தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள் தயாரிக்கும் இந்தப்படம் *”மனிதன் தெய்வமாகலாம்”* எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியீடு படக்குழுவிற்கும், நண்பர்களிற்கும் கொண்டாட்ட தருணமாக அமைந்துள்ளது. இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்திற்கான அற்புதமான தலைப்பை உருவாக்கியது. இந்தப்படத்தில் புகழ்பெற்ற இயக்குநர்-நடிகர் செல்வராகவன் முன்னணியில் நடிக்கிறார். அவருக்கு இணையாக குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி…
Read Moreஅதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!
மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக, நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி &…
Read Moreநவம்பர் 21 ஆம் தேதியன்று வெளியாகும் “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்”;
🎬 டிரைலர் இணைப்பு: https://youtu.be/fZuk0oru-ik சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம், தத்ரூபமான சினிமா ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 21, 2025 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. கதை சுருக்கம் : போரின்போது தனது குடும்பம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின் வீடு திரும்பும் “மரணத்தை ஏற்க மறுக்கும் மனிதன்” (ஜோர்மா டோமிலா), அந்த வீட்டை இடித்து ஒரு லாரியில் ஏற்றி, தனது குடும்பத்தின் நினைவாக பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் அமைக்கத் தீர்மானிக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தை கொன்ற சிவப்பு…
Read Moreநேச்சுரல் ஸ்டார் நானி – ‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்திலிருந்து புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது !! சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேச்சுரல் ஸ்டார் நானி, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனது புதிய பரிணாமத்துடன் வருகிறார். உலகளாவிய ஆக்சன் படமான ‘தி பாரடைஸ்’ படத்திற்காக, நானி தனது தோற்றத்தை முழுமையாக மாற்றி, சக்திவாய்ந்த, பீஸ்ட் மோட் அவதாரத்தில் ‘ஜடல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிம் புகைப்படத்தில், நானி தடிமனான கை, பருமனான உடற்கட்டுடன், உண்மையான ஆக்சன் ஹீரோவாக காட்சியளிக்கிறார். ‘தசரா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா, இந்த கதாபாத்திரத்தை மிகுந்த வலிமை மிக்கதாக வடிவமைத்துள்ளார். அதற்காக நானி தினமும் இரண்டு முறை வொர்க்அவுட், ஹெவி ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங்,…
Read Moreகாந்தி கண்ணாடி – திரை விமர்சனம்
பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். அதனாலேயே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது என்பதில் கவனமாக, அதாவது கறாராக இருக்கிறான். காதல் திருமணம் புரிந்து ஊரை விட்டு வந்த காந்தி- கண்ணம்மா தம்பதிகளுக்கு இப்போது வயது அறுபதை தாண்டுகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் தான் என்னவோ தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பில் பொங்கி வழிகிறார்கள். மனைவி தான் தனக்கு எல்லாமே என காந்தியும், கணவரே தன் உலகம் என வாழும் கண்ணம்மாவும் ஆதர்ச தம்பதிகளாக ஊராரின் கண்களுக்கு ஆச்சரியம் தருகிறார்கள். இவர்களில் கண்ணம்மாவுக்கு தங்கள் அறுபதாம் கல்யாணத்தை சிறப்புற நடத்தி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு காந்தியும் உடன்படுகிறார். தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி இவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் கேட்கிறார். கதிரும் ரூ 52…
Read Moreலஹரி – எம்ஆர்டி மியூசிக் – பிரயோக் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி’ மூலம் 50 ஆவது வருடத்தை கொண்டாடுகிறது லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக்!
இந்த நிகழ்வின் அங்கமாக லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் ஆகியவை பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடியுடன் இணைந்து, ‘லஹரி – எம்ஆர்டி மியூசிக் – பிரயோக் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி’யை தொடங்குவதில் பெருமை அடைகிறது. இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் பிற கலை வடிவங்களின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அடுத்த வருடம் 10,000 பாடல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. *முக்கிய சிறப்பம்சங்கள்:* * கிளாசிக்கல் இசை, பக்தி பாடல்கள், நாட்டுப்புற இசை உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் 10,000 பாடல்களை அடுத்த வருடத்திற்குள் உருவாக்க வேண்டும். – பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடி உடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அதிக பார்வையாளர்களை சென்றடைய முடியும். * புதிய திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள்…
Read Moreமதராஸி – திரை விமர்சனம்
அமைதியே வடிவான தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை ஏற்படுத்தி அமைதியை குலை க்க திட்டமிடுகிறது, ஒரு தீவிரவாத கும்பல். அதற்காக துப்பாக்கிகளைப் புழக்கத்தில் விட்டு, அதை வணிகமாக்க அந்த சட்ட விரோதக் கும்பல் முயற்சி செய்கிறது. அதன் முதல் கட்டமாக துப்பாக்கிகளை கன்டெய்னர்களில் கடத்திக் கொண்டு ஆந்திர எல்லை கடந்து தமிழகத்தில் நுழைய முயல்கிறது. இதே நேரத்தில் சிறிய அளவில் தமிழகப் பகுதிகளில் துப்பாக்கிகளை ரகசியமாக புழக்கத்தில் விடுபவர்கள் மூலம் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த கும்பலை பிடிப்பதற்கு காவல்துறை வியூகம் அமைக்கிறது.ஆனால் குற்றவாளிகளின் நெட்வொர்க் அந்த வியூகத்தை தவிடு பொடியாக்குகிறது. நாசக்கார கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை தயாராகிறது. இப்போது நாயகன் அறிமுகம். நாயகன் சிவகார்த்திகேயன் உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தன் காதலி தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கூறிக்கொண்டு மேலிருந்து…
Read Moreதுல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.இன்று சென்னையில் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் சந்து…
Read More‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’
சென்னை, செப்டம்பர் – 05 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். உதவி தேவைப்படும் தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 46-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை தியாகராய நகர் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலக அரங்கில் வைத்து நேற்று மாலை (செப்டம்பர் 04) நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும்,…
Read Moreபிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக தனஞ்செயன் சார் படத்தை விநியோகம் செய்கிறார். இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார். தேஜூ அஸ்வினி, ரமேஷ் திலக், வேட்டை முத்துக்குமார், பிந்து மாதவி என நடிகர்கள் அனைவரும் சரியான நேரத்தில் நல்லபடியாக படத்தை முடித்துக் கொடுத்தனர். இயக்குநர் மாறன், கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும்…
Read More