கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா

  தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர். ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா. இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது…

Read More

Crunchyroll மற்றும் Sony Pictures Entertainment வழங்கும் “Demon Slayer: Kimetsu No Yaiba Infinity Castle” தமிழ் டிரைலர் வெளியீடு;

Link: https://youtu.be/Q4zT7PuBpG0 அனிமேஷன் உலகின் மிகப்பெரிய தளமாக விளங்கும் கிரஞ்சிரோல் (Crunchyroll), சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Sony Pictures Entertainment) இணைந்து, எதிர்பார்ப்புகள் நிறைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யாய்பா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர்களை வெளியிட்டுள்ளன. இந்த மாபெரும் மூன்று பாகத் தொடரின் முதலாவது திரைப்படம், வரும் செப்டம்பர் 12, 2025 அன்று இந்தியாவில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. IMAX®️ மற்றும் பிற பிரீமியம் திரை வடிவங்களிலும் இப்படம் வெளியாகிறது. படம் ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கதை சுருக்கம், தன்ஜிரோ கமாடோவின் குடும்பம் ஒரு டீமனால் கொல்லப்பட்டதும், தன் தங்கை நெசுகோ டீமனாக மாறுகிறார், அவளை மீண்டும் மனிதராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்,…

Read More

“சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம். பத்திரிகை, ஊடக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள். எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றிகள். “சொட்ட சொட்ட நனையுது” படத்தை திரையரங்கில் பார்த்து, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை நீங்கள் பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி…

Read More

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்

மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் “பாலன்” என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். “பாலன்” திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம்…

Read More

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் ‘அக்யூஸ்ட்’ படக்குழு

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து…

Read More

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் *தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…* எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.. *பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.* கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே…

Read More

கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் *தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…* எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.. *பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.* கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே…

Read More

வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும்…

Read More

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா. நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்.

நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்… நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே. அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை. அந்த உரிமை நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அந்த “வாக்குரிமை” தான், ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. அந்த உரிமை எந்தவொரு தனிமனிதனுக்கு மறுக்கப்பட்டாலும், அது நம் தேசத்தை சர்வாதிகாரக் குழிக்குள் தள்ளி விடும். அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல், நம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீக கடமையாகும். அது தான், நம் நாட்டுக்காகப் போராடி, உயிர்த்தியாகங்கள் செய்த, நம் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும், மரியாதையுமாகும். ஆகவே, சுதந்திர தினத்தை கொண்டாடுவதென்பது, வெறும் கொடிகளை ஏற்றி கலைந்து விடாமல், நம் தேசத்தின் அரசியல் சாசன சட்டத்தையும், அது…

Read More

கூலி – திரைவிமர்சனம்

      சென்னையில் ஆண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார் தேவா ( ரஜினி). ஒரு நாள் விசாகப்பட்டினத்தில் இருக்கும் அவரது உயிர் நண்பன் ராஜசேகர் ( சத்யராஜ் ) இறந்து விட்டதாக செய்தி வருகிறது. துக்கம் விசாரிக்க விசாகப்பட்டினம் விரைகிறார். அங்கே சென்றபோது தான் சத்யராஜ் இயற்கையில் மரணமடையவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தை தன் ஆளுமைக்குள் வைத்துக்கொண்டு கடத்தல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் சைமன் கொலை பாதகத்துக்கு அஞ்சாதவன். தன் நிர்வாகத்தில் யார் தப்பு செய்தாலும் மரணம் நிச்சயம். அதற்கேற்ப ஆரம்பத்திலேயே கூலித் தொழிலாளி காளி வெங்கட்டை தூக்கில் தொங்க விடுகிறார்கள். ( போலீஸ் உளவாளியாம். அதனால் இந்த கொடூர தண்டனை) இந்த மாதிரி கொல்லப்பட்டவர்களின் பாடியை அங்கே…

Read More