மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த…
Read MoreOTT-யிலும் வெற்றிக் கொடி நாட்டும் ‘லவ் ஓ லவ்’ – அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் சாதனை!
திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், தற்போது OTT தளத்திலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இப்படம், பார்வையாளர்களின் பேராதரவால் தற்போது நம்பர் 1 டிரெண்டிங் இடத்தைப் பிடித்து, மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இளைஞன், தனது வாழ்க்கையை ஒரு நாள் தன்னுடைய பார்வையில் வாழ்ந்து பார்க்கும்படி காதலியிடம் சவால் விடுப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அதன் பின்னர் காதல், பொறுப்பு, உறவுகளின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தும் வகையில் உணர்வுபூர்வமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கதை…
Read Moreவிஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசியின் மனதைத் தொடும் குடும்ப நாடகம், தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் நிலைத்த பிணைப்பை ஆராய்கிறது தேசியம், ஆகஸ்ட் 4, 2026: இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தற்போது தமிழ் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. நூறு சாமி…
Read MoreShareChat & Moj’s Quick TV unveils India’s first AI-powered microdrama slate, expanding the future of short-form storytelling
As artificial intelligence rapidly transforms the creative economy, QuickTV by ShareChat & Moj is taking a significant step in redefining premium short-form entertainment. Building on the successful launch of the AI-assisted microdrama Main Amar Hoon, the platform is set to unveil its first dedicated AI-powered microdrama slate this August, comprising six original series that blend compelling storytelling with next-generation production technologies. The announcement is part of Mohalla Tech’s broader vision to scale AI-generated entertainment, with the company planning to invest up to INR 100 crore over the next year…
Read More‘ஆகன்யா’ திரைப்படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் சுப்ரா அய்யப்பா – காதல் பாடலுக்கு வரிகள் எழுதிய பா.விஜய்
தயாரிப்பாளர் திருமலை சிவம் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆகன்யா’. இப்படத்தை இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் – ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபல IT நிறுவனங்கள் மற்றும் மால்களில் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சியமைப்பிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் நாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இதில் சுப்ரா அய்யப்பா முழுநீள ஆக்ஷன் நாயகியாக தோன்றி, சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே தனது சாதுர்யமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவரவுள்ளார். படத்தில் இடம்பெறும் இரண்டு குத்துப் பாடல்களில் ஒன்றில் ஸ்ருஷ்டி டாங்கே உற்சாகமான நடனத்தால் சிறப்பாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் இடம்பெறும் காதல் பாடலுக்கு கவிஞர் பா.விஜய் வரிகள்…
Read Moreசாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்தின் பல்வேறு அங்கங்களை கண்முன் நிறுத்துகிறது. காட்சியமைப்பும், அதற்கு…
Read Moreமனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது. ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மாற்றி, தனிமை மற்றும் இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே…
Read Moreசூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!
சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments) – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments ) – ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four…
Read Moreஇயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி
‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் தொடங்குகிறது. குடும்ப விழுமியங்கள், மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு மற்றும் ஊக்கமளிக்கும் வீரம் ஆகியவற்றை திரையில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய படத்தின் மூலம், நடிகர் கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். இந்த கூட்டணி மூலம் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் மீண்டும் ஒரு தரமான படைப்பை தயாரிக்க முன்வந்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், அனைவராலும் விரும்பப்படும் கார்த்தியின் பரிமாணத்தை இந்தப் படம் மீண்டும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
Read Moreவரவேற்பைப் பெறும் ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்… 50% படப்பிடிப்பு நிறைவு !
நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, படக்குழுவினரை நேரில் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின்…
Read More
