எளிதான தலைப்பில் வந்திருக்கும் அக்கா தம்பி பாசக் கதை. எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி. அவரது பாசமிகு அக்கா பூமிகா. அக்கா திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகள் என்று செட்டிலாகி விட… தம்பி ஜெயம் ரவியோ அனுதினமும் தனது லா பாயிண்ட்டில் பெற்றோருக்கு தலைவலி தர, ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு அதுவே நெஞ்சு வலியில் முடிய, பதறிப் போய் ஊட்டியில் இருந்து ஓடிவரும் அக்கா, தம்பியை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துப் போகிறார். அங்கே ஒரு ஆறு மாத காலம் தங்க வைத்து தம்பியை திருத்தி அனுப்பி வைப்பதாக அப்பாவுக்கு வாக்கு கொடுக்கிறார். ஆனால் போன இடத்தில் ஜெயம் ரவியின் லா பாயிண்ட் இன்னும் பிரச்சனையாகிறது. எதற்கும் எல்லாவற்றுக்கும் டைம் டேபிள் போட்டு வாழும் அந்த குடும்பத்தில் இருந்து அக்கா குடும்பம் பிரிய தம்பியே…
Read MoreCategory: விமர்சனம்
லக்கி பாஸ்கர் – திரை விமர்சனம்
தீபாவளிக்கு பான் இந்தியா திரைப்படமாக வந்திருக்கிறார் இந்த லக்கி பாஸ்கர். கதை 1990 இல் தொடங்குகிறது. அதிகாலை வாக்கிங் முடித்து பால் பாக்கெட் வாங்க வரும் துல்கர் சல்மானை சுத்தி வளைக்கும் சிபிஐ. அப்படியே அவரை வங்கிக்கு அள்ளிக் கொண்டு போகிறது. அவரது வங்கிக் கணக்கை சோதனையிடும் சிபிஐ அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். வங்கி கணக்கு இருப்பு மட்டும் 100 கோடிக்கு மேல் இருந்தால் அதிர்ச்சி சகஜம் தானே. ஒரு வங்கி உதவி பொது மேலாளர் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி என்ற வினாக் குறியுடன் தொடங்கி வியப்புக் குறியுடன் முடிகிறது படம். மும்பையில் பல பல வங்கியில் மாதம் ரூ. 6000 சம்பளத்தில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு கடனாக இருப்பதோ ரூ 16,000. அடுத்து வரவிருக்கும் உதவி மேலாளர் பிரமோஷனில் சம்பளம் டபுள் ஆகும்.…
Read Moreபிளடி பெக்கர் – திரை விமர்சனம
தமிழ்த் திரைக்கு எப்போதாவது இம்மாதிரியான கதைக்களம் சிறப்பு சேர்க்கும். அப்படியொரு படம் இது. பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்ட நாயகனுடன் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவனும் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் கோடீஸ்வரர் ஒருவரின் நினைவு நாளையொட்டி 25 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடாகிறது. இந்த 25 பேரில் ஒருவனாக நமது நாயகனும் அழைக்கப்பட, போகிறான். அங்கே வயிறார சாப்பிட்டு முடித்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு ஆசை. இந்த பங்களாவுக்குள் ஒரு முறையாவது போய் வந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. பல கட்டுப்பாடுகளை தாண்டி அந்த பங்களாவுக்குள் நுழைகிறான் நாயகன். அங்கே ஒரு நிஜ பேயையும் சொத்துக்கு அடித்துக் கொள்ளும் சில பணப்பேய் களையும் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நாயகன் அங்கிருந்து உயிரோடு திரும்பி வர முடிந்ததா என்பது திகு…
Read Moreசேவகர் – திரை விமர்சனம்
‘சேவகர்’படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார். அவருடன் சுனில் குமார் பி ஜி ,இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் இணைந்துள்ளனர். நாட்டில் எங்கு அநியாயம் அக்கிரமம் நடந்தாலும் துணிந்து நின்று தட்டிக் கேட்கும் ஒருவராக கதாநாயகன் பிரஜின். அவருக்கு உடன் நின்று கைகொடுக்க…
Read Moreஒற்றை பனைமரம் – திரை விமர்சனம்
இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்கள் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் ராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். அவரோ கர்ப்பிணி மனைவியை ராணுவத்தின்குண்டு வீச்சுக்கு பறி கொடுத்தவர். ஆனால் போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளை சக மனிதர்கள் சிலர் கேட்கும் அளவுக்கு அங்கே விரக்தி கொட்டிக் கிடக்கிறது. போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி பணிய வைக்கின்றனர். ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடியை தொழிலாக செய்யத்…
Read Moreஆலன் விமர்சனம்… ஆபத்தில்லா பயணம்
கதை… சித்தப்பாக்களின் பணத்தாசை வெறியால் தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறார் நாயகன் வெற்றி.. பின்னர் இவரது அப்பாவின் நண்பர் உதவியுடன் சென்னைக்கு சென்று ஒரு மேன்ஷனில் தங்குகிறார்.. ஆனால் அங்கே தங்க மனமில்லாமல் காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே பல வருடங்களை கழிக்கும் அவர் ஆன்மீகத்திலும் ஆர்வமில்லாமல் தாத்தாவின் சொல்படி எழுத்து உலகிற்கு திரும்புகிறார். அங்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார்.. அந்தப் பெண்தான் இனி தன் வாழ்க்கை என்று காதல் வாழ்க்கையில் திளைக்கும் இவர் திடீரென காதலின் மரணத்தால் குழம்பி தவிக்கிறார். அதன் பிறகு இவர் என்ன செய்தார்..? குடும்ப அதன் பிறகு இவரது பாதை ஆன்மீக பாதையா? குடும்ப வாழ்க்கையா? எழுத்து உலகமா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்… கமர்சியல் ஆக்சன் என பாதைகளை தேர்ந்தெடுக்காமல் படத்திற்கு படம் வித்தியாசமான…
Read Moreராக்கெட் டிரைவர் விமர்சனம்… ஆட்டோவில் அப்துல் கலாம்
கதை… நாயகன் விஷ்வத் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும் இவர் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வறுமையின் காரணமாக அது முடியாமல் போகவே ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டிராபிக் போலீஸ் நாயகி சுனைனா.. கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இல்லாமல் கருணை உள்ள கொண்ட நாயகியாக நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஒருநாள் விஷ்வத் ஆட்டோவில் சவாரி செய்ய இளவயது அப்துல் கலாம் வருகிறார்.. இதனால் அவருக்கு சந்தேகம் வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் தான் டைம் ட்ராவல் செய்து தற்போது தன் ஆட்டோவில் சவாரி செய்ய வருகிறார் என்பதை உணர்ந்து கொள்கிறார். ஆனால் அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்ய வந்த நோக்கம் என்ன என்பது புரியாமல் குழம்பி நிற்கிறார். தான் டைம் ட்ராவல் செய்து இந்த காலகட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?என்பதை அறிய…
Read Moreசார் – திரைப்பட விமர்சனம் – மதிப்பீடு : 3/5
சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘சார்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் 1950- 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் படமாக ‘சார்’ உருவாகி இருக்கிறது. கோலோச்சு குடும்பம் எனும் குடும்பம் மாங்கொல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினராக எழுத்தாளர் ஜெயபாலன் இருக்கிறார். இவர் சாமியாடி. அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை தருவதற்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை என்பவர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை…
Read Moreஆர்யமாலா – திரைப்பட விமர்சனம்
கூத்துக் கலையை முன்னிலைப்படுத்தி தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படைப்புகள் வருகை தந்து.. ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அந்த வகையில் தெருக்கூத்தினை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த ஆர்யமாலா எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம். இந்தக் கதை 1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா ஜித். இவளுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். மனிஷா பருவ வயதை கடந்த பின்னரும் பூப்படையாமல் இருக்கிறார். இவருடைய தங்கை ஒரு நாள் வயதுக்கு வந்து விடுகிறார். இது மனிஷாவிற்கு சந்தோஷத்தை அளிக்காமல் வருத்தத்தை அளிக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் மனிஷாவையும், அவரது தாயையும் மறைமுகமாக குறை கூறுகிறார்கள். வயதுக்கு வந்த…
Read Moreவேட்டையன் – திரை விமர்சனம் – 4/5
நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நபர்களின் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம். அடுத்து இந்தக் கதைக்கான நாயகன் ரஜினி . கதையின் நாயகனான அவர் கேரக்டராகவே மாறி முழு படத்தையும் தாங்கியிருப்பது இன்னொரு சிறப்பு. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரவுடிகளை சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா விஜயன்) தனியார் நீட் கோச்சிங் சென்டரின் அப்பட்டமான மோசடியை எதிர்த்து துணிச்சலாக போராடுகிறார். அப்பாவிகளை எமாற்றி கோடிகளில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் காரர்கள் சும்மா இருப்பார்களா? ஆம், அதே தான் நடக்கிறது. சரண்யா கொலையாகிறார், அதுவும் பாலியல் பலாத்கார அடையாளத்துடன். அந்த வழக்கு விசாரணையில்…
Read More