கதை… நாயகன் – சந்தோஷ் சோபன்.. நாயகி – மானசா சென்னைக்கு வேலை தேடி வரும் நாயகன் சரியான வேலை கிடைக்காமல் தவிக்கிறார்.. இதேபோல நாயகியும் ஐடி துறையில் பணிபுரிகிறார்.. இருவருக்கும் போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர்.. இவர்களின் நட்பு தொடரும்போது இவரின் வாழ்க்கை தரம் உயர்கிறது.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.. அது என்ன..? அதில் இருந்து மீண்டார்களா.?என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் சந்தோஷ் சோபன்.. எதார்த்த நாயகன்.. அடடா நன்றாக நடிக்கிறாரே என சொல்ல வைக்கிறார் நாயகியாக மானசா வாரணாசி.. அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. சென்டிமென்ட் காட்சியில் அழ வைக்கிறார்.. யோகி பாபு.. குறைவான காட்சி என்றாலும் வழக்கம் போல டைனிங் காமெடி கொடுத்து கலக்கி இருக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள்……
Read MoreDREAM GIRL – விமர்சனம்
கதை… நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா.. இவர்கள் இருவருக்கும் கனவு தேசமான சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என்பதே இலட்சியம்.. நாயகனுக்கு இயக்குனராக வேண்டும் என்பது ஆசை.. நாயகிக்கோ திரைப்பட பின்னணி பாடகி ஆக வேண்டும் என்பது ஆசை.. இந்த சூழ்நிலையில் இருவருக்கும் காதல் மலர்கிறது.. இவர்களின் காதல் வாழ்க்கையில் கனவே பிரச்சனையாக அமைகிறது.. அப்படி என்னதான் அந்த கனவு.. என்ன பிரச்சனை என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் – ஜீவா.. நாயகி – ஹரிஷ்மிதா.. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் எதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.. இவர்களின் லவ் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.. தொழில்நுட்ப கலைஞர்கள்… இளமாறன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்கின்றன..…
Read Moreமேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!
மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது. இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது, “இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது. இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை…
Read Moreவிஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது
Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை…
Read Moreகரியரோட உச்சத்திற்கு சென்றாலும் மக்கள் பணி தான் அவருக்கு முக்கியம்..அரிசி பட விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் P. சண்முகம் – S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும் , விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும்…
Read More‘நாய் சேகர்’ புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார்
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
Read Moreஅலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!
’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி கூறியதாவது, “‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதை கேட்டதுமே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மிக சாதாரணமாக இந்தப் படத்தின் கதை கேட்க ஆரம்பித்து, பின்பு மறக்க முடியாத பயணமாக இது மாறியது. இந்தக் கதையில் கதாநாயகன் கதாபாத்திரம்…
Read Moreடொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி…
Read Moreஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்
கதை… நாயகன் – திரிகுன் நாயகி – ஸ்ரீஜித்தா கோஷ் இருவரும் காதலிக்கின்றனர் ஒருநாள் இவர்கள் உடலுறவு கொள்ளும் போது சில ரகசியங்களை உடைக்கிறார் நாயகன்.. தான் ஏற்கனவே தன்னைவிட மூத்த இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன் என்கிறார்.. இதை பெரிது படுத்தாத நாயகி ஒரு கட்டத்தில் திருமணமும் செய்து கொள்கிறார்.. அதன் பிறகு ஒரு நாள் மனைவியின் வீட்டிற்கு சென்ற பின்னர்தான் அங்கு இனியா மற்றும் ராதா இருப்பதை அறிந்து அதிர்ச்சியாக்கிறார் நாயகன்.. அப்படி என்றால் இதற்குப் பின்னணியில் இதற்கு முன்பு என்ன நடந்தது.? என்பதுதான் கதை.. நடிகர்கள்… Thrigun, Srijita Ghosh, Iniya, Radha, Thambi Ramaiah, Sathyan, Ravi Mariya, Aali, Jawa Sundaresan, Madhan Babu, Vijay TV Danasekar, Vinoth மச்சக்காரன் என்று நாயகன் திரிகுன்னை…
Read More– பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !!
ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி – பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !! டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர். இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெயர்சூட்டும் விழாவிலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் ஒரு தருணத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவு: “எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு…
Read More