கடைசி உலகப்போர்- திரை விமர்சனம்

இதுவரை நட்பு ரொமான்ஸ் என பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ஹிப் ஹாப் ஆதி… இந்த முறை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் இறங்கி வித்தியாசமான ஒரு படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். கதை… 2028 ல் நடக்கும் கதையை வடிவமைத்திருக்கிறார்.. ஐ நா சபைக்கு போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு உருவாகுகிறது.. அதில் இணைந்து கொள்ள இந்தியா மறுக்கும் போது அத்துமீறி இந்தியர்களை கைக்குள் கொண்டு வருகிறது அந்த அமைப்பு.. அப்போது மோதல் போர் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? ஆதியின் பங்கு என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி என்றாலும் படம் முழுக்க வருவதும் வாய்ஸ் ஓவரில் பேசுவதும்…

Read More

நந்தன் – திரைவிமர்சனம்

கதை… புதுக்கோட்டை மாவட்டம் வனங்கான்குடி என்ற பகுதியில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.. போட்டியே இல்லாத ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார் பாலாஜி சக்திவேல்… இவரது வீட்டில் அப்பாவுக்கு பணிவிடை செய்யும் ஒரு வேலையாளாக இருக்கிறார் சசிகுமார்… இவர்களின் பகுதி தலித்துகளுக்கான ரிசர்வ் பகுதியாக மாற்றப்படுகிறது. இதனை அடுத்து வேறு வழி இன்றி தன் வீட்டில் பணிபுரியும் சசிகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார். பாலாஜி சக்தி வீட்டில் வேலை செய்த சசிகுமார் ஊராட்சி மன்ற தலைவரான பின்னர் என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை. நடிகர்கள்.. சசிகுமார் தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து அம்பேத்குமார் என்ற கேரக்டரை அசத்தலாக வடிவமைத்து இருக்கிறார்.. ஒரு கமர்சியல் ஹீரோ இந்த அளவிற்கு துணிந்து செய்ய தயங்குவார்..…

Read More

கோழிப்பண்ணை செல்லத்துரை விமர்சனம்

கதை… ஐஸ்வர்யா தத்தாவின் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் ஊரில் இல்லாததால் இவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்.. இதனை அறிந்து கொண்ட கணவர் இவர்களை தீர்த்து கட்ட முயற்சிக்கிறார்.. எனவே குழந்தைகளையும் கணவனையும் தவிக்க விட்டு கள்ளக்காதனுடன் ஓடி விடுகிறார் ஐஸ்வர்யா தத்தா.. அம்மாவும் ஓடி விட்ட நிலையில் அப்பாவும் இவர்களை துரத்தி விடுகின்ற சூழ்நிலையில் நாயகன் ஏகன் மற்றும் அவரது தங்கை சத்யதேவி இருவரும் இவர்களின் பெரியப்பா யோகி பாபு வளர்ப்பில் வளர்கின்றனர். அதன் பிறகு இவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் என்ன? தந்தை தாய் இல்லாத இந்த குழந்தைகள் என்னென்ன போராட்டங்களை சந்தித்தனர் என்பதை வலிகளுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.. நடிகர்கள்… நாயகன் ஏகன்… முதல்…

Read More

தோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம்

கதை… ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயகன் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார்.. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தடைகளைத் தாண்டி கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் வில்லனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் வலுக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார் சத்யராஜ். இந்த சூழ்நிலையில் கல்லூரி கேண்டினில் பணி புரியும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி விடுகிறார் வில்லன்.. இதனை அடுத்து நாயகன் அவரை அடித்து துவைத்து விடுகிறார். பலர் முன்னே தன்னை அவமானப்படுத்திய நாயகனை தீர்த்து கட்ட முடிவு எடுக்கிறார் வில்லன்.. அதன் பின்னர் என்ன நடந்தது?இருவருக்குமான மோதல் தீர்வுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை.. நடிகர்கள்… இதில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நட்சத்திர அடையாளத்திற்காக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. இவர்களோடு படத்தின் இயக்குநர்…

Read More

ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்) விமர்சனம் 4/5

அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்பதன் மலையாள சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை… வான்வெளியில் இருந்து விழும் எரிகட்களைக் கொண்டு, சியோதி என்ற அதிசய விளக்கு செய்யப்படுகிறது. அது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் ஆகியோர் கைகளில் சிக்கியது எப்படி அதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டது எப்படி என்பதை சுவையாக சொல்லி இருக்கும் படம். ஏஆர்எம் (அஜயண்டே ரண்டாம் மோஷனம்). கேரளாவில் ஒரு கிராமத்தில் வசிக்கும், அஜயன் களரியில் செம கில்லாடி.. மேலும் வாழ்வாதாரத்திற்காக எலக்ட்ரீசியன் பிளம்பர் பணிகளையும் செய்து வருகிறார்.. இவரது தாத்தா அந்த ஊரில் இருக்கும் பழம்பெரும் விலைமதிப்பில்லாத சியோதி விளக்கைத் திருடிச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.. இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து வருகிறது.. தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் இந்தக் குற்றச்சாட்டை அஜயன்…

Read More

GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – விமர்சனம் 3.75/5

கதை… விஜய்யின் மனைவி சினேகா.. இவர்களுக்கு ஒரு மகன்.. சினேகா 2வது குழந்தைக்காக கர்ப்பிணியாக காத்திருக்கிறார். பிரசாந்த் மனைவி லைலா.. இவர்களுக்கு ஒரு மகள்.. விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர். ஒரு நாட்டிற்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதியையும் பிடிக்க SAT squad டீம் களம் இறங்குகிறது. அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் தனது 2வது ஹனிமூனுக்காக சினேகா மற்றும் தனது மகனுடன் தாய்லாந்த் செல்கிறார் விஜய்.. அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனை சமயத்தில் தன் மகனை தொலைத்து விடுகிறார்.. இதனை எடுத்து விஜய்யை பிரியும் சினேகா 15 ஆண்டுகளாக தன் மகளை மட்டும் வளர்த்து வருகிறார். அதன் பிறகு…

Read More

விருந்து – விமர்சனம் 3.75/5.. ஆக்சன் விருந்து

கதை… படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. கொலைக்கான காரணம் என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கையில் சில தினங்களில் அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இதனால் இவர்களது மகள் நிக்கி கல்ராணி மிகுந்த சோகத்தில் இருக்கிறார்.. தன் பெற்றோரின் கொலைக்கு என்ன காரணம் கொலை செய்தவர்கள் யார் என விசாரணையில் இறங்குகிறார் மகள். அப்போது இவரது சந்தேகம் அர்ஜுன் மீது விழுகிறது.. இதனையடுத்து அர்ஜுனை கொல்ல திட்டமிடுகிறார்.. அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம்..? நிஜமாகவே நிக்கி பெற்றோர்களை அர்ஜுன்தான் கொலை செய்தாரா? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் அர்ஜுன்.. தனக்கு படத்தில் ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் மட்டுமே ஸ்கோர்ஸ் செய்ய முடியும்…

Read More

செம்பியன் மாதேவி – விமர்சனம் 3/5

 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கதை… செம்பியன் என்ற கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் நடக்கும் கதை.. நாயகன் வீரா நாயகி மாதேவி.. தன் வீட்டு கோழி பண்ணையில் வேலை பார்க்கும் நபரின் மகளைக் காதலிக்கிறார் நாயகன் வீரா.. நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் அவரின் நல்ல உள்ளம் புரிந்து கொள்ள மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதால் நாயகி கர்ப்பமாகிறாள். இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறால் நாயகி மாதேவி.. ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் நாயகன் வீரா. அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகி என்ன செய்தார்.? உண்மையாக காதலித்த நாயகன் திருமணம்…

Read More

வாழை விமர்சனம் 4.25/5.. வாழை இலை விருந்து

கதை… 1990-களில் நடந்த காலகட்ட கதை இது. பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய தோழர்கள்.. இதில் பொன்வேல் ரஜினி ரசிகன். ராகுல் கமல் ரசிகன்.. இவர்கள் படிக்கும் பள்ளியில் டீச்சராக பணிபுரியும் நிகிலா மீது பொன்வேலுக்கு இனம் புரியாத நேசம் ஏற்படுகிறது.. பள்ளி இல்லாத நாட்களில் பொன்வேல் மற்றும் ராகுல் இருவரும் வாழைத்தார்களை சுமக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். வாழைத்தார்களை சுமப்பது கடினமாக இருப்பதால் ஒரு நாள் காலில் முள் குத்தி விட்டதாக பொய் சொல்லிவிட்டு மாடு மேய்க்க செல்கிறான் பொன்வேல். அப்போது பொன்வேலின் அம்மா மற்றும் அக்கா இருவரும் வாழைத்தாரை சுமக்கும் பணிக்கு செல்கின்றனர். பொன்வேல் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக செல்லும் டீச்சர் நிகிலாவுடன் மாவு அரைக்க செல்கிறான்.. மாலையில் பொன்வேல் வந்து திரும்பி…

Read More

போகுமிடம் வெகு தூரமில்லை விமர்சனம் 4/5.. உத்தம கலைஞன்

 கதை… ஆடுகளம் நரேன் & பவன் இருவரும் அண்ணன் தம்பிகள்.. இருவருக்கும் ஒரே தந்தை என்றாலும் வெவ்வேறு தாய்.. மூத்த தாரத்தின் மகன் நரேன்.. இரண்டாம் தாரத்தின் மகன் பவன்.. எனவே இவர்களுக்கு எப்போது மோதல் இருந்து வருகிறத. இந்த சூழ்நிலையில் இவர்களின் தந்தை சென்னையில் மரணமடைந்து விடுகிறார்.. இதனால் தந்தைக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.. பிணத்தை தங்கள் இடத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வாக்குவாதம் செய்கின்றனர்.. இவர்களின் தந்தை உடலை அமரர் ஊர்தியில் திருநெல்வேலிக்கு எடுத்து வருகிறார் விமல்.. நீ இந்த உடலை ஒழுங்காக கொண்டு சேர்த்தால் நீ கேட்ட பணத்தை தருகிறேன் என முதலாளி சொல்லவே வேறு வழியின்றி மனைவியின் பிரசவத்திற்கு கூட அருகே நிற்காமல் பிணத்தை தனியாக எடுத்து செல்கிறார் விமல். செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர்…

Read More