நயன்தாரா படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல கலை இயக்குனர் வீரசமர்

பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலின் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல படங்களில் அவருடன் பணியாற்றினார்.   ‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் அறிமுகமானவர். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர் தான். காதல், வெயில், பூ, பாண்டி, வீரசேகரன், முத்துக்கு முத்தாக, வேலாயுதம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், கொம்பன், ஒரு கிடாயின் கருணை மனு, கடைக்குட்டி சிங்கம், குடிமகன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஜாக்பாட், தண்ணி வண்டி, டிஎஸ்பி, யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் குடிமகன், 1943 கப்பல்லேறிய தமிழன், பித்தளை மாத்தி, விழா நாயகன் என 30′ படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இதில் பல படங்களுக்கு இவர் தான் ஆர்ட் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய…

Read More

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை – ரெபெல் ஸ்டார் எப்படி இந்தியாவின் முதல் பான்-இந்திய நட்சத்திரமாக ஆனார்!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார். மிர்ச்சியில் அவரது பாத்திரத்திற்குப் பிறகுதான் அவர் ரசிகர்களால் “ரெபெல் ஸ்டார்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இது அவரது தனித்துவமான ஆளுமை மற்றும் திரையில் சக்திவாய்ந்த கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடித்தது. முதல் பான்-இந்திய ஸ்டாராக, அவரது வாழ்க்கை பாகுபலியில் இணையற்ற உயரத்தை எட்டியது. , இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் பிரபாஸை, தேசம் முழுவதும் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கொண்டாட வைத்தது. பிரபாஸ் ஒரு நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருக்கிறார், இந்திய சினிமாவின் மறுக்கமுடியாத நட்சத்திரமாகத் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். பாகுபலி, சாஹோ, மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சலார்,…

Read More

ஜப்பானை கலக்கப் போகும் பிரபாஸின் “கல்கி 2898 கிபி”

பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன் ஜப்பானில் வெளியாகிறது. இந்த புத்தாண்டு வெளியீட்டை பிரபல தொழிலதிபர் கபாடா கெய்சோவின் ‘ ட்வின்’ எனும் நிறுவன மூலம் வெளியிடப்படுகிறது. இது ‘கல்கி 2898 கிபி’ படத்தின் உலகளாவிய பயணத்தின் மற்றொரு அத்தியாயத்தை குறிக்கிறது. வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் வெளியான ‘கல்கி 2898 கிபி’ எனும் திரைப்படம் உலக அளவில் வசூலில் நட்சத்திர அந்தஸ்தை எட்டியது. இந்தத் திரைப்படம் உலக அளவில் 1,200 கோடிக்கு மேல் வசூலித்ததுடன், இந்தி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடிக்கு மேல் வசூலித்து, 2024 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த…

Read More

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா- 2 படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் அசத்தல் நடனம்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ரீலீலா சிறப்புப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது. இந்த செய்தியை படக்குழு அற்புதமான போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது. ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ அண்டாவா’ பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தென்னிந்தியாவின் நடன ராணியான ஸ்ரீலீலாவுடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க…

Read More

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எளிய மாணவர்களுக்கு பறக்கும் பயணம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூக செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரெயின்ட் ராப்ஸ் சமூக அமைப்பு தனது வருடாந்திர “வானமே எல்லை” நிகழ்வை ஆனந்தம் மற்றும் விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. சேவாலயா, ஆனந்தம் கல்வி நிலையம், ஆனந்தம் சிறப்பு பள்ளி, செஸ் ஆனந்த இல்லம் ஆகியவற்றில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் தோழி அமைப்பில் இருந்து வரும் திருநங்கைகள், பார்வையற்றோர் உள்ளிட்டோருக்காக சிறப்பு விமானப் பயண அனுபவம் வழங்கும் நிகழ்வாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பயணம் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. சேலத்தில் அவர்கள் தரையிறங்கும் போது சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி ஐ.ஏ.எஸ். அவர்களின் அன்பான வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைக்கவிருக்கின்றன. உள்ளடக்கத்தையும், கனவுகளையும், எட்டக்கூடிய எல்லைகளை கொண்டாடும் இவ்விழாவில்…

Read More

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் புரோமோ – வைரல்

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.  ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் டீசர் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி, மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார். ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர்,  படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர்…

Read More

70 வருட தமிழ் சினிமா கண்டிராத புதிய கதைக்களத்தில் ‘மறைமுகம்.

ABICKA ARTS சார்பில் மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்ஷன் திரில்லர் கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி, தேவி கண்ணன் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம். குழந்தை நட்சத்திரம் ஜானவ் எதிர்பார்ப்புக்குரிய இன்னொரு அறிமுகம். மற்றும் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின். இவர் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை விஜய் திருமூலம் கையாள, இசையமைதிருக்கிறார் வசந்த். வி…

Read More

“பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் 4 வருடங்களாக முடங்கி கிடக்கிறது” – முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…

Read More

முரளி ராம. நாராயணன் பதவி விலக வற்புறுத்தி முன்னாள் தலைவர் கே.ஆர். பரபரப்பு அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. படம் எடுப்பதில் தொடங்கி வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன் என்று அத்தனையுமே இன்று சவாலாக மாறிப் போயிருக்கிறது. பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் நான்கு வருடங்களாக முடங்கிப் போய் கிடக்கிறது. நட்சத்திர நடிகர்கள் படங்களைத் தவிர மற்றவர்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட கிடைப்பதில்லை. சேட்டிலைட் வியாபாரம் ஓடிடி ஆடியோ ரைட்ஸ் கியூப் கட்டணம் டிக்கெட் புக்கிங் கட்டணம் உள்ளிட்ட எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு சங்கத் தலைவர் பதவி? இத்தனை வருடங்களாக பொறுத்து பொறுத்துப் பார்த்து பொங்கி எழுந்த உறுப்பினர்கள், தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா…

Read More

ஹோம்பாலே நிறுவனத்தின் மூன்று படங்களில் தொடர்ந்து நடிக்கும் பிரபாஸ்

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும். ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு…

Read More