விஜய் முதல்வராக வருவார் – கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி

கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு தையல் மெஷின், 51 மாணவிகளுக்கு ஐபேட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்லும் தலைவர்கள் இல்லை. அமைதியான, வளர்ச்சியான தமிழகத்தை உருவாக்க விஜய் முதலமைச்சராக வர வேண்டும். அவர் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான பாதையில் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவார்.ஜாதி, மதத்தால்,…

Read More

குடியை நிறுத்த இதுதான் காரணம்.. இயக்குநர் ராஜூமுருகன் ஓபன் டாக்!

New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது… இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம். இதுவரைக்கும் சேலை கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன், ஆனால்…

Read More

சின்ன மருகள் சீரியல் வெற்றியை, ரசிகர்களுக்கு மொய் விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி !!

தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி. பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் ஒரு கட்டமாக, மதுரையில் ஜுன் 13 மற்றும் விருதுநகரில் ஜூன் 14 தேதிகளில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம்,…

Read More

ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்- “டேவிட்டின் திரைக்கதை பல வாய்ப்புகளைக் கொடுத்து உற்சாகமாக்கியது” என்று டேவிட் கோப்பின் திரைக்கதையைப் பாராட்டுகிறார் இயக்குநர் கேரத் எட்வர்ட்ஸ்!

டைனோசர்கள் உலகத்தில் மீண்டும் பயணிக்க தயாராகுங்கள்! யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று இந்தியாவில் வெளியாகிறது. உலகம் முழுவதும் ஜூலை 2 அன்று வெளியாகிறது. மூச்சடைக்க வைக்கும் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், ரூபர்ட் ஃப்ரெண்ட்எட் ஸ்க்ரீன் மற்றும் டேவிட் லாகோனோ ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப்…

Read More

ரவுடி லிவிங்ஸ்டனிடம் விசுவாசமிக்க அடியாட்களாக இருப்பவர்கள் வைபவ், மணிகண்ட ராஜேஷ். லிவிங்ஸ்டனின் தொழில் குருவான ஷிகான் உசைனி தனது வீட்டில் ஒரு போலி திருட்டை நடத்த லிவிங்ஸ் டனை கேட்டுக்கொள்ள, அவரும் தனது விசுவாச அடியாட் களை அனுப்புகிறார். இன்சூரன்ஸ் மூலம் அந்த பணத்தை பெற்ற பிறகு கொள்ளையடித்த பணத்தை திருப்பி தந்து விட வேண்டும் என்பது வைபவ் அண்ட் கோவுக்கான அசைன்மென்ட். திட்டப்படி இரண்டு கோடியை கொள்ளையடித்து விடும் வைபவ்வும் மணிகண்டனும் டாஸ்மாக்கில் பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இதனால் விட்ட பணத்தை மீட்க வங்கி கொள்ளை ஒன்றுக்கு திட்டமிட்ட நிலையில் இருக்கும் ஆனந்தராஜ் கோஷ்டியில் இணைகிறார்கள். பூமிக்கடியில் பள்ளம் தோண்டி வங்கியை அடைந்த நிலையில் வங்கியை கொள்ளை அடிக்க முடிந்ததா? என்பதை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள். சிட்டி கேங்ஸ்டர்ஸ் காமெடி கதாபாத்திரத்திரங்களை…

Read More

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது. நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புஷ்பா2’ திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல…

Read More

DNA – திரை விமர்சனம்

காதல் தோல்வியால் மனமுடைந்து மதுவு க்கு அடிமையான அதர்வாவுக்கும், சூது வாது அறியாத அதேநேரம் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் நிமிஷா சஜயனுக்கும் திருமணம் நடக்கிறது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்ததும் கடத்தப்பட்டு, வேறு ஒரு குழந்தை அவர்கள் வசம் தரப்படுகிறது. இது என் குழந்தை அல்ல என்கிறாள் தாய். இதுவே தான் உன் குழந்தை என்கிறது, மருத்துவமனை நிர்வாகம். முதலில் மனைவி சொன்னதை நம்பாத கணவன் அதர்வா அதன் பிறகு நம்பி போலீஸிடம் போகிறார். போலீஸ் உதவியுடன் கடத்தப்பட்ட குழந்தையை தேடும் படலம் தொடர்கிறது. குழந்தை கிடைத்ததா? குழந்தை கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை. மதுவுக்கு அடிமையான இளைஞர், பொறுப்பான கணவர், கடத்தப்பட்ட குழந்தையை தேடி அலையும் அப்பா என ஒவ்வொரு கோணத்திலும் நடிப்பில்…

Read More

குபேரா திரை விமர்சனம்

வங்கக் கடலில் கண்டுபிடிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் லட்சம் கோடிகளை தனக்கு சொந்தமாக்கத் துடிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் நீரஜ் குப்தா, அதற்காக அந்த துறை மந்திரியை சந்தித்து பேசுகிறார். அரசுக்கு சொந்தமான எண்ணெய் வளத்தை தனியார்க்கு தாரை வார்த்தால் அப்புறமாய் அவர் கோடிகளில் குளிப்பார் என்பது மந்திரிக்கு தெரியாதா என்ன… அதனால் பேரம் பேசுகிறார். ஒரு லட்சம் கோடி பணமாக கை மாறினால் இது சாத்தியம் என்கிறார். அதோடு இந்த பணத்தில் அந்த துறை சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுக்கு பத்தாயிரம் கோடி என பிக்ஸ் செய்கிறார். இதற்கு மந்திரி போடும் ஒரே கண்டிஷன், தரும் கோடிகள் கருப்பு பணமாக அல்லாமல் வெள்ளையாக தரப்பட வேண்டும். இந்த டீலுக்கு சம்மதிக்கும் தொழிலதிபர், செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை இது விஷயமாய் சந்திக்கிறார். உன்…

Read More

“வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி” எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி ஜுராசிக் தொடருடனான தனது தனிப்பட்ட தொடர்பையும் அது தன்னை எவ்வாறு கவர்ந்தது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்

நேஷனல், 18 ஜூன் 2025: யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகம்) ஜுராசிக் உலகத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த அத்தியாயமான ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் ஜூலை 4, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மூச்சடைக்க வைக்கும் பிர்மமாண்டமான காட்சிகள் மற்றும் கதைக்களம் என இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. எம்மி விருது வென்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு…

Read More

சமூக விழிப்புணர்வுடன் உருவான சுயாதீன திரைப்படம் ‘மாயக்கூத்து’ வெளியீட்டுக்குத் தயாராகிறது!

ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”. சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்து, இப்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் A.R.ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ளார். இவர், திரைப்பட இயக்குனர் பிரம்மா அவர்களிடம் உதவியாளராகவும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல குறும்படங்கள் செய்த அனுபவமும் கொண்டவர். மேலும், இவர் கதையில் உருவான “உடன்பால்” என்ற திரைப்படம் பல முக்கிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான டெல்லி கணேஷ், மு ராமசாமி மற்றும் சாய் தீனா அவர்களுடன், முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More