அரசியல் என்று வந்து விட்டால், நல்லவர், கெட்டவர் அனைவரையும்தான் அணைத்துப் போக வேண்டி இருக்கும். நல்லவர்களுக்காக மட்டுமே, நல்லவர்களைக் கொண்டு கட்சி நடத்துவது என்பதெல்லாம் கற்பனையிலும் நடக்காத விஷயம். அரசியலுக்கு வந்த பின், கமலுக்கு இது புரிய ஆரம்பித்திருக்கும். அல்லது அவர் புரிந்து கொண்டே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். இப்போது நடக்கும் சில விஷயங்கள், கமலைப் பார்த்து மக்களே ‘நீங்க நல்லவரா, கெட்டவரா’ என்று கேட்க வைப்பதுதான் காலத்தின் கோலம். 2018 பிப்ரவரி 1 அன்று, மதுரை ஒத்தக்கடையில் கமல் கட்சி துவக்கியபோது, அவருடன் சேர்ந்தவர்களில் பலர் யாரும் அறியாதவர்கள். பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழ் ஆளுமையுமான கு.ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா, போலீஸ் அதிகாரி மவுரியாவைத் தவிர, வேறு யாரையும் அப்போது மக்களுக்குத் தெரியாது. துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் மகேந்திரன், மாணவர் நகலகம் செளரிராசன், நடிகர் நாசரின் மனைவி…
Read Moreவாசிங் மெஷின் இருக்கட்டும் செல்போன் என்னாச்சு – மு.க.ஸ்டாலின்
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் வாஷிங் மெஷின் தருகிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அமர்ந்த 2011, 2016 தேர்தல்களில் அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், “இப்போது அ.தி.மு.க.வின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது அப்படியே தி.மு.க.வின் நகல். நாம் என்ன சொன்னமோ அதை அப்படியே கொஞ்சம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கின்ற கேள்வி. இதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா? நான் சில உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன்…
Read Moreதொண்டாமுத்தூரில்வேலுமணி இறக்கிய ஸ்லிப்பர் செல்கள்
கட்சி வேலையானாலும், தேர்தல் வேலையானாலும் அமைச்சர் வேலுமணிக்கு நிகர் அவரேதான். மிரட்டிவிடுவார் மனிதர். அவருடைய அசாதாரணமான உயரமும், அசாத்தியமான துணிச்சலும் அவரைத் தனித்துக் காட்டும் அடையாளங்கள். தேர்தல் நேரத்தில் வேலுமணியின் வேலைகள் எப்படியிருக்கும் என்பது பற்றி, அதிமுக வட்டாரத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் அறிந்த மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘வேலுமணிக்கு எந்த டிபார்ட்மென்ட்டில் அல்லது எந்தக் கட்சியில் எங்கே ஆளிருக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் அவருக்குப் போக வேண்டிய தகவல்கள் அவ்வப்போது போய்விடும். திமுகவில் மட்டுமில்லை; பாரதிய ஜனதாவில், ஐடி டிபார்ட்மென்ட்டில் என அவருக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்கள் இல்லாத இடமேயில்லை என்று சொல்லலாம். சென்ற தேர்தலில், திமுகதான் ஜெயிக்குமென்று எல்லா கருத்துக் கணிப்புகளும் முன்பே சொல்ல ஆரம்பித்த நிலையில், தன்னை எதிர்த்து திமுக கூட்டணியில் யார் போட்டியிட வேண்டுமென்பதையும் அவரே…
Read Moreவிவசாயிக்கும் முதலாளிக்குமான போட்டி – அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து தொடங்கியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்கலாம். அணுகலாம். ஈகோ பார்க்க மாட்டார். உங்களோடு சேர்ந்து டீ காபி சாப்பிடுவார். ஆனால் ஸ்டாலினை அவரது கட்சிக் காரர்களே யாரும் பார்க்க முடியாது. பளார் என்று அறைந்துவிடுவார். அவ்வளவு அகங்காரம். அது தலைமயில்லை. ஆனால் இங்கே ஒரு விவசாயி முதல்வர். இன்னொரு விவசாயி துணை முதலமைச்சர். இந்த ஆட்சி தொடர வேண்டும். அதனால்தான் விவசாயிகள் ஆள வேண்டுமென்ற நோக்கத்தில்தான் மருத்துவர் கூட்டணி அமைத்துள்ளார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார் ஸ்டாலின். ஆனால் தள்ளுபடி செய்துவிட்டார் எடப்பாடி அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றமும் கிடையாது.ரவுடியிசம் இல்லை. கட்டப் பஞ்சாயத்து இல்லை. ஆனால்…
Read Moreஸ்டாலின் பெட்டியை திறக்கப்போவதில்லை- எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் பழனிசாமிமார்ச் 16 அன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை காட்டுமன்னார் கோயிலில் தொடங்கி சிதம்பரத்தில் பிரசாரம் செய்து அங்கேயே இரவில் தங்கினார். சிதம்பரம் நகருக்குத் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த அவருக்கு, நடராஜர் கோயில் பொது தீட்சிதர் பிரசாதம் மற்றும் நடராஜர் திரு உருவப்படத்தை வழங்கினர். நேற்று காலை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் எடப்பாடி பெயரில் திறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பட்டாடை, மாலை, நடராஜர் தூக்கிய திருவடியில் சாத்தப்படும் குஞ்சிதபாதம் உள்ளிட்ட அருட்பிரசாதத்தினை சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் வழங்கினர். புவனகிரியில் வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்தும், குறிஞ்சிப்பாடியில் வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்தும் பரப்புரையில் ஈடுபட்டார் முதல்வர். பின்னர் கடலூரில் வேட்பாளரான அமைச்சர் எம். சி.சம்பத்தை ஆதரித்து பிரசாரம் செய்து பேசியதாவது, “இந்தத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில்…
Read Moreகாதம்பரி திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘காதம்பரி’. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன்ன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரோ அருள் மற்றும் அவரது நண்பர்கள் டாக்குமெண்டரி படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது. சிறிய காயங்களுடன் நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்கு செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் விசித்திரமாக இருக்க, அது குறித்து நண்பர்கள் ஆராயும் போது, அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில்…
Read Moreஅரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் தேன் – சிறப்பு பார்வை
பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும் கணவன் – மனைவியாக உற்றார் உறவினர் சம்மதித்தாலும் கடவுளின் உத்தரவு கிடைக்காத நிலை. கடவுளின் முடிவை மீறினால் தம்பதிகளில் ஒருவருக்கு மரணம் நிச்சயம்’ என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். காதலர்கள் மீறுகிறார்கள். குறிப்பிட்ட குறைபாட்டோடு குழந்தை பிறக்க, அடுத்தடுத்தும் வளைத்துக் கட்டி வெளுத்து வாங்குகிறது சோதனைகள். அத்தனைக்கும் காரணம் மக்கள் விரோத அரசின், மனிதம் தொலைத்த அரசு ஊழியர்களின் அராஜகம். அந்த அராஜகங்களின் தொகுப்பு அழ வைக்கும் காட்சிகளாய் விரிகிறது. ஆதார் கார்டு, காப்பீடு அட்டை போன்றவைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை விளக்கியிருப்பதெல்லாம் இயக்குநர் கணேஷ் விநாயக்கின் துணிச்சல்! ஓங்கி உயர்ந்த மலையில் அதைவிட ஓங்கி உயர்ந்த மரங்களில் தாவி தேனெடுத்து பிழைப்பு நடத்தும் அப்பாவி இளைஞனாய்…
Read Moreதமிழகத்தில் இதுவரை 215 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையினரால் ரூ.215.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைமைசெயலகத்தில், நேற்று(மார்ச் 19) தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மது மகாஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை ஆணையர் கிர்லோஷ்குமார், அமலாக்கத் துறை சிறப்பு டிஜிபி கரன் சின்ஹா, காவல்துறை ஏடிஜிபி ராஜீவ்குமார், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மோகன், அமலாக்கத் துறை ஐஜி செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி ரூ.117.81 கோடி மதிப்பிலான தங்கம்,…
Read Moreதமிழில் இன்னொரு பேய்ப்படம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ளது ‘காதம்பரி’யின் தனித்துவம்.
தமிழில் இன்னொரு பேய்ப்படம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ளது ‘காதம்பரி’யின் தனித்துவம். மழை பெய்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என 5 பேர் காரில் பயணிக்கிறார்கள். ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியையொட்டி அவர்களின் கார் விபத்துக்குள்ளாகிறது. சற்று தூரத்தில் காட்டுக்குள் பரந்து விரிந்த வீடு ஒன்று தென்பட, மழைக்கு ஒதுங்குவதற்காக அந்த வீட்டுக்குள் செல்கிறார்கள். சென்றவர்களில் ஒவ்வொருவராக பலியாகிறார்கள். ஏன்? எதற்காக? அடுத்தடுத்து நகர்கிற காட்சிகள், பேய்ப்படங்களில் இதுவரை பார்க்காத வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளது படத்தின் தனித்துவம் என்றால் படத்தில் மொத்தமே 8 கதாபாத்திரங்கள் மட்டுமே என்பது சிறப்பு! விபத்தில் அடிபட்ட காதலியின் மீது காட்டும் பரிதாபம், உடன் வந்தவர்கள் பேயிடம் சிக்கி உயிருக்குப் போராடும்போது இயலாமையில் தவிப்பது என படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் நடித்திருக்கிற அருள்…
Read Moreஜெயக்குமாருக்கு தான் எப்பவுமே ஓட்டு போடுவோம்…என்ன காரணம்? ராயபுரம் மக்களிடம் எடுத்த சர்வேயில் கிடைத்த ரகசியம் இதோ
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றோம் . கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்தும், தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் வலம் வந்தும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஏழாவது முறையாக ஒரே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். கடந்த 6 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ஏழாவது முறையாக அவரே போட்டியிடுகிறார் எப்படி சாத்தியம் என்பது குறித்து பொதுமக்களிடம் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர்கள் சொன்ன பதில் இதோ உங்கள் பார்வைக்கு… 68 வயதான தங்கம் என்ற பெண்மணியிடம் ஏன் ஜெயக்குமாருக்கு ஓட்டு…
Read More