1970- களில் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நடந்த காலத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. கதை… வள்ளுவன்பேட்டையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஆணாதிக்கத்தை எதிர்த்து இவர் எழுத்தாளராகவும் பல கதைகளை எழுதி வருகிறார். இவரது தாத்தா எம் எஸ் பாஸ்கர் வழியில் ஹிந்தியை எதிர்த்து போராடியும் வருகிறார்.. இந்த சூழ்நிலையில் தாத்தாவுக்கு கேன்சர் நோய் தெரிய வருகிறது.. தான் இறப்பதற்குள் பேத்தி கீர்த்திக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என எண்ணுகிறார் எம் எஸ் பாஸ்கர். ஒரு காலகட்டத்தில் வங்கியில் ப்ரமோஷனுக்காக ஹிந்தியை கற்க வேண்டும் என்ற நிலை கீர்த்திக்கு வருகிறது.. அதன் பிறகு என்ன ஆனது? புரட்சிப் பெண் எழுத்தாளர் கீர்த்தியின் நிலை என்ன.? ஹிந்தியை கற்றுக் கொண்டாரா? திருமணம் செய்து கொண்டாரா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்…. கீர்த்தி சுரேஷ்,…
Read MoreCategory: விமர்சனம்
தங்கலான் பட விமர்சனம் 3.5/5… GOLDEN BOY
ஆங்கிலேயர்களிடமிருந்து தன் மக்களை மீட்டெடுக்க தன் வாழ்வாதாரத்திற்காக தங்கத்தை தேடி செல்லும் தங்கலான்.. கதை… 1850 இந்தியாவில் தங்க வேட்டைக்காக வாழ்ந்த காலகட்டம் அது.. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்தியர்கள் அடிமைப்பட்டு கிடந்த காலகட்டம் அது.. அப்போது பல சூழ்ச்சிகளால் தங்கள் நிலத்தை இழக்கிறார் தங்கலான் (விக்ரம்)… மேலும் மிராசுதார் பண்ணையார்களிடம் அடிமைப்பட்டு கிடைக்கின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய மற்றும் கூலி வேலைகளை செய்து வருகின்றனர்.. இந்த சூழ்நிலையில் தங்க வேட்டைக்காக பிரிட்டிஷ் ஆட்சியர் விக்ரமை அழைக்கிறார். இதனால் தினமும் கூலியும் கிடைக்கிறது.. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் நன்மதிப்பை பெறுகிறார் விக்ரம்.. எனவே அவரின் நிலத்தை மீட்டெடுக்கவும் அவரின் வாழ்க்கை தரமும் உயர்கிறது. இந்த சூழ்நிலையில் தன் மக்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் தங்க வேட்டைக்காக புறப்படுகிறார் விக்ரம்.. ஆனால் அப்பொழுதுதான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய…
Read Moreஅந்தகன் விமர்சனம் 4.5/5… ராயல்-கன்
கதை… பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வையற்றவராக நடித்து அதன் மூலம் மக்களிடையே அனுதாபம் பெற்று பணம் சம்பாதித்து லண்டன் சென்று மிகப்பெரிய இசை கலைஞராக வேண்டும் என நினைக்கிறார். இவர் நிஜமாலுமே கண் தெரியாதவர் தானா என்ற சந்தேகம் பிரசாந்த் வீட்டில் அருகே வசிக்கும் பூவையார் & பிரசாந்த் காதலிக்கும் பிரியா ஆனந்த் ஆகியோருக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த திறமையான கலைஞர் நிஜமாகவே கண் பார்வையற்றவர் என நினைத்து நவரச நாயகன் நடிகர் கார்த்திக் (கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.) நாளை எனது திருமண நாள்.. எனது மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக நீங்கள் வந்து எனது ஹிட்டான பாடல்களை பியானோ மூலம் வாசித்து காட்ட வேண்டும் என அட்வான்ஸ் தொகையும் கொடுக்கிறார். அதன்படி அடுத்த நாள் மதியம்…
Read Moreவீராயி மக்கள் பட விமர்சனம் 4/5.. கூட்டு குடும்ப வலிமை..
கதை… வீராயி (பாண்டி அக்கா). இவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.. (வேலராமமூர்த்தி மாரிமுத்து தீபா ஷங்கர்).. கணவனை இழந்த வீராயி பிள்ளைகளை நன்றாக வளர்த்து வருகிறார்.. 3வது மகன் சென்னையில் சென்று காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்திற்குள் முதல் பிளவு வருகிறது. ஒரு கட்டத்தில் விவசாயம் நஷ்டம் அடைய பஞ்சம் பிழைக்க திருப்பூருக்கு செல்கிறார் தன் மனைவி மகனுடன் வேலைக்கு செல்கிறார் வேல ராமமூர்த்தி.. அப்போது மாரிமுத்துவின் மனைவிக்கும் மாமியார் வீராயிக்கும் மாமியார் மருமகள் சண்டை தொடங்குகிறது.. இதனால் குடும்பத்தில் சொத்தை பிரிக்க வேண்டும் என்கின்றனர்.. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் இதற்கு வேலராம மூர்த்தியும் சம்மதிக்க குடும்பம் பிரிகிறது.. இதனையடுத்து குடும்பம் பிரிந்த சோகத்தில் வீராயி மரணம் அடைகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது? குடும்பம்…
Read Moreகதை…. பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பிரவினை எப்போது கிண்டல் செய்யும் கௌரவ் பள்ளியில் திறமையான மாணவன். ஒருநாள் மாணவர்கள் அனைவரும் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது சபரியை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் சபரி. இதனை எடுத்து தனது உயிரைக் காப்பாற்றிய நண்பனின் ஆசையை நிறைவேற்றம் வேண்டும் என முடிவெடுக்கிறார். பெரியவன் ஆன பிறகு இமயமலைக்கில் பைக்கில் பயணம் சென்று சிகரத்தை தொட நினைக்கிறார்.. இது ஒரு புறம் இருக்க மூளை சாவு அடைந்த கௌரவின் இதயத்தை நாயகி எஸ்தருக்கு பொருத்துகின்றனர்.. (பாரிமுகிலன்) கௌரவ் பள்ளியிலே தானும் படிக்க விரும்பி அங்கு சேர்கிறார் அப்போது சபரியின் நடவடிக்கைகளை பின்…
Read Moreபார்க் திரை விமர்சனம்.. பயமுறுத்தும் பார்க்
திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கதை… திருவண்ணாமலையில் நாயகன் தமன் நாயகி ஸ்வேதா இருவரும் வசிக்கின்றனர்.. ஒரே ஊரில் வசிக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனை எடுத்து இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவில் வில்லனால் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. நாயகி மீது ஆசைப்படும் வில்லன் அவளை அடைய நினைக்கிறான். இவர்களை துரத்தும் போது இவர்கள் ஜாலி பார்க் என்ற இடத்தில் தஞ்சம் அடைகின்றனர். அப்போது அங்கே இருக்கும் ஒரு காதல் ஜோடி பேய் இவர்கள் உடலில் புகுந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை. நடிகர்கள்… ‘ஒரு நொடி’ பட நாயகன் தமன்…
Read Moreமழை பிடிக்காத மனிதன் – விமர்சனம்.. 3/5
கதை… படம் தொடங்கியவுடன் இரண்டு நிமிடங்களில் வரைபடத்துடன் வாய்ஸ் ஓவரில் கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். ஒரு அடாத மழையினால் தன் காதல் மனைவி இழக்கிறார் விஜய் ஆண்டனி.. இதனையடுத்து விஜய் ஆண்டனியை எவருக்கும் தெரியாத வகையில் அந்தமானுக்கு கொண்டு செல்கிறார் இவரது நண்பர் சரத்குமார். அதே சமயம் நடந்த சம்பவத்தில் விஜய் ஆண்டனி இறந்து விடுகிறார் என மக்களை நம்ப வைக்கிறார்.. அப்படி அவர் சொல்ல என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ் இல் தெரியும். அந்தமானுக்கு சென்ற விஜய் ஆண்டனி அங்கு ஒரு பிரச்சனையில் தன் நண்பனுக்காகவும் தன் காதலிக்காகவும் களம் இறங்குகிறார்.. அடுத்தது நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகனாக விஜய் ஆண்டனி.. சமீப காலமாக ரோமியோ உள்ளிட்ட படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக மாறி இருந்தார் விஜய் ஆண்டனி.. ஆனால்…
Read Moreபேச்சி விமர்சனம்: 4/5… நரபலி
கதை… நாயகன் தேவ்.. நாயகி காயத்ரி.. மலைப்பகுதிகளில் ட்ரக்கிங் செல்ல ஆசைப்படும் இரண்டு காதல் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு செல்கின்றனர்.. இவர்கள் கூடவே இவர்களின் போட்டோகிராப் நண்பரும் இணைந்து கொள்கிறார்.. இவர்களுக்கு வழி துணையாக டூரிஸ்ட் கைட் பால சரவணன் இணைகிறார்.. அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகையை காண்கின்றனர்.. அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற அறிந்து கொள்ள காயத்ரி திட்டமிடுகிறார்.. இது எங்கள் கிராமம் இந்த காடு பற்றி நன்கு அறிந்தவன் நான்.. அங்கு ஒரு மர்மம் இருக்கிறது.. அங்கு செல்லக்கூடாது சென்றால் நமக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பாலசரவணன்.. ஆனாலும் அவரின் எதிர்ப்பை மீறி அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். அந்த பகுதியில் ஒவ்வொருவராக காணாமல் போகின்றனர்.. தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பது…
Read Moreநண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்
கதை… ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் தன் சிறு வயது முதலே வளர்ந்து வருகிறார் நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் வசிக்கும் பல நண்பர்கள் இவருடேனே அதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்கின்றனர்.. கல்லூரி செல்லும் போது கூட இவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் இணைந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்குகின்றனர். மேலும் BECOME A STAR என்ற மொபைல் ஆப் ஒன்றையும் தொடங்குகின்றனர். ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல வருமானம் இல்லாததால் நண்பர்கள் பிரிந்து செல்கின்றனர்.. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நாயகன் NOVP என்ற நிறுவனத்தை நம்பியே இருக்கிறார்.. இதனால் நாயகியும் அவரை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன்…
Read MoreBOAT போட் விமர்சனம் 3/5.. நடுக்கடலில் பயணம்
கதை… 1943 ஆண்டு.. இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டம் அது.. அப்போது சென்னை மீது ஜப்பான் நாட்டு அரசு குண்டு போட திட்டமிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் குண்டுகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாக்கவும் யோகி பாபு தன் அம்மா லீலா உடன் தன்னுடைய சொந்த படகில் நடுகடலுக்கு செல்ல திட்டமிடுகிறார். அவர் செல்லும் போது திடீரென கௌரி அவரின் தந்தை சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், ஷாரா, மதுமிதா, அக்க்ஷத் உள்ளிட்டோரும் படகில் ஏறி விடுகின்றனர். இந்தப் படகில் 7 நபருக்கு மேல் செல்ல முடியாது என யோகி பாபு எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேறொரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் (அவரின் படகு விபத்துக்குள்ளானதில்) ஜெஸ்ஸி இவர்களை மிரட்டி இந்த படகில் ஏறி கொள்கிறான். இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயன்…
Read More
