Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும்…
Read MoreTN 2026: “அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு அவர் சொன்னார்” – நட்டி நடராஜ்
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை…
Read More*’ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!
‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் இல்லாதது’ ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “மாளவிகா மனோஜ் இந்தப் படத்தில் ‘நிலோஃபர்…
Read Moreலீடர் – விமர்சனம்
கதை… தாய் இல்லாத தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் லெஜென்ட் சரவணன்.. இவர் ஒரு கார் மெக்கானிக்.. ஹார்பரில் உள்ள கார்களுக்கு இவர்தான் மெயின் மெக்கானிக்.. எனவே இவருக்கு ஹார்பருக்குள் எளிதாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. இந்த சூழ்நிலையில் அங்கு போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாக போலீஸ் ஷாம் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தெரிய வருகிறது.. ஆனால் அங்கு போலீஸ் நுழைய முடியாத சூழ்நிலையில் லெஜென்ட் சரவணன் இடம் சில உதவிகளை கேட்கின்றார் ஆண்ட்ரியா.. ஆனால் அது என்னுடைய வேலை இல்லை நான் என்னுடைய கஷ்டமருக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறார் லெஜென் சரவணன்.. இந்த சூழ்நிலையில் இவரின் குழந்தை கடத்தப்படுகிறது.. குழந்தை ஹார்பரில் உள்ள ஒரு கண்டெய்னரில் இருப்பதாக தெரிய வருகிறது.. இதன் பின்னர் சரவணன் என்ன…
Read More*முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ள ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை காலத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிறது!*
அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக்…
Read More*‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்*
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பரீட்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ், இப்படத்திற்காக பாடிய பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறும்போது,…
Read Moreஇந்தியாவில் ரூபாய் 1,000 கோடியை நெருங்கும் துரந்தர் பழிவாங்கல்!
2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை தொடர்கிறது. 2-வது வார முடிவில் இதுவரை இல்லாத வேகத்தில் ரூபாய் 961 கோடி (நெட்) வசூலித்து, இந்தியாவில் ரூபாய் 1,000 கோடி என்ற இமாலய மைல்கல்லை நெருங்கியுள்ளது. உலகளவிலும் திரைப்படத்தின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை உலகளவில் ரூபாய் 1,501 கோடி பிரம்மாண்ட வசூலை குவித்து சர்வதேச அளவிலும் தனது அசாதாரணமான ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. வெறும் இரண்டு வாரங்களில், இந்திய சினிமாவின் உலகளாவிய அளவுகோல்களை மாற்றியமைத்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது. பிரம்மாண்டமான ஓப்பனிங்…
Read Moreவிமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம். தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி – பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது. வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும்…
Read Moreகார் மேனி – செல்வம் விமர்சனம்!!
கதை… சமுத்திரக்கனி & லட்சுமி பிரியா தம்பதி.. இவர்களுக்கு ஒரு மகன்.. கௌதம் மேனன் & அபிநயா தம்பதி இவர்களுக்கு ஒரு மகள்.. கௌதம் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி.. ஒரு குடும்ப உறுப்பினர் போலயே அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மனைவி அபிநயாவின் விருப்பப்படி ஒரு மாதம் வெளிநாடு சுற்றுலா செல்கிறார் கௌதம் மேனன்… அப்போது சமுத்திரக்கனி இடம் அந்த காரை விட்டு செல்கிறார்கள்.. இவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருப்பதால் இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு இந்த காரை எடுத்து வாடகை டாக்ஸி ஓட்டுகிறார் சமுத்திரக்கனி. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த விஷயம் கௌதமுக்கு தெரிய வந்ததா.? ஒரு குடும்பமாக பார்க்கும் அவர்களிடம் சமுத்திரக்கனி செய்ததா சரியா.? நடிகர்கள்… P. SAMUTHIRAKANI – SELVAM LAKSHMI PRIYA CHANDRMOULI…
Read Moreகாற்றோடு பட்டம் போல, நீலோத்தி பாடலை எழுதிய சாரதி எழுதியுள்ள சிவன் பாடல் ” அகரவா மகாரவா “
இறைவன் சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “அகரவா மகரவா” என்ற புதிய ஆன்மிக ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. Yaan Foundation வழங்கியுள்ள இந்த பாடல், பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனைகளை அழகாக இணைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருமதி.தேச மங்கையர்கரசி, முனைவர் சிவ.சதீஷ்குமார் ,பல்கலை வித்தகி திருமதி.ரேகா மணி மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இயக்குனர் ரோமியோ ஜூலியட் லஷ்மன், வசந்தமணி , சுகுமார் அழகர்சாமி, s.சாம் , ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆமீக பாடலை வெளியிட்டனர். இந்த பாடலை பிரபல ஆன்மிக பாடகர் கோல்ட் தேவராஜ் அவர்கள் ஆழ்ந்த உணர்வுகளுடன்…
Read More