ஏற்காட்டில் ஓர் இரவு நேரத்தில் காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார் நாயகன் சதீஷ்.. ஏற்கனவே மன உளைச்சலில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென டூவீலரில் வந்த ஒருவன் மீது இடித்து விடுகிறார் சதீஷ்.. அந்த விபத்தில் மரணம் அடைந்த அவரை வேறு வழி இல்லாமல் கார் டிக்கியில் போட்டுக் கொண்டு பயணம் செய்கிறார். காட்டுப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபடும்போது குற்றத்திலிருந்து தப்பிக்க சரக்கு அடித்தது போல் நடிக்கிறார்.. மேலும் போலீஸ் பாவல் நவகிதனே அடித்து விடுகிறார்.. இதனை எடுத்து போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அனைத்து வழக்குகளையும் சதீஷ் மீது போட காவல்துறை திட்டமிடுகிறது.. ஆனால் போலீஸ் பாவல் மீது மற்றொரு போலீஸ் அஜய் ஈகோ மோதலில் இருக்கிறார். இதனை பயன்படுத்த திட்டமிடுகிறார் சதீஷ். அதன் பிறகு சதீஷ் என்ன செய்தார்…
Read Moreலப்பர் பந்து விமர்சனம் 4.5/5.. பறக்கும் பந்து
கதை… தினேஷ் ஜோடி ஸ்வஸ்விகா… ஹரிஷ் கல்யாண் ஜோடி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.. தினேஷ் மற்றும் ஹரிஷ் இருவரும் கிரிக்கெட் வெறியர்கள்.. இதில் தினேஷ் (கெத்து) – அவர் விஜயகாந்த் ரசிகர்.. ஹரிஷ் (அன்பு) இவர் விஜய் ரசிகர் 20 வயது ஆகும் முன்பே தன் காதலியை கரம் பிடித்தவர் தினேஷ்.. இவருக்கு 20 வயது மகள் இருக்கும்போது இவருக்கு கிரிக்கெட் வீரன் ஆர்வம் குறையவில்லை இதனால் மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை வருகிறது.. மேலும் கிரிக்கெட் போட்டியின் போது தினேஷுக்கும் ஹரிஷுக்கும் ஈகோ மோதல் வெடிக்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹரிசை காதலிக்கிறார் தினேஷ் மகள் சஞ்சனா.. ஏற்கனவே தினேஷின் கிரிக்கெட் ஆர்வத்தால் தன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் ஸ்வஸ்விகா மகளின் காதலை எதிர்க்கிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது.? கிரிக்கெட் மருமகனை ஸ்வஸ்விகா தினேஷ் ஏற்றுக்…
Read Moreகடைசி உலகப்போர்- திரை விமர்சனம்
இதுவரை நட்பு ரொமான்ஸ் என பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ஹிப் ஹாப் ஆதி… இந்த முறை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் இறங்கி வித்தியாசமான ஒரு படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். கதை… 2028 ல் நடக்கும் கதையை வடிவமைத்திருக்கிறார்.. ஐ நா சபைக்கு போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு உருவாகுகிறது.. அதில் இணைந்து கொள்ள இந்தியா மறுக்கும் போது அத்துமீறி இந்தியர்களை கைக்குள் கொண்டு வருகிறது அந்த அமைப்பு.. அப்போது மோதல் போர் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? ஆதியின் பங்கு என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி என்றாலும் படம் முழுக்க வருவதும் வாய்ஸ் ஓவரில் பேசுவதும்…
Read Moreநந்தன் – திரைவிமர்சனம்
கதை… புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற பகுதியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.. போட்டியே இல்லாத ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல்… இவரது வீட்டில் அப்பாவுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலையாளாக இருக்கிறார் சசிகுமார்… இவர்களின் பகுதி தலித்துகளுக்கான ரிசர்வ் பகுதியாக மாற்றப்படுகிறது. இதனை அடுத்து வேறு வழி இன்றி தன் வீட்டில் பணிபுரியும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்தி வீட்டில் வேலை செய்த சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவரான பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. நடிகர்கள்.. சசிகுமார் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து அம்பேத்குமார் என்ற கேரக்டரை அசத்தலாக வடிவமைத்து இருக்கிறார்.. ஒரு கமர்சியல் ஹீரோ இந்த அளவிற்கு துணிந்து செய்ய தயங்குவார்..…
Read Moreகோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்
கதை… ஐஸ்வர்யா தத்தாவின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் ஊரில் இல்லாததால் இவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்.. இதனை அறிந்து கொண்ட கணவர் இவர்களை தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்.. எனவே குழந்தைகளையும் கணவனையும் தவிக்க விட்டு கள்ளக்காதனுடன் ஓடி விடுகிறார் ஐஸ்வர்யா தத்தா.. அம்மாவும் ஓடி விட்ட நிலையில் அப்பாவும் இவர்களை துரத்தி விடுகின்ற சூழ்நிலையில் நாயகன் ஏகன் மற்றும் அவரது தங்கை சத்யதேவி இருவரும் இவர்களின் பெரியப்பா யோகி பாபு வளர்ப்பில் வளர்கின்றனர். அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? தந்தை தாய் இல்லாத இந்த குழந்தைகள் என்னென்ன போராட்டங்களை சந்தித்தனர் என்பதை வலிகளுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.. நடிகர்கள்… நாயகன் ஏகன்… முதல்…
Read Moreதோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம்
கதை… ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயகன் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார்.. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தடைகளைத் தாண்டி கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் வில்லனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் வலுக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார் சத்யராஜ். இந்த சூழ்நிலையில் கல்லூரி கேண்டினில் பணி புரியும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி விடுகிறார் வில்லன்.. இதனை அடுத்து நாயகன் அவரை அடித்து துவைத்து விடுகிறார். பலர் முன்னே தன்னை அவமானப்படுத்திய நாயகனை தீர்த்து கட்ட முடிவு எடுக்கிறார் வில்லன்.. அதன் பின்னர் என்ன நடந்தது?இருவருக்குமான மோதல் தீர்வுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை.. நடிகர்கள்… இதில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நட்சத்திர அடையாளத்திற்காக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. இவர்களோடு படத்தின் இயக்குநர்…
Read Moreஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்) விமர்சனம் 4/5
அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை… வான்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்ற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் ஆகியோர் கைகளில் சிக்கியது எப்படி அதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது எப்படி என்பதை சுவையாக சொல்லி இருக்கும் படம். ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்). கேரளாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும், அஜயன் களரியில் செம கில்லாடி.. மேலும் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பிளம்பர் பணிகளையும் செய்து வருகிறார்.. இவரது தாத்தா அந்த ஊரில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து வருகிறது.. தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் இந்தக் குற்றச்சாட்டை அஜயன்…
Read MoreGOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – விமர்சனம் 3.75/5
கதை… விஜய்யின் மனைவி சினேகா.. இவர்களுக்கு ஒரு மகன்.. சினேகா 2வது குழந்தைக்காக கர்ப்பிணியாக காத்திருக்கிறார். பிரசாந்த் மனைவி லைலா.. இவர்களுக்கு ஒரு மகள்.. விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர். ஒரு நாட்டிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதியையும் பிடிக்க SAT squad டீம் களம் இறங்குகிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் தனது 2வது ஹனிமூனுக்காக சினேகா மற்றும் தனது மகனுடன் தாய்லாந்த் செல்கிறார் விஜய்.. அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனை சமயத்தில் தன் மகனை தொலைத்து விடுகிறார்.. இதனை எடுத்து விஜய்யை பிரியும் சினேகா 15 ஆண்டுகளாக தன் மகளை மட்டும் வளர்த்து வருகிறார். அதன் பிறகு…
Read More
