கதை… ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் தன் சிறு வயது முதலே வளர்ந்து வருகிறார் நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் வசிக்கும் பல நண்பர்கள் இவருடேனே அதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்கின்றனர்.. கல்லூரி செல்லும் போது கூட இவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்.. இந்த சூழ்நிலையில் இவர்கள் இணைந்து ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்குகின்றனர். மேலும் BECOME A STAR என்ற மொபைல் ஆப் ஒன்றையும் தொடங்குகின்றனர். ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.. ஆனால் மாதங்கள் செல்ல செல்ல வருமானம் இல்லாததால் நண்பர்கள் பிரிந்து செல்கின்றனர்.. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நாயகன் NOVP என்ற நிறுவனத்தை நம்பியே இருக்கிறார்.. இதனால் நாயகியும் அவரை விட்டு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதன்…
Read More‘மலைவாழ் மக்கள் கீதம்’ : ‘கெவி’ படத்திற்காக எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் தேனிசை தென்றல் தேவாவின் குரலில் ‘கெவி’ படத்திற்காக உருவாகியுள்ள ‘மலைவாழ் மக்கள் கீதம்’ ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம் சங்கரபாண்டியன், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தை சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஜி.பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். படத்தின் முக்கியமான காட்சியில், கதைக்களத்தில் வசிக்கும் மக்களின்…
Read Moreகேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 இலட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Read More‘சாலா’ டிரைலரை வெளியிடும் அல்லு அர்ஜுன்!
பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் ‘சாலா’; S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 சாலா வெளியாகிறது தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, ‘சாலா’ எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது. சமீபத்தில் வெளியாக இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து ‘சாலா’ டிரைலரை ஆகஸ்ட் 3 அன்று…
Read MoreBOAT போட் விமர்சனம் 3/5.. நடுக்கடலில் பயணம்
கதை… 1943 ஆண்டு.. இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டம் அது.. அப்போது சென்னை மீது ஜப்பான் நாட்டு அரசு குண்டு போட திட்டமிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் குண்டுகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாக்கவும் யோகி பாபு தன் அம்மா லீலா உடன் தன்னுடைய சொந்த படகில் நடுகடலுக்கு செல்ல திட்டமிடுகிறார். அவர் செல்லும் போது திடீரென கௌரி அவரின் தந்தை சின்னி ஜெயந்த், எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், ஷாரா, மதுமிதா, அக்க்ஷத் உள்ளிட்டோரும் படகில் ஏறி விடுகின்றனர். இந்தப் படகில் 7 நபருக்கு மேல் செல்ல முடியாது என யோகி பாபு எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேறொரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் (அவரின் படகு விபத்துக்குள்ளானதில்) ஜெஸ்ஸி இவர்களை மிரட்டி இந்த படகில் ஏறி கொள்கிறான். இந்த சூழ்நிலையில் ஆங்கிலேயன்…
Read Moreவாஸ்கோடகாமா திரை விமர்சனம் – நெகட்டிவ் உலகம்
கதை… நல்லவனுக்கு பெண் கொடுக்க மாட்டோம்.. நல்லவனாக இருந்தால் வாழ விடமாட்டோம் என்ற நோக்கத்தில் ஊரில் எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பிக் பாக்கெட் அடிப்பவன் கற்பழிப்பவன் கொள்ளை அடிப்பவன் கொலைகாரன் உள்ளிட்டவர்கள் மட்டுமே வாழும் நாட்டில் நல்லவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நகுலுக்கு கல்யாணம் கட்டி வைக்க தீர்மானித்து முனிஷ்காந்த் திட்டம் போடுகிறார். அதன்படி ஆனந்தராஜின் மகள் அர்த்தனா பினுவை பெண்பார்க்க செல்கிறார்.. அங்கு இவன் மோசமானவன் அக்மார்க் அயோக்கியன் என்று கூறி கட்டி வைக்க முயல்கிறார்.. திருமணத்தின்போது நகுல் அயோக்கியன் அல்ல நல்லவன் என்று தெரிந்து விடுகிறது. இதனால் திருமணம் நின்று போகிறது.. அதன் பிறகு அவன் ஜெயிலுக்கு செல்கிறார்.. அங்கு திருடர்கள் எல்லாம் நல்லவர்களாகவும் போலீஸ் எல்லாம் மகா கெட்டவர்களாக இருக்கிறார்கள். வரும் கைதிகளுக்கு கற்பழிப்பது எப்படி? கொள்ளை அடிப்பது கொலை…
Read Moreஉஸ்தாத் ராம் பொதினேனி ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது!
‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாக்கி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயாகனாக நடித்திருக்க, நடிகர் சஞ்சய் தத் எதிர்கதாநாயகனாக நடித்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இப்போது, ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்கான தியேட்டர் டிரெய்லர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரெய்லர் போஸ்டரில் ராம் பொதினேனி முரட்டுத்தனமான மாஸ் லுக்கில் உள்ளார். கழுத்தில் கட்டியுள்ள கர்சீஃப் அவரது ஸ்டைலிஷ் லுக்கை இன்னும் வசீகரமாக்கியுள்ளது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’…
Read More‘அப்பு VI STD’ படத்தில் கதாநாயகனான அறிமுகமாகும் ‘கல்லூரி’ வினோத்!
RK CRETIVE MAKERS சார்பில் திரு. வீரா அவர்கள் தயாரிக்கும் படம் அப்பு VI-STD. இப்படத்தில் கல்லூரி, மாரி, ஸ்கெட்ச், அயோத்தி, ஆகிய படங்களில் நடித்த வினோத் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் வீரா,ஜீவன் பிரபாகர், P.L. தேனப்பன், வேலுபிரபாகரன், டார்லிங் மதன், விஜய் சத்யா, பிரியங்கா ரோபோ ஷங்கர், சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் திரு. வசீகரன் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார். இசை ஆலன் விஜய், ஒளிப்பதிவு தீபக், படத்தொகுப்பு K.K. விக்னேஷ், சண்டைப்பயிற்சி S.R. ஹரிமுருகன், பாடல்கள் மணி அமுதவன், கலை V.K. நடராஜ். இப்படத்தின் கதை, சென்னை ஹௌசிங் போர்டை மையமாக கொண்ட கதைகளமாக உருவாகி உள்ளது. அப்பாவின் கனவை நிறைவேற்ற படிக்க நினைக்கும் பத்து வயது சிறுவன் அப்பு.…
Read Moreஜமா விமர்சனம் – தெருக்கூத்து
‘ஜமா’ என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்லாகும்.. நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. கதை… கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன்.. இவரது உறவினர்கள் பலரும் தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் படத்தை எதார்த்தமாக இயக்கி நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார்.. பாரி இழவழகன் இவரது தந்தை தயா.. தெருக்கூத்து பார்க்க சென்ற தயா ஒரு கட்டத்தில் அதில் ஆர்வமாகி அவரே தெருக்கூத்து கலைஞராகி விடுகிறார்.. ஜமா என்ற பெயரில் நாடகக் கலைக் குழுவை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பரின் பொறாமையால் இவரது கலைக்குழு கைவிட்டு போகிறது.. ஒரு கட்டத்தில் மரணமும் அடைகிறார்.. தன் தந்தையை கைவிட்ட ஜமா குழுவை மீண்டும் கைப்பற்ற மகன் பாரி இளவழகன் போராடும் போராட்டமே…
Read Moreரயில் – வடமாநிலத் தொழிலாளர் வாழ்வும் வலியும்.. ஆஹா ஓடிடி யில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல்
வடக்கன் பெயர், சென்சார் தடையால் மாற்றப்பட்டு, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பரவலான கவனம் பெற்ற, திரைப்படம் ரயில். பெரு முதலாளிகள் சாதி, மதங்களைக் கடந்து, சுயநலத்துக்காக எப்போதும் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால். உழைக்கும் மக்கள் எப்போதும் தங்களுக்குள் பகைமை பாராட்டி, அடிப்படைவாதிகளால் அடித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்ற கருத்தை மிகவும் அழுத்தமான திரைக்கதையில் ரயில் திரைப்படம் வெளியாகி இருந்தது. உழைக்கும் தமிழர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில், அவர்களின் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டு, அந்த இடத்தில் வடநாட்டு கூலிகளை அனுமதிக்கும் தமிழ்நாட்டுச் சூழல் ஒருபக்கம் என்றால், அடையாள அரசியல்வாதிகளின் காட்டமான எதிர்வினை இன்னொரு பக்கம் என அனைத்தையும் கடந்து, ரயில் திரைப்படம், பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் ரயில் திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தி வரவேற்றது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில்,…
Read More