ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு. சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம். இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற மேட்டரை கையில் எடுத்துள்ள போஸ் வெங்கட்டின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சமூகக் கருத்துள்ள படத்தைத் தயாரிக்க முன்வந்த ஹசீருக்கும் வாழ்த்துகள். அன்பு கேரக்டரில் வரும் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நல்ல தேர்வு. விஷ்ணு ராமசாமியின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமே நாயகியின் கேரக்டர் தான். அதை…
Read MoreCategory: விமர்சனம்
மோசடி – விமர்சனம்!
2017-ஆம் ஆண்டு டிமானிடேசன் என்ற ஒன்று நாட்டை அதகளப்படுத்தியது. அந்த மேட்டரை கதையோடு கோர்த்து விட்டதில் மோசடியின் இயக்குநர் ட்ராஸடி இல்லா பயணத்தைத் தொடங்கி விட்டார். படத்தின் ஆரம்பக் காட்சிகள் சதுரங்கவேட்டை படத்தை கண்முன் கொண்டு வந்து காயப்படுத்தினாலும் நாயகன் போலீஸ்டேசனில் தான் மக்களை ஏமாற்றுவதற்கான காரணத்தைச் சொல்லும் இடம் ஆறுதலைத் தருகிறது. போகிற போக்கில் இதுவும் ஒருபடம் என்ற அலுப்பைத் தரும் விசயங்கள் படத்தில் இல்லாமல் இல்லை. அதே சமயம் வொர்த்தான சில விசயங்களும் படத்தில் இருக்கவே செய்கறது. முக்கியமாய் கருப்புப் பணத்திற்கு எதிராக நாயகன் க்ளைமாக்ஸில் சொல்லும் விசயங்கள் எல்லாம் யோசிக்கக் கூடியவை. நடிகர்களின் நடிப்பு உள்பட பின்னணி இசை, டப்பிங், சவுண்ட் எஃபெக்ட் போன்ற விசயங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கூடுமான வரை இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் படத்தைக் காப்பாற்றி…
Read Moreதேவி + 2- விமர்சனம்!
ரொம்ப நாட்களுக்குப் பிறகு சொல்லி அடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். குழந்தைகளை கொண்டாட வைக்கும் அளவில் ஒருபடம் வந்துவிட்டால் நிச்சயம் அப்படங்களை குடும்பங்களும் கொண்டாடும். தேவி படத்தில் தமன்னாவை பெண் பேய் வந்து ஆட்டும். தேவி+2-வில் பிரபுதேவாவை இரண்டு ஆண் பேய்கள் வந்து ஆட்டுகின்றன. அந்தப் பேய்களிடம் இருந்து தமன்னா எப்படி கணவனை மீட்டு எடுக்கிறார், பேய்கள் போடும் கான்ட்ராக்ட் என்னாச்சு என்பது தான் 2 மணி நேர தேவியாட்டம். நடிகர் பார்த்திபன் குரலில் தேவி முதல்பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் உள்ள தொடர்போடு கதை துவங்குகிறது. அதனால் முதல் காட்சிக்கு முன்பே நாம் படத்தோடு ஒன்றி விடுகிறோம். மொரீசியஸ்க்கு தமன்னாவோடு செல்லும் பிரபுதேவாவிற்கு அங்கு தான் இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அந்த இரண்டுப் பேய்களுக்கும் உள்ள மோட்டிவேஷன் ஒரு காதல் என்பது தான் கலாட்டா ஏரியா. தமன்னா பிரபுதேவாவின்…
Read Moreஎன் ஜி கே – விமர்சனம்!
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களை என்.ஜி.கே எந்தளவில் சந்தோஷப்படுத்தி இருக்கிறது? ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்கானிக் விவசாயம் செய்யும் சூர்யாவிற்கு நல்லது செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். செய்யும் நல்லவைகளை அதிகாரத்தில் இருந்தால் இன்னும் அதிகப்படுத்தலாம் என்று அரசியலுக்கு வர முனைகிறார் சூர்யா. அரசியலில் சூர்யா வாகை சூடினாரா? சோடை போனாரா? என்பது தான் என்.ஜி.கே. நெருப்பாக உழைத்திருக்கிறார் சூர்யா. படம் நெடுக எந்தப் பில்டப்பும் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அபார உழைப்பு தெரிகிறது கங்ராட்ஸ்! சாய்பல்லவி செய்யும் சின்ன சின்ன மேனரிசமும் நடுத்தர இல்லத்தரசிகளை கண் முன் கொண்டு வருகிறது. இளவரசு கதாபாத்திரம் ஒரு அதகள எம்.எல்.ஏவை நினைவுப்படுத்துகிறது. ரகுல் ப்ரீத்தி சிங் அழகாக இருக்கிறார். சில இடங்களில் தேவ் படத்தின் பாடிலாங்வேஜை காபிபேஸ்ட் பண்ணி இருக்கிறார். சூர்யா நண்பராக வரும் கேரக்டர், பொன்வண்ணன்…
Read Moreகீ – திரை விமர்சனம்
வெகு நாட்களாக கீ இல்லாமல் கிடப்பில் கிடந்த கீ படம் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை இந்தக் கீ முன்னாடி கொண்டுவரும் என்று பார்த்தால் பாவம் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாடி தள்ளி விட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தனிமனித சுதந்திரத்தை எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கும் என்பதையும், அந்த தொழிநுட்பத்தை அதிகமாக கத்துக்கிட்டவன் அதை வைத்து என்னவெல்லாம் பண்ணுவான் பண்ணலாம் என்ற பயமுறுத்தலும் தான் இப்படத்தின் கதை. விதை நெல்லாய் இருக்க வேண்டிய கதை உமிகளைப் போல போய்விட்டது. படத்தில் லாஜிக் என்பது ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. ஜீவா என்ற நல்ல நடிகர் படத்திற்கு பெரும் எனர்ஜியாக இருந்து மொத்த உழைபையும் கொடுத்திருக்கிறார். ஆனால் இயக்குநர் அவரின் உழைப்பை அநியாயத்திற்கு தன் சொதப்பல் திரைக்கதையால் வீணடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி கதாபாத்திரத்தில் துளி அளவு கூட ஈர்ப்பில்லை. ஆர்.ஜே…
Read Morek 13 திரை விமர்சனம்!
ஒரு அபார்ட்மென்ட்-ல் உடல் கட்டப்பட்டு இருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். இந்தச் சம்பவத்திற்கு யார் காரணம்? இப்படியான சூழலில் இருந்து அருள்நிதி எப்படித் தப்பித்தார் என்பதே படத்தின் திரில்லர் கதை. வெற்றிபெற்ற, பெறும் கலைகளின் ஆகப்பெரும் பலமே எளிமை தான். எளிமை இல்லாத கலை எளிய மனிதர்களை ஈர்ப்பதே இல்லை. அந்த வகையில் பெரும் குழப்பமான திரைக்கதையை K13-ல் கூடுமான வரையில் எளிமைப்படுத்தி தந்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத படம் தான். கொஞ்சமேனும் ஒரு திரில்லிங்கான அனுபவத்தைத் தருவதால் படத்தோடு ஒன்ற முடிகிறது. மெளனகுருவையும் இரவுக்கு ஆயிரம் கண்களையும் இணைத்து தன் நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் அருள்நிதி. கதாநாயகிக்கு அடிச்சி அந்தர் பன்ற அளவிற்கான கேரக்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். குற்றவுணர்ச்சியோடு மல்லுக்கட்டும் காட்சிகளில் ஹீரோயினோடு முட்டி…
Read Moreதேவராட்டம்- விமர்சனம்
மறுபடியும் முத்தையாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு சாதிப்படம் தான் தேவராட்டம். முதலில் இவரிடம் இருந்து மதுரையை சுற்றியுள்ள கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். வெட்டுவது, குத்துவது, குடிப்பது தவிர அங்குள்ளவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாதா? ஏன் எல்லாப்படங்களிலும் இப்படியே சித்தரிக்க வேண்டும். நிறைய விமர்சனங்களைப் பார்த்தால் இப்படத்தில் சாதி நெடி இல்லை என்று சொல்லி இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் படம் நெடுக சாதிய உள்குத்து இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தில் கெளதம் கார்த்தி அக்கா மகளின் தோழி ஒருவர் பாலியல் வன் புணர்வு செய்யப்படுவார். அந்தப்பெண்ணின் தாய் தகப்பன் போலீஸ் வரை சென்று நீதி கிடைக்காததால் கெளதம் கார்த்தியிடம் வந்து உதவி கேட்பார்கள். அவர்கள் கெளதம் கார்த்திக்கை அய்யா அய்யா என்றே அழைப்பார்கள். அதேபோல் பாலியல் வன்கொடுமை செய்யும் பையனும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது போன்ற குறியீடுகளை அந்தப்பையனின்…
Read Moreராக்கி – விமர்சனம்
நடிப்பு : ஸ்ரீகாந்த்,நாசர்,ஈஷான்யா,சயாஷி ஷின்டே,பிரம்மானந்தம் இயக்கம் : கே சி பொடியா கதை: தன் உயிரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்த எஜமானை கொன்றவர்களை பழிவாங்கும் நாயின் டபுள் ஆக்ஸன் கமர்சியல் மசாலா. ஸ்ரீகாந்த் மிகவும் நேர்மையான போலீஸ் ஆபிசர், அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் போது விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க் குட்டியைப் பார்த்து காப்பாற்றி, வீட்டுக்கு எடுத்து வந்து ராக்கி என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அவரது மனைவி ஈஷான்யாவும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியின் துறுதுறு தனத்தை கண்டா ஸ்ரீகாந்த் அதை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். துப்பறிவதில் எக்ஸ்பர்ட்டாகி விட்ட ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கிறார் ஸ்ரீகாந்த் . இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ சாயாஜி சிண்டேக்கும் ஸ்ரீகாந்துக்கும்…
Read More‘தாதா 87’ திரைப்பட விமர்சனம்
நாயகன் ஆனந்த் பாண்டி, படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் சாருஹாசன், சாதிகள் இருக்க கூடாது என்று நினைத்து வாழ்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டி போட்டுகிறார்கள். இந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜனகராஜ், தனது மகள் நாயகி ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஸ்ரீபல்லவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஆனந்த் பாண்டி. எப்படியாவது ஸ்ரீபல்லவியை காதலில் விழ வைக்க வேண்டும் என நினைத்து தினமும் பின் தொடர்கிறார். இந்த விஷயம் ஜனகராஜ்க்கு தெரிந்து, போலீசில் புகார் கொடுக்கிறார். இருந்தாலும், ஸ்ரீபல்லவியை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவி, ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்றுக்…
Read Moreசேரன் இயக்கிய திருமணம் – விமர்சனம்
ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா. அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும் காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன். குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு நேர்மையானவராக இருக்கிறார். இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன். இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி – காவ்யா திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி – காவ்யா திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன…
Read More
