விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’வில் இணைந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்!

  பிரபல பரதநாட்டியக் கலைஞர் ப்ரீத்தி முகுந்தன் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்! இந்திய சினிமாவில் தயாராகி வரும் எதிர்பார்ப்பு மிக்க விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முதல் பார்வை மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது திறமையான ப்ரீத்தி முகுந்தன் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர். தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்திலேயே ‘கண்ணப்பா’ போன்ற இந்திய சினிமாவின் பிரமாண்டமான பயணத்தில், முன்னணி நட்சத்திரங்களுடன் ப்ரீத்தி இணைந்திருப்பது பலரை வியக்க வைத்துள்ளது. ’கண்ணப்பா’ திரைப்படத்தில் ப்ரீத்தி நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கான நடிகர்கள் தேர்வு செயல்முறை கடுமையானதாக இருந்தது. கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தத்தைக் கண்டறிய பல தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒரு முழுமையான தேடலுக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர்கள் ப்ரீத்தி முகுந்தனை தேர்வு…

Read More

’பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்”. நடிகர் சுரேஷ் பேசியிருப்பதாவது, “இந்தப் படத்தை வெற்றிப் பெற வைத்த உங்களுக்கு நன்றி. வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”. நடிகை பிரார்த்தனா, “இந்தப் படத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு…

Read More

ஸ்ரீகாந்த் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடியுள்ள புதிய அசத்தல் ஆல்பம்

தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் தனது அடுத்த ஆல்பத்திற்காக ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தேசிய விருது பெற்ற ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’, அஜித் குமார்…

Read More

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

  இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் ‘ஷேர் குல் கயே’ மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார் இந்தியாவின் டான்ஸ் ஐகானான சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் அவரது வரவிருக்கும் படமான ‘ஃபைட்டர்’ படத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டது. ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) என்ற இந்த பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆர்ப்பரிக்க செய்கிறது. இந்த பாடலுக்கு ஹிருத்திக் ரோஷனைத் தவிர வேறு யாரும் ஆட முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடனமாடி உள்ளார். மேலும் அவருக்கென்ற அடையாளமாக மாறும் கடினமாக டான்ஸ் மூவ்ஸ்களை எளிமையாக மாற்றுகிறார். அவரது ஈடு இணையற்ற நடனத் திறமைக்காகப் புகழ் பெற்ற ஹிருத்திக் ரோஷன், ‘ஷேர் குல் கயே’ பாடலின் மூலம் மீண்டும்…

Read More

‘தி ரஜினி இன் மீ’ [The Rajini In Me] நூல் வெளியீட்டு விழா

  அம்பிகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு அசாதாரணமான கதை. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) ஆலோசனைக்கான பிரிவில்(Counselling) பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கத்தில் (SANA) தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார், அங்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு உதவுவதிலும் அவரது ஆர்வம் இருந்தது. இந்த முயற்சிக்கான அவருடைய அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது. அம்பிகை ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் கூட. இருப்பினும், அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பமாக மல்டிபிள் ஸ்களீரோசிஸ்(multiple sclerosis) எனும் நோய் தாக்கி அம்பிகாவை சக்கர நாற்காலியில் அமர வைத்தது. ஆயினும்கூட, துன்பங்களிடம் சரணடைவதற்குப் பதிலாக, அவர் தன் உறுதியைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருடைய தனிப்பட்ட சவால்களை மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகவும் மாற்றினார். அவரது…

Read More

”இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-க்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார்” – டிமாண்டி காலனி 2 டிரைலர் வெளியீட்டில் அஜய்ஞானமுத்து பேச்சு

  பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர் படமாக, மெகா ப்ளாக்பஸ்டர் டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’ . விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது… பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் என்ற…

Read More

“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

  ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில்… தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது… இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக்…

Read More

”சலார் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும்” – பிரபாஸ்

  ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. சமீபத்திய நேர்காணலில், பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் படம் குறித்துக் கூறுகையில் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச்சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும் மேலும் முதல்முறையாக ரசிகர்கள் படத்தில் ஒரு கதாப்பாத்திரமாக என்னைப் பார்ப்பார்கள் என்றார்.” டிசம்பர் 22, 2023 அன்று படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ளதால், முன்னணி நடிகர் பிரபாஸிடம் சமீபத்திய நேர்காணலில் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் கதாபாத்திரத்திர மாற்றத்திற்காக அவரது உழைப்பு…

Read More

ஆத்மீகா பட விமர்சனம்

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ஆத்மிகா”.  மெடிக்கல் மாபியாவின் பின்னணியில் விஞ்ஞான மருத்துவம் எப்படியெல்லாம் தவறான முறையில் கையாளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார்ர்கள் என்கின்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கவிடுகிறது “ஆத்மிகா”. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நாயகனான ஆனந்த் நாக் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜீவா ரவி, பிர்லா போஸ், வினிதா, பேபி அக்‌ஷயா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வெறும் துணைக் கதாபாத்திரமாக மட்டுமில்லாமல், சில சவாலான கதாபாத்திரங்களை ஏற்று துணிச்சலாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் தாமோதரன் செல்வகுமார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இருந்தாலும் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் குறையில்லை. விஞ்ஞான மருத்துவம் தவறானவர்களின் கைகளில்…

Read More

”LIC தலைப்பு என்னுடையது விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பேன் ”.- இயக்குனர் SS குமரன்.

மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த…

Read More