BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து…
Read More’கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! – பிரபலங்கள் பாராட்டு
விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தார்கள். படம் பார்த்த பிரபலங்கள் அனைவரும் ‘கண்ணப்பா’ திரைப்படம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக இருப்பதோடு, புதிய உலகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பாக இருக்கிறது, என்று…
Read Moreபோரடினால் தான் அனைத்தும் கிடைக்கும்- கயிலன் இயக்குநர் பேச்சு
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ”இங்கு…
Read Moreஅர்த்தமுள்ள படத்தை உருவாக்குகிறோம் என்பது மகிழ்ச்சி!! -இயக்குனர் ஷெரிப்
தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படக்குழு முழு உற்சாகத்துடன் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியதாவது, “காந்தி கண்ணாடி என்பது எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மட்டுமல்ல, எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையை முதன்முறையாக கேட்டவுடனே என் நெஞ்சை தொட்டது போல் ஒரு உணர்வு இருந்தது. படம் முடிந்த பிறகும், ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் இருக்கும்…
Read Moreகண்ணப்பா – திரை விமர்சனம்
சிறு வயது முதலே தெய்வ நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன். அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றனர். அங்குள்ள மலையில் இருக்கும் வாயு லிங்கத்தை கவர்ந்து செல்ல, காளமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் திண்ணனின் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட சிக்கலில் திண்ணனை ஊரை விட்டுத் தள்ளி வைக்கிறார், தலைவரும் அவனது தந்தையுமான நாகநாதன்.திண்ணன் பட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்தில் காளமுகி தலைவன் வாயு லிங்கத்தை கைப்பற்ற பெரும்படையுடன் வருகிறான். இந்த வீர தீர போரில் நாகநாதன் வீர மரணம் அடைகிறார்.இதன் பிறகு தந்தையை கொன்ற காள முகியை திண்ணன் எப்படி அழித்தார்? நாத்திகராக இருந்த அவர், எப்படி சிவபக்தராக மாறினார் என்பது பரபரப்புக்கு குறைவில்லாத கதைக்களம். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப…
Read Moreமார்கன் – திரை விமர்சனம்
க்ரைம் ஃபார்முலா கதைகள் எப்போதுமே சரியான விதத்தில் சொல்லப்பட்டால் வெற்றி நிச்சயம். ஒரு ஊசி போட்டால் உடல் கறுப்பாகி இறக்கும் வேதியியல் ஃபார்முலாவை கண்டு பிடித்த வில்லன், அதை பழி வாங்க பயன்படுத்துகிறார். இந்த விஷ ஊசியால் உயிர் இழக்கும் ரம்யாவின் கொலையில் இருந்து படம் தொடங்குகிறது. தனது மகள் கொல்லப்பட்ட சாயலிலேயே கொல்லப்பட்டிருக்கும் ரம்யாவின் கொலை வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க மும்பையில் இருந்து சென்னை வருகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி. அவரால் கொலையாளியை நெருங்க முடிந்ததா? . அந்த கொடூர கொலையாளி யார்? என்பதை புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள். கொலைகாரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா பாத்திரத்தில் கனிமொழி நடிப்பு மிகவும் சிறப்பு. விசாரணைக்கு உதவும் காவல்துறை அதிகாரிகளாக மகாநதி சங்கர், பிரிகிடா, SDAT ஊழியராக வரும் அம்ஜத் கான் பொருத்தமான…
Read Moreலவ் மேரேஜ் – திரை விமர்சனம்
30 தாண்டிய இளைஞர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் பெண் கிடைப்பதில்லை. ஒரு வழியாக கிடைத்த பெண்ணும் கிடைக்காது போனால்… மதுரையை சேர்ந்த விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை. 25 வயது காலகட்டத்தில் தேடிவந்த மண வாய்ப்புகளில் அலட்சியம் காட்டியதன் விளைவு, இப்போது 33 வயதை எட்டிய நிலையில் பெண் பார்க்கப் போகும் இடங்களில் வயதை காரணம் காட்டி புறக்கணிக்கப்படுகிறார். ஒரு வழியாக புரோக்கர் மூலம் பெண் பார்க்க கோவைக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள்.பெண் பிடித்துப் போக, பெண் வீட்டாருக்கும் சம்மதம். இதனால் தாமதிக்காமல் திருமண நிச்சயதார்த்தம். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு தேதி குறித்து ஊருக்கு கிளம்ப தயாரான நிலையில் கொரோனாவுக்காக ஊரடங்கு சட்டம் அமுல் ஆகிறது. இதனால் பயணத்துக்கு வாய்ப்பு இன்றி மாப்பிள்ளை குடும்பம் அங்கேயே தங்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் மணப்பெண்…
Read Moreஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!!
கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர். படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Read Moreஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!!
கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர். படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Read Moreஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த…
Read More