இந்த பல்கலை கழகத்தில் உலக அளவிலே, இந்திய அளவிலே எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாடு போற்றுகிற வகையில் இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க உலக தமிழர்கள் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டும். எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் பெருமிதம். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம். தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு…
Read Moreகயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், ‘மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்’
விருது பெற்ற அரசு சாரா நிறுவனமான யீன் உதான் பற்றிய இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் பழமையான தோபிகாட், வறுமையின் சங்கிலியிலிருந்து விடுபடும் இளம் மாணவர்களின் போராட்டத்தையும் கனவுகளையும் காட்டுகிறது. இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் தாக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், திருமதி வேதிகா அகர்வால் 2017 இல் யீன் உதான் நிறுவப்பட்டது. யீன் உதானின் ஆவணப்படத்தின் திரையிடல் தி-நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸில் நடைபெற்றது. திருமதி ஆண்டாள் அகோரம், திருமதி அர்ச்சனா கல்பாத்தி, மற்றும் செல்வி ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரால் இந்நிகழ்வு சாத்தியமாகியது. இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருமதி அப்சரா ரெட்டி கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சியைப் பாராட்டினார். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலராக தனது…
Read Moreஇயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!
‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’ – பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார். ‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை…
Read Moreபாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம் வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச…
Read Moreஇசை ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும் மிஸ் யூ படத்தின் “சொன்னாரு நைனா” பாடல் !
‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன் துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மிஸ் யூ”. இப்படத்திலிருந்து வெளியான “சொன்னாரு நைனா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையமெங்கும் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், நடிகர் சித்தார்த் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இக்கூட்டணியின் வித்தியாசமான குரலில், ரோகேஷ் வரிகளில், தரை லோக்கல் கானாவாக, கேட்டவுடன் உற்சாகத்தை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல். துள்ளலான நடனத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இசை ரசிகர்களையும், இணைய ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான இப்பாடல் இணையமெங்கும் இப்போது வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் அழகான ரொமான்ஸ் காமெடி ஜானரில் இப்படத்தை…
Read Moreநண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் ‘கெவி’!
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இசையமைப்பாளர் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’ (Hill Anthem) ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸை…
Read More‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாத்தை முன்னிட்டு மூன்றாம் பாகத்திற்கான காணொளியை வெளியிடப்பட்டது !
அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான ‘மர்தானி’யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் கிண்டலாக பகிரப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின் காணொளியை இங்கே காணலாம் : (LINK) ‘மர்தானி’ திரைப்படத்தின் முதல் பாகம் 2014-லும், அதன் தொடர்ச்சியாக கதை மெருகூட்டலுடன் இரண்டாவது பாகம் 2019-லும் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் தனி ரசிகர் பட்டாளத்தை கொணடுள்ளன. உக்கிரமான மற்றும் துணிச்சலான, நியாயத்தின் பக்கம் நிற்கும் ஷிவானி சிவாஜி ராய் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ‘மர்தானி’ படவரிசையின் அடுத்த பாகத்தில் நடித்துள்ளார். மர்தானி பாலின-விதிமுறைகளைத் தகர்த்து, ஆண் ஆதிக்கம் மிகுந்த ஒரு பதவியில் ஒரு பெண் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பதைக் காட்டும் விதமாக, இந்த…
Read Moreரோபோவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் குறும்படம் மெட்டா பியூட்டி
சமீப காலமாக தமிழ் சினிமாவில் சைன்ஸ் பிக்சன் கதைகள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.அந்தவகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு குறும்படம் மெட்டா பியூட்டி இந்த படத்தின் இயக்குனர் ராஜா எம் முத்தையா. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஒரு ரோபர்ட் ஆக திவ்யலெட்சுமி என்ற நடிகையும், அதை உருவாக்கும் விஞ்ஞானியாக அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் அவர்களும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயராஜ், இளங்கோ சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.குறிப்பாக இந்த ரோபர்ட்யை மையமாக வைத்து தான் இந்த கதை உருவாகியுள்ளது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை கலக்க இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமான ரோபோட்டை கதை மூலமாக வைத்து உருவாகி இருக்கும், ஒரு பெண்ணியம் சார்ந்த (பாலியல் வன்புணர்வுக்கு எதிரான) ஒரு விழிப்புணர்வு பைலட் படமான #Meta_Beauty குறும்படத்தின் #firstlook மற்றும் #lyrical_anthem…
Read Moreபுளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை.யோகிபாபு , லக்ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்திநடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால்…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது !!
ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது. சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக்பஸ்டர் “பிம்பிசாரா” திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து, “விஸ்வம்பரா” திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத்…
Read More