கதை … திருமண வயதை அடைந்த போதிலும் அந்த வயதை கடந்த போதிலும் பெண் கிடைக்காமல் நாயகன் ரியோ.. அப்போது அவரை அழகான நாயகி வர்டிக்கா காதலிக்கிறார்.. ஆனால் அவரின் ஒரே கண்டிஷன் மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்பதுதான்.. முதலில் காதலுக்காக ஓகே சொன்னாலும் அதன் பிறகு 6 மணிக்கு மேல் அவருக்கு என்ன பிரச்சனை.. ஏன் சந்திக்கக் கூடாது? என்று அறிய ஆர்வம் காட்டுகிறார் ரியோ.. அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. அது என்ன என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… சீரியஸ் நாயகன் என்றாலும் காமெடியை கரெக்டாக செய்திருக்கிறார் ரியோ ராஜ்.. பெண்களைப் பற்றி தெரியாத அப்பாவி இளைஞராக ரியோ நடிப்பில் சிறப்பு.. அறிமுக நடிகை வர்டிகா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.. முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் ஏற்றதற்கு பாராட்டுக்கள்.. சமீபத்தில் வந்த…
Read Moreபியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்..
கதை… சான்வீயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் இளன்.. பின்னர் நாயகனின் மனதை புரிந்து கொண்ட நாயகியும் காதலிக்க இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.. திருமணம் முடிந்த உடன் அதுவரை சொல்லாத நிபந்தனை விதிக்கிறார் நாயகி சான்வீ.. என் பெற்றோரை பிரிந்து உன் வீட்டிற்கு வர முடியாது… நீ உன் பெற்றோரை பிரிந்து என் வீட்டிற்கு வந்துவிடு என கணவனிடம் கட்டளையிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? மாமியார் வீட்டில் மருமகன் குடும்பம் நடத்தினாரா.? மனைவி சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான கல்யாண கலாட்டா… நடிகர்கள்… இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்.. எதார்த்த நாயகனாக இளன்.. ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதிலும் ஒரு பெண்ணை கவர்ந்து இழுப்பதிலும் இளன் ஸ்கோர் செய்து இருக்கிறார்… மாமியார்…
Read Moreஒன் மேன் – விமர்சனம்..
நான்கு நண்பர்கள் & கார் டிரைவர் என திரை பயணம் தொடங்குகிறது.. கதை… மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லை.. இப்படியான சூழ்நிலையில் ஒரு அரியவகை கண்டுபிடிப்பு மூலம் உலகில் எந்த உயிரினமும் இல்லாத சூழ்நிலையில் நான்கு நண்பர்கள் உலகையே ஆள நினைக்கிறார்கள்.. அவர்களின் ஆசை நிறைவேறியதா.? அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் இதுவரை சொல்லப்படாத சுவாரஸ்யமான திரைக்கதை.. நடிகர் &:தொழில்நுட்ப கலைஞர் உலக சினிமாவில் இதுவரை எவரும் செய்யாத இந்த புதுமையான முயற்சிக்காகவே சங்ககிரி ராஜகுமாரை வெகுவாக பாராட்டலாம்.. சிறிய கூட்டம் ஒன்று காண்பிக்கப் பட்டாலும் அதிலும் அனைத்து முகங்களும் அனைத்து கேரக்டர்களையும் இவரே செய்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது.. சினிமா துறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சங்கங்களை ஒரே ஆளாக கையாண்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம்.. நடிப்பு ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு காஸ்டியூம் கலை நடனம்…
Read Moreதென்னிந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய நடிகை செளகார் ஜானகி தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார்!
இந்தியத் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான அத்தியாயம் இன்று முடிவுக்கு வந்தது! ஒரு நடிகை என்பதைக் கடந்து, கண்ணியம், அறிவுத்திறன் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞராக பல தலைமுறை ரசிகர்களுக்கும் நடிகை செளகார் ஜானகி திகழ்ந்தார். அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்தார். திரையுலகின் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகத் தொடங்கி, பின்னர் தனது முதிர்ச்சியான நடிப்பால் மறக்க முடியாத குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று, உண்மையான கலைத்திறன் என்பது வயது, தோற்றம் அல்லது எந்தவொரு வரையறைக்கும் உட்பட்டது அல்ல என்பதை சௌகார் ஜானகி நிரூபித்தார். அவரது குரல், முகபாவனைகள் மற்றும் திரை ஆளுமை ஆகியவை ஒரு காட்சியையே தன்வசப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை. தென்னிந்தியத் திரையுலகின் அடித்தளத்தை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்களில் ஒருவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள…
Read MoreA Powerhouse Trio : Tamil Idol முதல் சீசனை மதிப்பிடும் இசை வல்லுநர்களை சந்தியுங்கள்! மேடை தயாராகிவிட்டது, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த பாடகரைத் தேடும் Tamil Idol நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
பிரபலமான Indian Idol நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள், நடிகையும் பாடகியுமான Andrea Jeremiah ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும் தங்களது இசை அனுபவத்தின் மூலம் புதிய பாடகர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்ட இருக்கின்றனர்.. கார்த்திக்(karthik) கூறுகையில், “தமிழ்நாட்டில் பல திறமையான பாடகர்கள் இருக்கின்றனர். Tamil Idol மூலம் இதுவரை வெளிவராத பல சிறந்த குரல்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகின்றேன். புதிய பாடகர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன். A.R. ரஹ்மான் சார் தலைமையில் இந்தப் பயணத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.” பென்னி தயாள்(Benny Dayal) கூறுகையில் “நான் ஏற்கனவே பலமுறை Hindi Idol நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய திறமைகளைப் பார்க்கும்போது ஆச்சரியம்…
Read Moreதிருமணத்திற்கு பெண் கிடைப்பதில் 90ஸ் கிட்ஸ் எதிர்கொள்ளும் சிக்கல்களை சுவாரசியமாக சொல்லும் திரைப்படம்
முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM) எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி. ஷங்கர் மற்றும் எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரபு ஏகாம்பரம், “90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரசியமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம்,” என்றார். ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படத்திற்கு ரஷாந்த் ஆர்வின் இசையமைக்க, அபிஷேக் ஒளிப்பதிவை கையாளுகிறார். படத்தொகுப்பு: சூரிய முருகன்; பாடல்கள்: வி.ஜெ.பி. ரகுபதி; இயக்குநர்…
Read Moreவரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட டிரெய்லர்!
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருப்பதை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது. குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் டிரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் என டிரெய்லர் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன. மேலும், மறைந்த…
Read Moreமாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்
தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது. தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வர தளம் தயாராகியுள்ளது. H. வினோத் இயக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரீமியர் ஆகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் நான்கு மொழிப் பார்வையாளர்களையும் இந்த பிரம்மாண்டமான திரை நிகழ்வு சென்றடைகிறது. ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதைத் தாண்டி, ஜனநாயகன் திரைப்படம் மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தைப்…
Read Moreநான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்,ஆனால் அந்த கட்சியில் தற்போது இருக்கிறேனா.. இல்லையா.. என்பது கூட எனக்கு தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி.
நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன்,ஆனால் அந்த கட்சியில் தற்போது இருக்கிறேனா.. இல்லையா.. என்பது கூட எனக்கு தெரியாது,அதைவிட எனக்கு தமிழர் நலன் சார்ந்த பிரச்சனையே முக்கியம்- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில்: கோட் பட தயாரிப்பாளர்,ஜனநாயகன்பட தயாரிப்பாளர்களுக்கு அரசில் பெரிய பொறுப்புகள் கொடுத்துள்ளனர், நான் தமிழக வெற்றி கழகத்தில் ஏதோ சேர்ந்தேன்,இதுவரையில் அமைதியாக தான் இருந்து கொண்டு உள்ளேன்,அந்தக் கட்சியில் இருக்கேனா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன். எனக்கு அதையெல்லாம் விட தற்போது கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது,காவல் நிலையங்களில் நடக்கும் கொலைகள் அடித்துக் கொல்லப்பட்ட…
Read Moreஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்டின் ‘மண்டாடி’ படத்திற்கு U/A சான்றிதழ் !! – செப்டம்பர் 10, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணியிலான ஆக்ஷன் டிராமா திரைப்படமான ‘மண்டாடி’, தணிக்கை பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதன் மூலம், இப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். தனித்துவமான கதை உலகம், பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும் சூரியின் இதுவரை பார்த்திராத தோற்றம் ஆகியவற்றால் ‘மண்டாடி’ திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. உற்சாகமூட்டும் “மண்டாடி மண்டாடி” மற்றும் காதல் மெலடியான “உசுரே நீதான் புள்ள” ஆகிய இரு பாடல்களும்…
Read More
