நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். இயக்குனர் அமீர் பேசுகையில், “திரும்ப திரும்ப மாரியிடம் நீங்கள் ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள்? என கேட்கிறார்கள், இந்த சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என சொல்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியக் கூடிய சாதி, அது ஏற்படுத்திய தீமைகள், கொடுமைகள் குறித்து படம் எடுத்தால், கூடாது என்பதும், கேள்வியை முன் வைப்பது அபத்தமாக இருக்கிறது. மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில்…

Read More

தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் மற்றும்  ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் Production No.1;

Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும், Production No.1 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். புகழ் பெற்ற இயக்குனர் செல்வராகவன் மற்றும் Pan-Indian நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா, முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். “I’m Super, Super, super happy that Pavish is going to…

Read More

80 களில் எல்லாத் தமிழர்களும் படம் பார்த்தார்கள் இன்று 30 சதவீதம் பேர் தான் படம் பார்க்கிறார்கள் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் பேச்சு !!

  காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ” தடை அதை உடை “. இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இசையமைப்பாளர் சாய் சுந்தர் பேசியதாவது.., இது என் முதல் படம், முதல் மேடை.என்னுடைய பாடல்கள் இசை உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் தான் எல்லாப்பாடல்களையும் எழுதினார். மிக அழகாகவே எழுதியுள்ளார்.…

Read More

ஆன்லைன் போலி “ஷேர் மார்க்கெட்” மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்;

ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது “Online Fake Share Market Scams” குறித்து மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் ஒரு புதிய விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில், பிரபல நடிகர் காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், டீசல் படத்தின் “பீர் பாடல்” மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற கானா குணா இப்பாடலை பாடி இருக்கிறார். இந்த விழிப்புணர்வு பாடல் மூலம், போலியான “ஷேர் மார்க்கெட்” முதலீட்டு தளங்களின் காட்சிகள், அவை மக்களை எவ்வாறு ஏமாற்றி பணத்தை பறிக்கின்றன என்பதைக் காட்டி, மக்கள் அதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர…

Read More

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின் பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர்…

Read More

“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.

இடம்பெறுபவர்கள்: வாஹீசன் ராசையா (குரல்)8, அஜய் எஸ். காஷ்யப் (குரல்) மற்றும் இசையமைப்பாளர் தரண் குமார். வழங்குபவர்: டாக்டர் ஜே பி லீலாராம், நி“காக்கும் வடிவேல்” ஒரு புதிய இசை மைல்கல்லைப் பதிவு செய்கிறது.றுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட்(Brand Blitz Entertainment) & இயக்குநர்: கிருபாகர்ஜெய் ஜே. 22 அக்டோபர் 2025 – புதிதாக வெளியான தமிழ்த் தனிப்பாடலான ‘காக்கும் வடிவேல்’ ஏற்கனவே சுயாதீன இசை ஆல்பங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இந்தப் பாடல், வெறும் நான்கு நாட்களில் அரை மில்லியன் பார்வைகளை நெருங்குகிறது. இது அதன் விரைவான, உலகளாவிய ஈர்ப்பு மற்றும் ஏராளமான கேட்போர் வரவேற்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு வலிமையான கூட்டணி இந்த #MuruganVibeSong வாஹீசன் ராசையா மற்றும் அஜய் எஸ். காஷ்யப்…

Read More

இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கும் “மயிலா”, 2026 ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக திரையிடப்படுகிறது.

நடிகை -எழுத்தாளர்-இயக்குனர் செம்மலர் அன்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் வழங்குகிறார். நியூட்டன் சினிமா தயாரித்த இப்படம், 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)-வில் நடைபெறும் “பிரைட் ஃப்யூச்சர்” (Bright Future) பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படும் அனைத்து மொழித் திரைப்படங்களில் ஒன்றாக மயிலா படமும் திரையிடப்பட உள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது. “…

Read More

கவிஞர் வாலி பிறந்தநாள் விழா

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர் வாலி பதிப்பகம் சார்பில்காவிய க் கவிஞர் வாலியின் 94 வது பிறந்தநாள் விழா 1.11.2025 சனிக்கிழமை மாலை இறைச்செல்வர் சிவாலயம் மோகன் அவர்கள் தலைமையில் பண்பாளர் நெல்லை பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் சென்னை தியாகராயநகர் கவியரசு கண்ணதாசன் சிலை அருகில் உள்ள பிடி தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது. வருடம் தோறும் 50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இந்த ஆண்டு எழுத்தாளர் மாலன் அவர்களுக்கும் கவிஞர் கங்கை அமரன் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது விருதுகளை திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ்…

Read More

கவின்–ஆண்ட்ரியா ஜெரெமையா இணைந்து நடித்திருக்கும் மாஸ்க் – நவம்பர் 21 வெளியீடு

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மத்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, படக்குழு வண்ணமயமான புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், படத்தின் OTT உரிமையை Zee5 பெற்றுள்ளதாகவும், ஆடியோ உரிமையை T-Series பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது முந்தைய படங்களில் சிறப்பாக நடித்த கவின், இம்முறை தனது பல்திறனை வெளிப்படுத்தி, பல்துறை திறமையாளர் ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் திரையை பகிர்ந்து கொள்ள உள்ளார். முதன்முறையாக, ருஹானி ஷர்மா கவினின் ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் சார்லி, ரமேஷ்…

Read More

துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இருவருக்கும் மன்சூர் அலிகான் பெரும் பாராட்டு!

விண்ணுக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், புயலுக்கும், விளம்பரம் தேவையில்லை. துருவ் விக்ரம் ஒரு புயல்! அது நின்று, சுழன்று, திரைத்துறையை, உலக சினிமாவை சுழன்றடிக்கும். He Proves his Fathers Blood. தான்பட்ட இன்னல்களை, கழனி, வாய்க்கால், வயல், அருவி, ஓடைகள், நதி, கடலிலிருந்து வெப்பமாய், ஆவியாய், பெரு மேகக் கூட்டமாய், நன்னீராய், கருவுற்று பன்னீராய், பூமிக்கு பொழியும் தாய். விண்ணைப் போல் சாதிய கொடுமை நெருப்பில் வெந்து தப்பித்து, இடியாய்… படைப்புகளை மக்களிடம் சேர்க்கும். வேறுபாடு, சாதித்துவம் ஒழிய பாடுபடும். மாரி செல்வாஜ் இன்னும், படைக்க வேண்டியது நிறைய காலடி தடம்… பதி! பாதை உருவாக்கு…. பின்தொடர்வர்…. கோடி!… பைசன் காளமாடன்… சிறந்து, வெற்றி குவிக்கட்டும்! நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்

Read More