விஜய் டிவியின் அசத்தலான கலகலப்பான “ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்” நிகழ்ச்சி

சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய கலகலப்பான ரியாலிட்டி கேம் ஷோவை களம் இறக்கியுள்ளது. விஜய் டிவி ஒரு ஷோவை பண்ணாலே அது வேற லெவல் தான். அந்த வரிசையில் ஒரு புத்தம் புதிய கன்ஷெப்ட் தான் “Happy Wife Happy Life” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8, 2026 அன்று பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பெரிய ஹைலைட் என்னவென்றால்.. எப்போதும் எனர்ஜி குறையாமல் பேசும் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோ, தம்பதிகளுக்கு இடையேயான புரிதலை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் மூன்று பிரபல…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் படத்தின் டைட்டில் ட்ராக் ‘ஆரி ஆரி’ வெளியானது

சமீபத்தில் வெளியான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரெய்லர் தொடர்ந்து சாதனை படைத்து வருவதோடு, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே, அதில் பின்னணி இசையாக வந்த ‘ஆரி ஆரி’ பாடலை ரசிகர்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். மேலும், இப்பாடலின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த அதிரடியான பாடல் டி-சீரிஸ் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது. துடிப்பான பீட்ஸ், வலிமையான குரல்கள் மற்றும் அதிரடி ராப் வரிகள் அடங்கிய இந்த பாடல், படத்தின் தீவிரமான உலகை பிரதிபலிப்பதோடு, அடுத்த பெரிய வைரல் ஆந்தமாக மாறும் வகையில் ஒரு சிறந்த இசை அனுபவத்தை வழங்குகிறது. ஷாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, அவரே அரேஞ்ச் மற்றும் ப்ரோக்ராமிங் செய்துள்ளார். நவீன இசையுடன் பஞ்சாபி தாக்கத்தை இணைத்து, கேட்போரை ஆட வைக்கும் வகையில் இந்த…

Read More

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில்…

Read More

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் துரந்தர் முதல் பாகம்!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் படம், துரந்தர் பழிவாங்கல் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக மார்ச் 12 இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் மார்ச் 19 அன்று இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், உலக அளவில் பிளாக்பஸ்டர் ஆன அதன் முதல் பாகம் சர்வதேச அளவில் மீண்டும் திரையிடப்பட உள்ளது. துரந்தர் திரைப்படத்தின் அலையே இன்னும் ஓயவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ள நிலையில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துரந்தர் முதல் பாகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகின்றன. உலகெங்கிலும் சுமார் 500 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. இந்தியாவில் மார்ச் 12 இன்று…

Read More

போலீஸ் ஃபேமிலி – விமர்சனம்…

    கதை… வாலிபர் ஒருவரை கஞ்சா கடத்தல் வழக்கில் காதல் சுகுமார் உள்ளிட்ட போலீஸ் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.. அவர் மீது வழக்கு போட்டு ஒப்புக்கொள்ள சொல்கின்றனர் ஆனால் அவர் மறுக்கிறார்.. ஒரு கட்டத்தில் மயக்கம் அடைந்து மரணம் அடைகிறார்.. அவர் பெரிய தாதா சரவணன் மகன் என தெரிய வருகிறது.. எனவே அவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தால் பிரச்சனை என்பதால் அவரைக் ஒரு காட்டின் மையப்பகுதியில் விட்டு விடுகின்றனர். மகனின் மரணம் அறிந்த சரவணன் மரணத்திற்கு காரணமான நான்கு போலீசையும் பழித் தீர்க்க நினைக்கிறார். போலீஸ் அதிகாரிகளும் நாங்கள் கொல்லவில்லை என்கின்றனர்.. குற்றவாளி யார் என சரவணன் கேட்க அவர்களுக்கு பதில் தெரியவில்லை.. இந்த சூழ்நிலையில் அடுத்தது என்ன நடந்தது.? நிஜமாகக் கொன்றது யார் என்பதெல்லாம் சுவாரசியமான கதை.. நடிகர்கள்… 1.…

Read More

Made in Korea – விமர்சனம்

  கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. கதை… தமிழ்நாட்டில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன்.. ஆனால் இவருக்கு கொரியாவிற்கு சென்று அங்கு செட்டில் ஆக வேண்டும் எண்ணம் சிறு வயது முதலே எழுந்து விடுகிறது.. கொரியாவுக்கு போக என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார்.. ஆனால் பெற்றோருக்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப எண்ணம் இல்லை.. இந்த சூழ்நிலையில் காதலனுடன் இணைந்து விடுகிறார் பிரியங்கா.. ஒரு கட்டத்தில் காதலனை திருமணம் செய்து கொள்கிறார்.. பிரியங்காவின் ஆசைப்படி கொரியாவுக்கு அனுப்பி வைக்கிறான்.. ஆனால் தனியாக…

Read More

வெஞ்சென்ஸ் – விமர்சனம்

ஏசி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்க, ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி நடித்துள்ள பரபரப்பான அரசியல் படம் ‘வெஞ்சென்ஸ்’. கதை… சிறு வயது முதலே தன் பெயர் எப்போது முதன்மையாக இருக்க வேண்டும் தன்னைப் பற்றி பலரும் புகழ வேண்டும் பேச வேண்டும் என விரும்புபவர் அபர்ணதி.. எனவே நன்றாக படித்து மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார்.. அதன் பின்னர் அடுத்தடுத்து படித்து பெரிய அளவில் உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வருகிறார். இவரின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் எப்போதும் இவரது பெயர் பல செய்திகளில் வருகிறது.. அரசியல்வாதிகளை இவரை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்.. இவர் வளர்ந்து வருவதால் அரசியல் எதிரிகள் உருவாகுகின்றனர்.. இதனால் அடுத்தது என்ன நடந்தது.? அரசியல்வாதிகளை எப்படி இந்த கலெக்டர் சமாளித்தார் என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… அபர்ணதி, காளி வெங்கட்,…

Read More

‘தாய் கிழவி’ படத்துக்கு பிறகு கிழவி கதைகளாக வருகிறது – நடிகை ராதிகா கலகலப்பு

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள்…

Read More

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’

ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார். அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை என். பி. ஸ்ரீகாந்த் கவனிக்க கலை இயக்கத்தை வி. சண்முகராஜா மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை…

Read More

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படக்குழுவினர் இன்று நடிகை வாழை ஜானகி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தனுஷ் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்தவர். வாழை படத்தில் புகழ் பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகை வாழை ஜானகி பிறந்தநாளை கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடினார். அருகில் விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், ஜெயக்குமார், சிரஞ்சீவி, பிஆர்ஓ கோவிந்தராஜ்.

Read More