போட்றா புக்கிங்கை. NGK தெறிக்கும் முன்பதிவு

இந்த வாட்டி சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. தொடர்ந்து தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கத் தவற விட்டதால் இந்தமுறை அடிச்சித் தூக்க வேண்டும் என்ற வேட்கை அவரது வேகத்தில் தெரிகிறது. வேகமென்றால் படத்தின் ட்ரைலர் ப்ரோமோ எல்லாவற்றிலும் சூர்யா அவ்ளோ எனர்ஜியாக இருக்கிறார். செல்வராகவன் சூர்யா சாய்பல்லவி என இக்கூட்டணியே பலே கூட்டணியாக இருப்பதால் கோடம்பாக்கம் தாண்டி உலகம் எங்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. நேற்றே புக்கிங் ஓப்பனாகும் என்று ரசிகர்கள் தவங்கிடந்த நிலையில் இப்போது தான் புக்கிங் ஓப்பனாகியுள்ளது. ரசிகர்களும் வெறித்தனமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். எப்படியாவது இந்தப்படம் மூலமாக சூர்யா செல்வராகவன் இருவருக்கும் திருப்புமுனை கிடைச்சா சரி. அப்படியே எஸ். ஆர் பிரபுவும் நல்லாருக்கணும். ஆமா அவர் தானே தயாரிப்பாளர்

Read More

கொலைவெறியில் வரும் கொலைகாரன்

எப்படியும் ஹிட்டு கொடுத்தே ஆகணும் என்ற வேட்கையோடு இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏனென்றால் காளி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் அவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை. அதனாலே கொலைகாரனை பெரிதாக நம்பி இருக்கிறார். படத்தின் ட்ரைலர் ஸ்னீக்பீக் எல்லாம் பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பதால் படம் எப்படியும் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் விஜய் ஆண்டனி. அவரின் நம்பிக்கைக்கு உரமூட்டுவது போல படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பாப்டா தனஞ்செயன் கொத்தாக படத்தை ரேட் பேசி அள்ளிக்கொண்டார். அதனால் கொலைகாரன் எப்படியும் கொலவெறி ஹிட்டடிக்கும் என்பது கன்பார்ம். மேலும் படம் வெளியாகும் நாள் விடுமுறை தினமான ரம்ஜான் என்பதால் வசூலுக்குப் பஞ்சம் இருக்காது என்கிறார்கள். நல்லது நடக்கட்டும்.

Read More

லாரன்ஸ் இடத்தை நோக்கி எஸ்.ஜே சூர்யா

குழந்தைகள் விரும்பும் ஹீரோக்கள் தமிழ்சினிமாவில் மிகவும் குறைவு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என வெகுசிலர் தான் குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் காஞ்சனா சீரிஸ் படங்கள் மூலமாக லாரன்ஸும் இடம் பிடித்து விட்டார். அவரது படங்கள் தொடர்ந்து குழந்தைகளை ஈர்த்து வருகிறது. தற்போது அவர் இடத்தை நோக்கி வருவதற்கான முதல் கல்லைப் போட்டிருக்கிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல ரீச் ஆகியுள்ளது. எஸ்.ஜே சூர்யாவும், “திரையில் குழந்தைகள் என்னைக் கண்டு மகிழ்வதைப் பார்க்கும் போது உண்மையிலே பெரும் சந்தோஷமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார். அதனால் இனி அவர் குழந்தைகளை கவரும் விதமான படங்களில் அவ்வப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்த மான்ஸ்டர் படம் கூட இரண்டாம் பாகம் வந்தாலும் வரலாம். எப்படி…

Read More

எனக்குக் கல்யாணமா? – சிம்பு மறுப்பு!

சிம்புவின் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் பரவிவரும் நிலையில், சில நாள்களாக தனது தாயார் பார்த்துள்ள உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவின. அது குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். ‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள்…

Read More

மாநில கட்சி அந்தஸ்தை தேமுதிக, பாமக இழந்தது!

மக்களவை தேர்தலில் 8 சதவீதம் கூட வாக்குகளை பெற முடியாததால் தேமுதிக மற்றும் பாமகவின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தானது. தமிழ் திரைப்படத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். மக்கள் செல்வாக்கை பெற்ற அவர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கட்சி தொடங்கும்போதே, “நான் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி அமைப்பேன்” என்று விஜயகாந்த் கூறினார். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. புதிய கட்சி தொடங்கியதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். பின்னர் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை…

Read More

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ  வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக…

Read More

மே 30ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் உரிமை கோரியுள்ளார். 17ஆவது மக்களவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றுள்ளது. 16ஆவது மக்களவைக் கலைக்கப்பட்டதாக நேற்று (மே 25) குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக…

Read More

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!!

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியதாவது, “இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம்.…

Read More

இனி என் வழி சகல தரப்பும் விரும்பும் மான்ஸ்டர் வழி – எஸ். ஜே. சூர்யா அறிவிப்பு

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :- ‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகை யாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. புகழை அனைவருக்கும் சேர்க்க அவர்கள் தவறியதில்லை. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்பிற்கு ரூ.50/- கொடுத்து வேடிக்கைப் பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் சோலைவனமாக தெரிகிறது. நேற்று மக்களோடு…

Read More

’ஒத்த செருப்பு சைஸ் 7’ கதையின் கரு 15 வருடங்களுக்கு முன்பு தோன்றியது! – பார்த்திபன்

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தும் முயற்சியில் தொடர்ந்து இயங்கும் உலக நாயகன் கமல்ஹாசன், ஹாலிவுட் தரத்தில் தமிழ் சினிமாவிலும் படங்களை கொடுப்பது சாத்தியம் என்பதை நிரூபித்த இயக்குனர் ஷங்கர், திரைக்கதை வித்தகரும், பார்த்திபனின் குருநாதருமான பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பார்த்திபன்…

Read More