₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை! 

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது. டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள்…

Read More

‘தாய்நிலம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயம் மேலே’ பாடலுக்கு தமிழக அரசின் 2 விருதுகள்” ; உற்சாகத்தில் படக்குழுவினர்

நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்நிலம்’. இப்படத்தை அபிலாஷ் ஜி.தேவன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இசையமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் இவர் இசையமைக்கும் முதல் படம் இது. அப்பா, மகள் பாசப் பின்னணியில் இலங்கைப் போரின் கோர தாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி, வர்ஷா ரஞ்சித் பாடியுள்ள ‘ஆகாயம் மேலே’ என்கிற பாடல் ஈழத் தமிழ் மக்களின் இழப்புகளையும் வலியையும் அனாதையாகத் தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் பற்றி கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது. ‘தாய்நிலம் திரைப்படம்’ மாஸ்கோ, டோராண்டோ, ஸ்வீடன், பெங்களூரு இன்டர்நேஷனல், உட்பட 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த திரைப்படம், சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த இசை,…

Read More

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார்.…

Read More

RED LABEL – ரெட் லேபிள் விமர்சனம்…

    கதை… நாயகன் லெனின் இவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்.. இவர் கோவையில் உள்ள பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்.. அந்த கல்லூரியில் தேர்தல் நடக்க உள்ளது இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இவரின் உதவியை நாடுகின்றனர்.. அப்போது இவர் அந்த கல்லூரியில் பர்னிச்சர் ஒர்க் செய்வது போல உள்ளே வந்து அந்த தேர்தல் பணிகளை கவனிக்கிறார்.. எதிர்பாராத விதமாக அப்போது தன் காதலிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொன்றுவிடுகிறார்… ஏற்கனவே இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருக்க இந்த கொலை குற்றத்திற்காக உள்ளே சென்றால் வெளியே வர முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை எடுத்து அந்த கொலையை மறைக்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் கதை.. நடிகர்கள்… Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan…

Read More

வித் லவ் – விமர்சனம்.. காதல் என்றென்றும் தொடரும்..

வித் லவ் விமர்சனம்.. காதல் என்றென்றும் தொடரும்.. கதை… அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நாயகன் நாயகி இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக.. வீட்டில் சொன்னபடி சந்திக்கின்றனர்.. அப்போதுதான் இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஜூனியர் சீனியர் என்பது தெரிய வருகிறது. உனக்கு இதற்கு முன்பு ஏதேனும் காதல் இருந்ததா என்று இருவரும் கேட்கவே இருவருக்கும் காதல் இருந்தது என்கின்றனர்… அப்படியானால் ஒரு இடைவெளி விட்டு நாம் பழைய காதலை சந்திப்போம்.. அதன் பிறகு என்ன நடக்குது பார்க்கலாம் என்று பயணிக்கின்றனர்.. அதன் பிறகு நடப்பது எல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்.. அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணாம் சித்தார்த் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்கி சின்ன கேரக்டர்…

Read More

இரண்டு மொழிகளில் வெளியாகும் மகேந்திரனின் “நீலகண்டா”

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார். இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் “நீலகண்டா” திரைப்படம் தெலுங்கு, தமிழ்,…

Read More

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 அன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது

சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்ய உள்ளார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன. அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர் திரு ஆர்.…

Read More

முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கதை ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” Sweety Naughty Crazy ” ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” என்று இளமை ததும்பும் கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜசேகர்.G இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான த்ரிகுண் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.…

Read More

‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையில் காவல் துறையை மையப்படுத்திய கதை. இதில் பயன்படுத்தப்படும் ’பண்டட்’ என்ற சொல் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு வழக்கத்தில் உள்ள பெயர் மட்டுமே. இந்தக் கதை முழுவதுமே தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் மற்றும் அவர் எடுக்கும் தேர்வுகளை மையமாகக் கொண்டது. எந்தவொரு சாதியையோ, மதத்தையோ அல்லது சமூகத்தையோ பிரதிபலிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இந்தக் கதை உருவாக்கப்படவில்லை. ஒரு கதை சொல்லியாக மிகுந்த பொறுப்புணர்வோடு என்னுடைய கதைகளை அணுகுகிறேன். என் படங்களின் மூலம் நான் சொல்லும் கதைகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் விதமாகவும் அவர்களை மரியாதையோடு நடத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதற்கு முன்பு நான் இயக்கிய மற்ற படங்களைப் போலவே, இந்தத் திரைப்படமும் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் தலைப்பு…

Read More

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ’லெகஸி’ களத்தையும் அதன் குழுவினரையும் 2026ஆம் ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ்!

வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்க்ஸ்டரான பெரியவர் தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும் குறிப்பாக தனது பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க வருகிறார். ‘லெகஸி’ அணியினர் பகிர்ந்து கொண்டதாவது, ”’லெகஸி’ எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி மற்றும் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களை எங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக உணர்ந்து நடித்தோம். குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட இந்தக் கதையில், விட்டு சென்ற பாரம்பரியத்தின் மரபு தனது எதிர்காலத்திற்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை இந்த கதை பேசும். இந்தக் கதையை படமாக்க பிரம்மாண்டமும் கூட்டு முயற்சியும் அவசியமாக இருந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்து இந்த பயணத்தை சாத்தியமாக்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு நன்றி. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள ‘லெகஸி’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மாண்டமாக சென்றடையும் என்பதை…

Read More