மலையோரத்தில் இயற்கையின் கொடையாய் காளக்கம்மாய்ப்பட்டி கிராமம். ஒரு காலத்தில் அங்கே மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். மலை யுச்சியில் மயில் அகவும் ஓசையும் அதைத்தொடர்ந்து வானில் தெரியும் ஜோதியும் அவர்கள் தெய்வ நம்பிக்கையாக இருந்தது. இந்த அடையாளங்களுக்கு பிறகு தான் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு திருவிழா நடத்துவார்கள். ஆனால் சோதனையாக இந்த அறிகுறிகள் ஒரு காலத்தில் வராமல் போகவே, தங்களின் யார் தெய்வ குற்றம் செய்திருப்பார்கள் என்று அவர்களுக்குள் இரு பிரிவாக பிரிந்து அடித்துக் கொள்கிறார்கள். இதற்கிடையே இயற்கைச் சீரழிவால் மலையில் இருந்து உருண்டு விழுந்த பெரிய கல் இரண்டாக உடைந்து கிடக்க… பெரிய கல்லை ஒரு கூட்டமும் சிறிய கல்லை இன்னொரு கூட்டமும் எடுத்துக் கொண்டு தெய்வமாக வழிபடத் தொடங்குகிறது.இதன் பிறகு காளக்கம்மாய்ப்பட்டி என்ற அந்த ஊர் காளப்பட்டியாகவும் கம்மாய்ப் பட்டியாகவும் இரண்டாக பிரிகிறது. ஒரு பிரிவினரிடம்…
Read Moreசிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!
தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.” மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார். தில்ஜித் தோசாஞ் –…
Read More100 பிரபலங்கள் வெளியிடும் ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்!
கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது. இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில்…
Read Moreதவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!
‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் ‘தணல்’ படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது. ‘தணல்’ குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, “‘தணல்’ படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்” என்றார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, “‘தணல்’ படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின்…
Read More-அர்ஜுன் தாசின் மாறுபட்ட நடிப்பில் ,’பாம்’ -எப்படி இருக்கிறது?,
கைதி படத்தில் வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் அது முதல் தமிழ் திரையலகின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். தொடர்ந்து அநீதி உள்ளிட்ட படங்களில் நாயகன் ஆனாலும், கதை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப தன்னை நடிப்பில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இப்போது அவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் பாம் படத்தில் கிராமத்து நாயகனாக முற்றிலும் புதுவித நடிப்பை தந்து இருக்கிறார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப் புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். வேற்றுமையால் இரண்டாக பிரிந்த ஊரை ஒன்றாக்க விரும்பும் நண்பனுக்கு தோள் கொடுக்கிறார். எதிர்பாராத விதமாய் நண்பன் இறந்து போக, நண்பனின் பிணத்தை வைத்தே ஊரை ஒன்று சேர்க்கிறார். அது எப்படி என்பது சுவாரசிய கதைக்களம். கதையின் நாயகன் மணி முத்துவாக அர்ஜுன் தாஸ். கிராமத்து கதைக் கேற்ப மண் மணம்…
Read Moreஉன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த…
Read Moreதிரைக்கதை எழுத்தாளர் & நடிகை சாந்தி பாலச்சந்திரனின் எழுத்து லோகா Chapter 1 – சந்திராவை வரலாற்றில் பதித்தது
உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா, இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற நடிப்புகள், செழுமையான தயாரிப்பு மதிப்புகள், தொழில்நுட்பத் திறமைகள் ஆகியவை இதனை உயர்த்திக் கொண்டிருந்தாலும், இந்த படைப்பின் ஆழத்தை அதிகரித்த முக்கிய அம்சமாகும் – நடிகையுமான சாந்தி பாலச்சந்திரன் இணை எழுத்தாளராக பங்களித்திருப்பது. தமிழ் ரசிகர்கள்…
Read Moreமுதன்முறையாக, நடனம், நடிப்பு என ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபுதேவா, Sony LIV தமிழ் ஒரிஜினல் சேதுராஜன் IPS மூலம் OTT உலகில் அறிமுகமாகிறார்.
கிராமிய தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட இந்த crime thriller தொடரில், பிரபுதேவா தன் வழக்கமான கவர்ச்சியை விட்டு விலகி, பலத்த கம்பீரத்துடன், அரசியலுடன் பின்னிப்பிணைந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவலராக நடிக்கிறார். ஆற்றல், அடையாளம், நீதிக்கான போராட்டம் ஆகியவை மையமாகும். இந்தக் கதையில், பிரபுதேவாவின் நடிப்புப் பரிமாற்றம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். தனது கதாபாத்திரம் குறித்து பிரபுதேவா கூறியது: சேதுராஜன் IPS ஒரு காவலர் மட்டும் அல்ல, கடமை, அடையாளம், அரசியல் ஆகிய புயலில் சிக்கிக்கொள்ளும் மனிதர். இந்தக் கதாபாத்திரம் எனக்கு முந்தைய அனுபவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, மிகவும் சவாலாக இருந்தது. இந்தக் கதை இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது என நம்புகிறேன். வேரூன்றிய தைரியமான கதைகளை முன்வைக்கும் Sony LIV, இந்தத் தொடரையும் அதே உறுதிப்பாட்டுடன் வழங்குகிறது.” ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகும்…
Read Moreமஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம். பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது. இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள் யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதைப் பேசுகிறது. விதிவிலக்கு இல்லாமல் எல்லா மதமும் இதைத்தான் பேசுகிறது, வயசுக்கு வந்தவுடன் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது கணவனை இழந்த பெண் எந்த ஒரு காரியத்திற்கும் முன்…
Read Moreஆரோமலே – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை! இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ஆரோமலே’, தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளிக்குப் பிறகு ரொமான்டிக் காமெடி வகை படமாக வெளியாக உள்ளது. பழம்பெரும் நடிகர் தியாகுவின் மகனான சரங் தியாகு இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ எனும் தனது தனியார் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ். வினோத் குமார் தயாரித்துள்ளார். சித்து குமார் இசை ரசிகர்களை கவர்ந்து பாடல்கள் ஹிட் அடிக்கும் நிலையில், பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. கிஷன் தாஸ் –…
Read More