சில படங்கள் மட்டுமே நேற்றும் இன்றும் நாளையும் ரசிகர்களின் ரசனைப் பட்டியலில் இருக்கும்.அப்படி ஒரு படமே நாயகன். வெளி வந்து 39 ஆண்டுகளுக்கு பிறகும் அதன் மெருகு மாறாமல் அதன் உணர்வும் மாறாமல் திரைக்கு வந்து இருக்கிறது நாயகன். நடிகர் கமல்ஹாசனுக்கு நாயக பிம்பத்தை உறுதி செய்த படம் இது. மும்பையில் கோலோச்சிய வரதராஜ முதலியார் வாழ்க்கை பின்னணியை கதையாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.(சினிமாவுக்காக வேலு நாயக்கர்) அதில் நாயகனாக தன்னை முழுசாக பொருத்திக்கொண்டார் கமல். மக்களால் வாழ்பவன் தலைவன் அல்ல. மக்களுக்காக வாழ்பவனே தலைவன். அப்படி வாழ்ந்த வரதராஜ முதலியார் சரித்திரத்தில் படம் முழுக்க வரதராஜ முதலியாராகவே வாழ்ந்து நடிப்பு சரித்திரம் படைத்திருந்தார் கமல். சரி கதைக்கு வருவோம். ஒரு மனிதனை சூழ்நிலை எப்படி குற்றவாளியாக மாற் றுகிறது?அதே மனிதன் மக்களின் இதயத்தில் எப்படி தெய்வமாக உயர்கிறான்…
Read MoreCategory: விமர்சனம்
ஆரோமலே – திரை விமர்சனம்
ஆரோமலே என்பதற்கு ‘என் அன்பே’ என்று பொருள். ஒவ்வொரு பருவத்திலும் ஒரு இளைஞனுக்கு வரும் அடுத்தடுத்த காதலை சொல்வது தான் படம். அவன் பள்ளி பருவத்தில் காதலிக்கிறான். அதில் தோல்வி. கல்லூரி பருவத்தில் காதலிக்கிறான். அதுவும் தோல்வி. படிப்பை முடித்து வேலையில் சேரும் போது அந்த அலுவலகத்தில் மேனேஜராக இருக்கும் பெண் மீது காதல் வசப்படுகிறான். இந்தக் காதலாவது கனியும் என்று பார்த்தால் அதுவும் சில காரணங்களால் ஊத்திக் கொள்கிறது. இந்த காதலுக்கு முடிவு தான் என்ன என்பதை திரை மொழியில் சுவாரசியமாகவே சொல்லி இருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் சாரங் தியாகு. இவர் நடிகர் தியாகுவின் வாரிசு. ஒவ்வொரு காலகட்டத்திலும் காதலை தேடுவதையே தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்திருக்கும் இளைஞன் கேரக்டரில் கிஷான் தாஸ் வருகிறார். ஒவ்வொரு பருவ காதல் தோல்வியின் போதும் சோகம் பொங்கும்…
Read Moreகிறிஸ்டினா கதிர்வேலன் — திரை விமர்சனம்
தலைப்பை பார்த்ததுமே இரு மதங்களைச் சேர்ந்த காதல் ஜோடிகள். இவர்களுக்கு திருமணம் என்று வரும்போது அவரவர் மதங்கள் முட்டி மோதிக் கொள்ளும் என்று தோன்றுகிறது அல்லவா. அதுதான் இல்லை. படத்தில் மதத்துக்கு எந்த ஒரு இடத்திலும் மதம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம் அதுவே படத்தை வேறு கோணத்தில் அழகாக இட்டுச் சென்று விடுகிறது. கதை இதுதான். கல்லூரி மாணவி கிறிஸ்டினாவை அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் கதிர்வேலன் விரும்புகிறான். ஆரம்பத்தில் இது விஷயத்தில் அசிரத்தையாக இருந்த நாயகி, போகப் போக நாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறாள். இந்த சூழலில் இதே கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடிக்கு ரகசியமாய் பதிவு திருமணம் நடத்த சக மாணவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த கல்யாணத்துக்கு சாட்சியாக நாயகன் நாயகி இருவரும் தங்கள் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கிறார்கள். ஆனால்…
Read Moreபரிசு – திரை விமர்சனம்
சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் அளவு என்பார்கள். இங்கே நம் கதையின் நாயகி அந்த எல்லையை கூட தாண்டி விடுகிறார். லட்சியத்தை நோக்கிய அவரது பயணத்தில் அவரது முயற்சிகள் அனைத்தும் முத்துக்கள் ஆனதா என்பதை சொல்லும் படம் இது. நாயகி ஜான்விகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். அவளது தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதால் எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றுவதை லட்சியமாக வைத்திருக்கிறார். அறிவோடு அழகு, அழகோடு அறிவு. இதுதான் ஜான்விகா என்னும் போது அவர் மீது காதல் அம்புகள் வீசப்படாமல் இருக்குமா… வீசுகிறார்கள். பூங்கொத்தை வழங்கி காதல் சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் அவர்களின் காதல் வீச்சுகளை கடந்து செல்கிறார் ஜான்விகா. விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் ஜான்விகா, தந்தையிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். எகிப்தில்,…
Read Moreஅதர்ஸ் – திரை விமர்சனம்
சாலையில் திட்டமிடப்பட்டு ஒரு விபத்து நடக்கிறது. தலை குப்புற விழுந்து நொறுங்கும் அந்த வாகனத்தில் வந்த நால்வரும் இறந்து போகிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள்.ஒருவர் ஆண் . காவல்துறை விசாரணையில் இறந்த அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள். அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் என்பது தெரியவர, விசாரணை மேலும் சூடு பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விசாரணை கருத்தரிப்பு மையமாகச் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே ஐ வி எஃப் எனப்படும் In Vitro Fertilization முறையில் கருத்தரிப்பு செய்யப்படும் செயல்பாடுகளில் மோசடிகள் இருப்பது அம்பலமாகிறது. அதன் மூலம் கருவைச் சுமக்கும் பெண்களும், கருவில் உள்ள குழந்தைகளும் அபாயத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது. சட்டவிரோத ஸ்டீராய்டுகள், முறைகேடான கொடையாளர்கள் மற்றும் ஊழல் நிறைந்த கருவுறுதல் என்று போகிறது. இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?இறந்துபோனவர்களுக்கும்…
Read Moreவட்டக்கானல் – திரை விமர்சனம்
கொடைக்கானலில் உள்ள ஒரு எழில் கொஞ்சும் காட்டுப்பகுதியே வட்டக்கானல். இந்த வனப்பகுதி யில் வளரும் ஒரு வகை மேஜிக் மஷ்ரூம் என்று அழைக்கப்படும் போதைக் காளான் தான் இந்த கதையின் மையம். ஆர் கே சுரேஷ் அந்தப் போதைக் காளான் செடிகளைப் பயிரிட்டுக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பார்க்கிறார். அவர் ஆதரவற்ற மூன்று சிறுவர்களை அடியாட்கள் ரேஞ்சுக்கு வளர்த்து தனது தீவிர விசுவாசிகளாக வைத்திருக்கிறார். (துருவன் மனோ, கபாலி விஸ்வந்த்,விஜய் டிவி சரத் ஆகியோர்.) அவர்களும் வளர்ப்பு தந்தையின் மீது உயிராய் இருக்கி றார்கள். அப்பா, அப்பா என்று அவர் சொன்னபடி கேட்கிறார்கள். அவர் சொல்கிற ஆட்களை அடித்து நொறுக்குகிறார்கள். அவரது நிழல் வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்நிலையில் தனது கணவனைக் கொன்றுவிட்டு சொத்தை அபகரித்துச் சுருட்டிக் கொண்டதற்காக பல ஆண்டுகளாக ஆர்கே சுரேஷைப் பழிவாங்க…
Read Moreதடை அதை உடை – திரை விமர்சனம்
1990 களில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் குணா பாபு, தயாரிப்பாளரிடம் இந்த உண்மை சம்பவத்தை கூறுகிறார். அது தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் நிராகரிக்கிறார். அதனால், அவர் வேறு ஒரு கதையை தயார் செய்து சொல்கிறார். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட.. மீண்டும் கதை சொல்ல முயற்சிக்கிறார். இதிலாவது அவர் வெற்றி பெற்று இயக்குநர் ஆனாரா என்பது கதை. இப்போது அவர் உருவாக்கிய கதைக்கு வருவோம். ஏழைத் தந்தை ஒருவர் அந்தஊர் பெரிய மனிதர் ஒருவரிடம் வாங்கிய கடனுக்கு காலத்துக்கும் அடிமையாக இருக்க வேண்டிய கட்டாயம். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப வாரிசுகளும் அந்தக் குடும்பத்துக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். இதில் கொடுமை என்னவென்றால்…
Read Moreதேசிய தலைவர் –திரை விமர்சனம்
சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து கதை தொடங்குகிறது. ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முத்துராம லிங்க தேவர், ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அது சமயத்தில் ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். இதற்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் பயணி ப்பவர், கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி, பார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைகிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் முத்துராமலிங்க தேவர், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த தலைவராக உருவெடுக்கிறார். முத்துராமலிங்க தேவரின் வளர்ச்சியி ல் அச்சமடையும் காங்கிரஸ் தலைமை அவரை மீண்டும் காங்கிரஸில் இணைய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. அது முடியாமல் போக, அவர்…
Read Moreராம் அப்துல்லா ஆன்டனி — திரை விமர்சனம்
இளம் சிறார்களின் தடம் மாறிப் போன வாழ்க்கை. ராம் அப்துல்லா ஆண்டனி மூவரும் ஒரே பள்ளி மாணவர்கள். நண்பர்கள். மதங்களை தாண்டிய நட்பு இவர்களுடையது,. ஒரு நாள் மூன்று நண்பர்களும் ஒன்றிணைந்து தொழிலதிபர் வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர். இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கொலைக்கு பின்னான அதிர்ச்சி தகவல் தெரிய வர, சட்டம் தன் கடமையை செய்கிறது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் போனார்கள் என்பது கிளைமாக்ஸ் வரையிலான மீதிக்கதை. நண்பர்களாக பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் வருகிறார்கள். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக காட்சிகளில்…
Read Moreஆண்பாவம் பொல்லாதது — திரை விமர்சனம்
இளம் தம்பதிகளின் இனிய இல்லற வாழ்க்கையில் ஈகோ புகுந்தால்… நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இளம் தம்பதிகளின் மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் திடீரென்று இடைப்படும் ஈகோ அவர்களை விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. கோர்ட்டில் மனைவி விவாகரத்து கேட்க, கனவனோ சேர்ந்து வாழவே விருப்பம் என்கிறான். இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை தற்போதைய காலகட்ட தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாக அதே நேரம் கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள். இளம் தம்பதிகளாக ரியோ ராஜ் மற்றும் மாளவிகா முழு படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான ‘ஈகோ கெமிஸ்ட்ரி’ வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து படம் அசுர வேகத்துக்கு தாவுகிறது. வருத்தமான வாழ்க்கையில் பொருத்தமான ஜோடியாக இவர்கள் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சின்னச்…
Read More