ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது. நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புஷ்பா2’ திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல…
Read MoreDNA – திரை விமர்சனம்
காதல் தோல்வியால் மனமுடைந்து மதுவு க்கு அடிமையான அதர்வாவுக்கும், சூது வாது அறியாத அதேநேரம் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் நிமிஷா சஜயனுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்ததும் கடத்தப்பட்டு, வேறு ஒரு குழந்தை அவர்கள் வசம் தரப்படுகிறது. இது என் குழந்தை அல்ல என்கிறாள் தாய். இதுவே தான் உன் குழந்தை என்கிறது, மருத்துவமனை நிர்வாகம். முதலில் மனைவி சொன்னதை நம்பாத கணவன் அதர்வா அதன் பிறகு நம்பி போலீஸிடம் போகிறார். போலீஸ் உதவியுடன் கடத்தப்பட்ட குழந்தையை தேடும் படலம் தொடர்கிறது. குழந்தை கிடைத்ததா? குழந்தை கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை. மதுவுக்கு அடிமையான இளைஞர், பொறுப்பான கணவர், கடத்தப்பட்ட குழந்தையை தேடி அலையும் அப்பா என ஒவ்வொரு கோணத்திலும் நடிப்பில்…
Read Moreகுபேரா திரை விமர்சனம்
வங்கக் கடலில் கண்டுபிடிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் லட்சம் கோடிகளை தனக்கு சொந்தமாக்கத் துடிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் நீரஜ் குப்தா, அதற்காக அந்த துறை மந்திரியை சந்தித்து பேசுகிறார். அரசுக்கு சொந்தமான எண்ணெய் வளத்தை தனியார்க்கு தாரை வார்த்தால் அப்புறமாய் அவர் கோடிகளில் குளிப்பார் என்பது மந்திரிக்கு தெரியாதா என்ன… அதனால் பேரம் பேசுகிறார். ஒரு லட்சம் கோடி பணமாக கை மாறினால் இது சாத்தியம் என்கிறார். அதோடு இந்த பணத்தில் அந்த துறை சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுக்கு பத்தாயிரம் கோடி என பிக்ஸ் செய்கிறார். இதற்கு மந்திரி போடும் ஒரே கண்டிஷன், தரும் கோடிகள் கருப்பு பணமாக அல்லாமல் வெள்ளையாக தரப்பட வேண்டும். இந்த டீலுக்கு சம்மதிக்கும் தொழிலதிபர், செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை இது விஷயமாய் சந்திக்கிறார். உன்…
Read More“வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்
நேஷனல், 18 ஜூன் 2025: யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மூச்சடைக்க வைக்கும் பிர்மமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு…
Read Moreசமூக விழிப்புணர்வுடன் உருவான சுயாதீன திரைப்படம் ‘மாயக்கூத்து’ வெளியீட்டுக்குத் தயாராகிறது!
ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”. சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்து, இப்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் A.R.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இவர், திரைப்பட இயக்குனர் பிரம்மா அவர்களிடம் உதவியாளராகவும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல குறும்படங்கள் செய்த அனுபவமும் கொண்டவர். மேலும், இவர் கதையில் உருவான “உடன்பால்” என்ற திரைப்படம் பல முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான டெல்லி கணேஷ், மு ராமசாமி மற்றும் சாய் தீனா அவர்களுடன், முக்கிய கதாபாத்திரத்தில்…
Read Moreஅமீர்க்கு பேரரசு பதிலடி!
அரசியலில் ஆன்மீகம் கூடாது என்று அரசியலில்வாதியோடு நின்று கூவுகிறீர்கள் அமீர்! உங்களுக்கு ஆன்மீகம் பிரச்சனை இல்லை, இந்து மதம் தான் பிரச்சனை! ஓட்டுக்காக உங்களை சிறுபான்மையினர்! சிறுபான்மையினர் என்று கூவுகிறார்களே அவர்கள் உங்களுக்கு அரசியல்வாதியாக தெரியவில்லையா? இந்து மதத்துக்குள் இருந்து கொண்டு இந்துக் கடவுளை விமர்சிப்பவன் நாத்திகவாதியாக அறியப்படுவான்! கடவுள் நம்பிக்கையோடு ஒரு மதத்தில் இருந்து கொண்டு இன்னொரு மதத்தில் மூக்கை நுழைப்பவன் மதவாதியாகதான் கருதப்படுவான்! ஒரு காலத்தில் கொள்கையாக இருந்த நாத்திகம் இன்று அரசியல் ஆகிவிட்டது. அரசியல்வாதியாக இருந்து கொண்டு நாத்திகம் பேசுவார்களை பார்த்து அரசியலில் நாத்திகம் பேசாதே என்று உங்களால் கூற முடியுமா? ரம்ஜானுக்கும் கிறிஸ்மஸுக்கும் அந்தந்த ஆலயங்களுக்கு சென்று வேஷம் போடும் அரசியல்வாதிகள், இந்து பண்டிகைகளை புறம் தள்ளுகிறார்களே அவர்களுக்கு எதிராக உங்களால் குரல் கொடுக்க முடியுமா? கோவிலுக்குள் வந்த சில அரசியல்வாதிகள்…
Read More‘கருப்பு’ – ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட தலைப்பு!
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு’. அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம் ‘கருப்பு’. அவர்களின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இத்திரைப்படத்தில் இருவருமே முற்றிலும் புதிய, வித்தியாசமான கதாபாத்திரங்களி தோன்றவுள்ளார்கள். முதல் பார்வை, டீசர்,…
Read MoreVeo3 AI: புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திய பன் பட்டர் ஜாம் திரைப்படக்குழு
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். பார்பதற்கு உண்மையான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் போல் தோன்றும் இவை அனைத்தும் முழுக்க முழுக்க 0 மற்றும் 1, பைனரி கோடால் (Binary code)ஆல் உருவாக்கப்பட்டது. அத்தனை தத்ரூபமாக ஒளிப்படங்களை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை, கடந்த மே மாதம் தான் Google நிறுவனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்கும் திறமை கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இன்னும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள்ளாகவே, இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “பன் பட்டர் ஜாம்” குழு மாபெரும் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது. Veo3 AI தொழில்நுட்பத்தின்…
Read MoreSony Liv-ல் ஜூலை 4ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் – “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்”;
Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “தி ஹண்ட்”. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள வெவ்வேறு யதார்த்தக் கதையான “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்” வெப்சீரிஸ், ஜூலை 4ஆம் தேதி முதல் Sony LIV தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான ‘Ninety Days’-ஐ அடிப்படையாகக் கொண்டது. அவரது நேரடி விசாரணை அனுபவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உளவுத்துறை தோல்விகள், இருண்ட அரசியல் உறவுகள், தர்மத்தின் பெயரில் மனித இழப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான வகையில் ஆராய்கிறது. இத்திரைப்படத்தின் திரைக்கதை,…
Read MoreSony Liv-ல் ஜூலை 4ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் – “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்”!!
Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த திரைப்படம் தான் “தி ஹண்ட்”. இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள வெவ்வேறு யதார்த்தக் கதையான “தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்” வெப்சீரிஸ், ஜூலை 4ஆம் தேதி முதல் Sony LIV தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான ‘Ninety Days’-ஐ அடிப்படையாகக் கொண்டது. அவரது நேரடி விசாரணை அனுபவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உளவுத்துறை தோல்விகள், இருண்ட அரசியல் உறவுகள், தர்மத்தின் பெயரில் மனித இழப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான வகையில் ஆராய்கிறது. இத்திரைப்படத்தின் திரைக்கதை,…
Read More