சென்னை, டிசம்பர் 27, 2024: வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் Correspondent திரு.எம்.வி.எம்.வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, திருமதி.வி.மித்ரா, மற்றும் திருமதி.கே.நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். உலக அரங்கில் சாதனைகள். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. தங்களது சிறப்பான ஆட்டத்தால் தேசத்திற்குப் பெருமை சேர்த்த சாம்பியன்கள், வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தால் தலா ஐம்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக ₹50,00000/- வழங்கப்பட்டது. இந்தப் பாராட்டுச் சின்னம், இந்தியாவில் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அமைப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் பிரதிநிதி , நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்த சாம்பியன்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியை பாராட்டினார். “தங்கள் துறையில்…
Read Moreமேக்ஸ் – திரை விமர்சனம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கிச்சா சுதீப் நேர்மையானவர். தப்பு செய்பவர்களுக்கு அவர் கொடுக்கும் ட்ரீட்மென்ட்டே தனி. இதில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தால் கூட அஞ்சாமல் நடவடிக்கை எடுப்பவர். அரசியல்வாதிகள் தரப்பில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இரு ந்து பிரஷர் வந்தாலும் அதையெல்லாம் சட்டை செய்யாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பவர். இதனால் இந்த நேர்மைக்கான பரிசாக அடிக்கடி சஸ்பெண்டும் உண்டு. இந்நிலையில் சஸ்பெண்ட் முடிந்து புதிய ஊருக்கு மாற்றலாகி வருகிறார். நாளை பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இன்று பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இரண்டு மந்திரிகளின் மகன்களை ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். அவர்கள் மீது எஃப் ஐ ஆர் போடச் சொல்பவர், மறுநாள் சார்ஜ் எடுத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளதாக கூறி செல்கிறார். மறுநாள் காலை அதிர்ச்சி பொழுதாக விடிகிறது. லாக்கப்பில் இருந்த அந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த…
Read Moreகலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது. கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி…
Read Moreமனிதத்தை முன்னே வைப்போம்! அரசியலை பின்னே வைப்போம்!! இயக்குனர் பேரரசு அறிக்கை…
இன்று சாட்டையடி போராட்டத்தை கிண்டலடிக்கும் பல நூறு வாய்களில் ஒரு வாய் கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணிற்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத வாய்கள்தான் இவைகள்! கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவான இந்தப் போராட்டம் இவர்களுக்கு நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் தெரிகிறது என்றால் இவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை? காம குற்றவாளிக்கு எதிரான போராட்டத்தை கிண்டல் செய்வது அவனவன் அவன் முகத்தில் செருப்பால் அடித்துக் கொள்வதற்கு சமம்! இதுவே இவர்களின் சகோதரியை ஒருவன் சீரழித்து, சீரழித்தவன் தன் கட்சிகாரனாக இருந்தால் அவனுக்கு இந்த குரல்கள் ஆதரவாக இருக்குமா? வன்மத்தை கக்கும் வாடகைக்கு கத்தும் இந்த வாய்கள் இப்படி கிண்டலடிக்குமா? பாலியல் குற்றம் செய்தவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் அவன் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி! கட்சிப் பார்த்து கண்டிப்பது மனிதகுணத்துக்கு முரணானது. போராட்டம் எப்படிப்பட்டது என்பது…
Read Moreராஜா கிளி – திரை விமர்சனம்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வரும் சமுத்திரக்கனி, ஒரு நாள் குப்பையில் கிடைப்பதை எடுத்து பசியாறும் பெரியவர் ஒருவரை பார்க்கிறார். அவரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். ஒரு நாள்அவர் வசம் இருந்த டைரியை படித்து பார்த்த போது உண்மையிலேயே அவர் பிச்சைக்காரர் அல்ல.கோடீஸ்வரனான பிரபல தொழிலதிபர் முருகப்பன் என்பது தெரிய வர, அதிர்ந்து போகிறார் சமுத்திரக்கனி. கோடிகளை குவித்த அவர் ஏன் இந்த கடை நிலைக்கு வந்தார்? என்பதை சொல்வதே இந்த ராஜாகிளி. மனம் நலம் பாதிக்கப்பட்டவராக அந்த கேரக்டரில் தம்பி ராமையா பார்க்கும்போதே மனதுக்குள் பரிதாபம் எட்டிப் பார்த்து விடுகிறது. இதே தம்பி ராமையா செல்வந்தர் முருகப்பனாக வரும் காட்சிகளில் நடிப்பில் ஏகப்பட்ட வித்தியாசம். நடை உடை பாவனை என அனைத்திலும் செல்வந்தருக்கான கெத்து அச்சு பிசகாமல் வெளிப்படுகிறது. பெண்கள் மீதான…
Read Moreகத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு ” SIGTA ” விருது
உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா. 2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க,…
Read More” திருக்குறள் ” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம்
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை…. இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா,…
Read Moreஸ்மைல் மேன் – திரை விமர்சனம்
கிரைம் திரில்லர் பட ரசிகர்களுக்கான ஸ்பெஷல் படையல் இது. நடிகர் சரத்குமார் நடிப்பில் இது 150 வது படம் என்பதும், இந்தப் படமும் அவர் பெயர் சொல்லும் என்பதும் இன்னொரு சிறப்பு. தலையில் அடிபட்டு சிகிச்சைக்குப் பின் தேறி வந்த சரத்குமாருக்கு ஓராண்டுக்குள் படிப்படியாக பழைய நினைவுகள் மறந்து போகும் என்று டாக்டர் பயமுறுத்த… இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரை அதிர்ச்சியில் வைத்திருந்த ஸ்மைல் மேன் கொலை மீண்டும் தொடர்கிறது. மனிதர்களை கடத்திச் சென்று கொலை செய்வதோடு, பிணத்தின் வாயை கிழித்து பற்கள் தெரிய சிரிப்பது போல் பொது இடத்தில் வைப்பது கொலையாளி ஸ்டைல். இந்த வழக்கை சி.பி.சி. ஐ.டி. ஸ்ரீகுமார் விசாரிக்கிறார். இந்த விசாரணையில் அவரோடு சரத்குமாரும் இணைந்து கொள்கிறார். முன்னதாக இந்த வழக்கால் தான் தன் வாழ்க்கையே திசை மாறியது என்பதை…
Read Moreஅலங்கு – திரை விமர்சனம்
மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார். நாய் இல்லாமல் நான் இல்லை என்கிற அளவுக்கு நாய் மீது பிரியம் கொண்டவர் அவர். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வேலைக்காக கேரளா செல்பவர் கூடவே தன் பிரியத்துக்குரிய நாயை அழைத்து செல்கிறார். அங்கு எதிர்பாராமல் நடக்கும் வேண்டாத சம்பவத்தை தொடர்ந்து நாய்க்கு ஆபத்து ஏற்படுகிறது. நாயைக் காப்பாற்றும் முயற்சியில் ஒருவரது கையை நாயகன் வெட்டி விடுகிறார். கையை இழந்தவர் ‘குணாநிதி அண்ட் &கோ’வை கொல்ல துடிக்க…அந்த காட்டு வழி பயணம் அவர்களை எதிரிகளிடமிருந்து தப்பிக்க வைத்ததா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.. மலைவாழ் பழங்குடி இளைஞனாக குணாநிதி காட்டுக்குள் நடக்கும் அந்த வீர தீர போராட்டத்தில் அவரது துடிப்பான நடிப்பு அந்த கேரக்டருக்கான நியாயத்தை செய்து விடுகிறது. மலையன் கதாபாத்திரத்தில் காளி…
Read Moreதிரு. மாணிக்கம் – திரை விமர்சனம்
கேரள மாநிலம் குமுளியில் சின்னதாய் ஒரு லாட்டரி கடை நடத்தும் மாணிக்கம் நேர்மையின் அவதாரம். கிடைக்கிற கொஞ்சம் வருமானத்தில் மனைவி இரண்டு குட்டி மகள்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு நாள் கடைக்கு வந்த வெளியூர் பெரியவர் ஒருவர் இரண்டு லாட்டரி சீட்டு வாங்கும் நேரத்தில் அவரது வசம் இருந்த பணம் தொலைந்து போனது தெரிய வர, அந்த சீட்டுகளை பத்திரமாக வைத்திருக்கும்படியும் திரும்ப வரும்போது காசு கொடுத்து வாங்கி செல்வதாகவும் கூறிவிட்டு போகிறார். ஆனால் அவர் வாங்கி இருந்த ரெண்டு சீட்டில் ஒரு சீட்டுக்கு ரூபாய் ஒன்றரை கோடி பரிசு கிடைக்கவே, முகவரி கூட தெரியாத நிலையில் பெரியவரை தேடி பஸ்ஸில் பயணப்படுகிறார். இதற்கிடையே கணவருக்கு சாப்பாடு கொண்டு வரும் மனைவி கடை பூட்டி இருப்பதை கண்டு பக்கத்து கடையில் விசாரிக்கிறார். பக்கத்து…
Read More